வியாழன், 4 நவம்பர், 2010

ரகசிய சிநேகிதன்... (2 )

தோழியின் விடுதிக்கு சென்று காத்திருக்கையில் ஒரு குறுஞ்செய்தி..அலைபேசியில்..HI என்று வந்திருந்தது...கண்டிப்பாக இது ஆல்டோ தேவதையாகத்தான் இருக்க வேண்டும் என கணித்து விட்டேன்... HELLO ALTO ANGELஎன பதிலனுப்பினேன்.. இரண்டு SMILEYக்களுடன் எப்டி கண்டு பிடிச்சே நாந்தான்னு என்று ஒரு ஆச்சிரிய குறி வேறு?? :) :) இந்த நிமிடம் எனது அலைபேசி உனக்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறதென நினைக்கிறேன் என பதிலிட்டேன்...

பொய் சொல்கிறாய் நீ...உனக்கு நிறைய தோழிகள் இருக்க வேண்டும்...இல்லையென்றால் எப்படி ஒரு பெண்ணிடத்தில் அதுவும் முன்பின் அறிமுகம் இல்லா பெண்ணிடம் இரண்டு நிமிடங்களில் அலைபேசி என்னை பரிமாற்ற முடியும் என்றாள்?? :) :) இந்த கேள்வியில் LOGIC இல்லை என்று சொல்லிவிட்டு எனது பெயரை அனுப்பினேன்...

இரண்டு நிமிடங்கள் கழித்து அவளிடத்திலிருந்து அழைப்பு...நிர்மலா என்றாள். நிம்மி என்று அழைப்பேன் என்றேன்.. :) :) சிரித்து கொண்டே பொதுவாக அவளது குடும்ப வட்டத்தில் அப்படித்தான் எல்லோரும் அழைப்பதா தெரிவித்தாள்....சரி அப்போ நிம்மு ஓகே வா ?? என்றேன்?? இப்படி யாரும் அழைத்ததில்லை என்றாள்... ஏனோ அவளிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது அதிக படபடப்பு மனதிலும் உடலிலும்.....முதல் காதல் தோன்றும் பருவ வயதில் ஏற்ப்படும் நிலையில் நானிருப்பதாக
அவளிடம் கூற....பொய்...... பொய் என்று அவள் சிரிக்க...அலைபேசி வழியே கன்னத்தில் அறைந்தது அவளின் வெட்கம்.....

எனக்கு சிறிது ஆச்சிரியம்தான்...அறிமுகமே ஒரு பெண்ணிடம் இவ்வளவு சகஜமாக பேச முடியுமா என்று.....எங்க இருக்கீங்க என்றேன்?? கார்ல இருக்கேன் என்றாள்.
நான் சிறிது மௌனம் காக்க...அவர் குழந்தைங்கள அழைசிண்டு SWEETS N ICE CREAM வாங்க போயிருக்கார் என்றாள்..பின்பு சிறிது நேரம் பரஸ்பர அறிமுகப் படலம் ஓடியது....பின்பு அழைப்பு அணைக்கப்பட்டது...அவர் வருகிறார் என்ற ஒற்றை சொல்லோடு... சிறிது நேரம் கழித்து ஒரு குறுஞ்செய்தி...எக்காரணம் கொண்டும் தன்னை அழைக்கவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ கூடாது...நான் சொல்லும் வரை என்றிருந்தது.

தோழியும் தன்னுடைய LUGGAGE உடன் வரவேர்ப்பரைக்கு வந்திருந்தாள்...சென்ட்ரல் சென்றோம் ஆட்டோவில்..என்னடா வழக்கத்துக்கு மாற ஒரு பிரகாசம் தெரியுதே மூஞ்சில என்றாள்...நீதான் சென்னைல இருந்து கேளம்ப்ரேல...அதான் என்றேன்...சில கிள்ளல்களும் சில அடிகளும் வாங்கிக் கொண்டேன்... இரண்டாம் வகுப்பு ஏ.சீ யில் அவளை ஏற்றி விட்டு அவளின் LUGGAGEகளை ஒழுங்கு படித்து வைத்து விட்டு சுற்றிலும் பார்த்தால் எல்லாம் வட இந்திய முகங்கள்....பின்பு அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்....சரி நா கிளம்றேன் என்றேன்...சில நொடிகள் பேசவில்லை...அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்...என்ன என்றாள்...ஒரு முத்தம் வேண்டும் என்றேன்... :( அல்ப்பம்டா நீ என்றாள் மென்புன்னகயோடு...கட்டிக் கொண்டு உதடுகள் சுவைத்தோம்...பக்கத்தில் அமர்ந்திருந்த வட இந்தியக் குடும்பம் அதீத ஆர்வத்தோடு எங்களை கவனித்தது.... ரயில் கிளம்பும் போது அடிக்கடி புனே வந்துட்டு போடா என்றாள்...சரி என்றேன்...சிறிது விழி நீர் அவள் விழிகளில்...

இரவு வீடு திரும்பியிருந்த பொழுது நிறைய எதிர்பார்ப்பு மனதினுள்...எப்போ அழைப்பு வரும் அவளிடம்(நிம்மு) இருந்து என்று?? இரவு ஒன்பதரை மணிக்கு நிம்முவிடம் இருந்து அழைப்பு... சிறிது பயத்தோடுதான் எடுத்தேன் அலைபேசியை.....நல்ல வேளை அவள்தான்....ஹாய் நிம்மு என்றேன்...சாப்டீங்கள வீடு வேலை முடிசிடீங்க்ளா போன்ற பேச்சுக்கள் தாண்டி வந்த பொழுது அவள் கேட்டாள் எதற்க்காக உனது அலைபேசி என்னை எனக்கு கொடுத்தாய் என்று...சிலரை பார்த்த உடன் அவர்களிடம் பேசத் தோன்றும்...அவ்வகை சேர்ந்த பெண் நீங்கள் ...அதனால்தான் என்றேன்...எதற்காக என்னுடைய எண்ணை குறித்து கொண்டீர்கள் என்ற பொழுது ...தெரியவில்லை என்றாள்...நாளை காலை காபி டே வில் சந்திக்கலாமா?? உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்றேன்.

இருபது நிமிடங்களுக்கு முன்னமே COFFEE DAY சென்று காத்திருந்தேன். நீல நிற சல்வார் கமீஸில் நிம்மு. அழகா இருக்கிறீங்க என்றேன். சிரித்துக்கொண்டே வாங்க போங்கலாம் வேண்டாம் பேர் சொல்லி கூப்டுங்கோ..நா சின்ன பொண்ணு என்றாள்.. :) ஆன்ட்டி ய பொண்ணுன்னு கூப்டா சமுதாயம் என்னை உதைக்கும் என்றேன்...சின்ன குழந்தைகளுக்கு வேணா நா ஆன்ட்டியா இருந்துட்டு போறேன்....உங்களை மாதிரி வளந்தவாளுக்கேலாம் இல்லை என்றாள்... :)

கல்லூரி முடித்த உடன் தனக்கு திருமணம் முடிந்து விட்டதெனவும்...வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் சொல்லியது நிம்மு...கல்லூரி முடித்த வருடத்தை கணக்கில் கொண்டு பார்த்தல் நிம்மு என்னை விட இரண்டு வயது சிறியவள்..சிரித்துக் கொண்டே அவளிடம் இதை சொன்ன பொழுது அவ்வளவு சந்தோசம் அவளுக்கு...உங்களை அங்கிள் நு கூப்டலாமா என்றாள் :) :) எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளை தவிர்த்து மற்றவருக்கேலாம் நான் அங்கிள் இல்லை என்றதும்...சப்தம் இட்டு சிரித்தோம்... சரி அப்போ அண்ணான்னு கூபிட்றேனு சொன்னாள்....LOGIC ஒத்து வராதுமா என்றேன் :) :) என்னவரையே நா அப்டிதான் கூபிட்றேன் என்றாள் கண் சிமிட்டி...அய்யோ எனக்கு தெரியாம போச்சே...சரி சரி....அப்போ அப்டி கூப்ட்டா மட்டுமே சந்தோசம் என்றேன்.... நிறைய சிரித்துக் கொண்டே இருந்தோம் இருவரும்....

எட்டு வயதில் ஒரு பையனும், ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் அவர்களுக்கு...அவளின் கணவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர்....வேலைக்கு செல்ல வேண்டும் ...அப்புறம் என்னவனை கண்டு பிடித்து அவனோடு பழக வேண்டும்...அவனுடன் இறுக்கி கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிள்லில் பறக்க வேண்டும் என்று நிறையா ஆசைகள் வைத்திருந்தேன் கல்லூரி காலத்தில்..ஆனா ஆண்களை நிமிர்ந்து பார்க்கவே பயமா இருக்கும் அப்போ.....படித்து முடித்த உடனே திருமணம் ஆகிவிட்டது ...இவர் அப்போவே CAR வைத்திருந்தார், ஆக அந்த கனவெல்லாம் கனவாவே போச்சு எனச் சிரித்தாள் ..ஆனா ....ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..என்றாள். காபியும் கேக்குகளும் சாப்பிட்டு முடித்திருந்தோம். விடைபெற மனதில்லை ...யோசித்துக் கொண்டே கேட்டேன் ஒரு ரைட் போலாமா நிம்மு என்று?? வேண்டாம் என்று சொல்லி ஆட்டோவில் ஏறி கிளம்பி விட்டாள்...! ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று தோணவே பக்கத்தில் உள்ள கடைக்கு போக எத்தனிக்கும் போது ஆட்டோ திரும்ப வந்து என்னருகில் நின்றது :) சம்பல் பள்ளத்தாக்கு விடுதலை வீரர்கள் போல தன்னுடைய துப்படாவினால் முகம் மறைத்திருந்தாள் நிம்மு...கால் மெட்டிகளை பத்திரமாக கைப்பையில் வைத்திருந்தாள். போகலாம் என்றாள்.

அவள் கண்களிலே அவ்ளோ ஒரு சந்தோசம். கிளப்பினேன் எனது பைக்கை. கோடம்பாக்கம் பாலம் வரை எங்கள் இருவருக்குமிடையே சிறிது இடைவெளி இருந்தது வண்டியில். ராதா கிருஷ்ணன் சாலையை தொட்ட பொழுது பறக்க வைத்தேன் வண்டியை...இருக்க கட்டிக் கொண்டு தோள்களில் முகம் புதைத்துக் கொண்டது நிம்மு...
அவ்வளவு வேகம்.நெடிய சென்னை சாலையில் பறந்து கொண்டிருக்கும் காதலர்களின் வாகனகளில் ஒன்றானது எனது வாகனமும்........ பயத்திலும் பரவசத்திலும் மிக மிக இறுக்கமாக எனை பற்றிக் கொண்டதால் நிம்முவின் நகங்கள் அழுந்தக் கீறி விட்டது எனக்கு...வண்டியை எங்கும் நிறுத்தவில்லை..தென் சென்னை முழுவதும் ஒரு சுற்று சுற்றி பின்பு நிம்மியின் வீடருகில் சென்ற பொழுது வண்டியை நிறுத்த சொல்லி ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டது நிம்மு...துப்பட்டாவை தோள்களில் போர்த்திக் கொண்டது...உயர்தட்டு அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி பவ்யமாக அவளுக்கு வணக்கம் வைக்க, வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தினேன்.

வீடு ரொம்ப அழகாக இருந்தது. காபி கொடுத்தது நிம்மு. குடித்து விட்டு கிளம்பும் வரை பேச தோன்றவில்லை. அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தோம் புன்னகையோடு. சரி கிளம்பறேன் என்றேன். சரி என்ற நிம்மு என்னருகில் வந்து எனை மெலிதாக அனைத்துக் கொண்டது. கன்னங்களில் முத்தம் வைத்தது....இது என்ன உறவென்றேன். FRIENDSHIP என்றது நிம்மு. சிரித்து விடை பெற்றேன் நிம்முவிடம். கண்டிப்பாக நிம்முவின் வாழ்வில் மறக்க முடியா நாளாக இது இருக்கும் என்று எனக்கு தோன்றியது.

வண்டியை கிளப்பி வெளியே வரும்பொழுது வாயிற் காவலாளி என்னை வித்தியாசமாக பார்ப்பது போல இருந்தது....வானம் இருட்டி விட்டிருந்தது...லேசாக தூறல் விட்டுக் கொண்டிருந்தது... ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாக இருக்கும் என தோணுது .

சனி, 23 அக்டோபர், 2010

திரவம்.............

அதிகப் படியான மஞ்சள் நிறத்திலும், சில நேரங்களில் சிகப்புமாக....
மூத்திரம் என்றென்ன வேண்டாம்......
இதுவே சூத்திரம் லௌகிக வாழ்வின் உச்சத்தை தொட.....
அடி மனதின் ஆத்திரமும் அபிலாஷைகளும் ஊற்றெடுக்க....
பிரித்து பார்க்க தெரிவதில்லை தங்கைக்கும் தாரத்திர்க்கும் உள்ள
வித்தியாசத்தை,சமயங்களில் .......
திரவமேற்ற..திரவமேற்ற...புதிதாய் முளைக்கின்றன சிறகுகள்....
முதுகின் பின்னால்........
சுற்றியிருப்பதெல்லாம் பதர்களாக....நான் என்ற ஒன்று மட்டும்
யோகியாக .....
வெளிப்படும் வார்த்தைகளும் உச்சரிப்பும்..என்னையே எனக்கு
அறிமுகப்படுத்துகிறது...கவியாக......கடவுளாக......
தளும்பி எழும் உணர்வுகளை தடவிக் கொடுத்து கோர்க்கிறேன்.
வார்த்தைகளாக......
தடையற்று நீண்டு கொண்டே போகிறது(வார்த்தைகள்)......
கவிதையாக..அல்லது கசடாக.......
(கண்டிப்பா கவிதையல்ல.........யாருமற்ற மொட்டை மாடி டாஸ்மாக்கில் தடுமாறிக் கொண்டே
வலையில் ஏற்றியது....அலைபேசியின் ஊடாக)

செவ்வாய், 19 அக்டோபர், 2010

ரகசிய சிநேகிதன்...! :(

நிறைய இடங்களில் தாழ்ந்தசாதி என்ற காரணத்தால் நடந்த மறக்க நினைக்கும் சில நிகழ்வுகளுக்கு முடிவாக நினைத்தது, ஒரு ஆதிக்க சாதி பெண்ணை காதலித்து மணக்க வேண்டும் என்பதே... குறிப்பாக தென்னகத்தில் ஆதிக்கம் செய்த தேவரினத்தில், அல்லது நாயக்கர் இனத்தில், அல்லது சுத்தமான ஆரிய இனப் பெண்ணை(ஐயர்)
காதலிக்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்திருந்தேன் பள்ளிக் காலத்தில்...


என்னை பொறுத்த வரை ஒரு இனத்தை வெல்வதாக நினைத்தால் அந்த இனத்து பெண்ணின் இதயத்தை வெல்ல வேண்டும். பெண் மாபெரும் சக்தி , தன் இனத்தின் சந்ததியை மற்றும் ஜீன்களை பத்திரமாக கடத்தி செல்பவள் என்ற காரணத்தினாலேயே கற்பு நெறி சாதி பாகுபாடு தோன்றியிருக்க வேண்டும்....முக்கியமாக பெண் அடிமை தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் பள்ளிக் காலத்தில் செய்த அடாவடித்தனத்தினால் எந்தப் பெண்ணுமே ஏறெடுத்து பார்க்கவில்லை.....அதன் பிறகு கடந்து போனதெல்லாம் ஆதிக்க சாதிப் பெண்கள்தான்...ஆனால் தேவரின பெண்ணும் ஆரியப் இனப் பெண்களும் மட்டும் மாட்டவே இல்லை..கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வரை.. :)
சரி, இந்த நிராசையை ஒரு அழகான புனைவாக்கதான் வேண்டும் என்றெண்ணிக் கொண்டிருக்கும் பொழுது மிக எதிர்பாரா தருணத்தில்தான் சந்தித்தேன் நிம்முவை.....

அடுத்த நொடி நமக்கு ஆயிரம் ஆச்சிரியங்களை ஒளித்து வைத்திருக்கும் என்பதெல்லாம் அக்கணம் அழுந்த உணர்ந்தேன்.....

போன வாரத்திற்கு முந்தய சனிக் கிழமை தோழி ஒருத்தி வெளி மாநிலத்திற்கு மாறுதல் வந்ததால் சென்னையில் தங்கியிருந்த விடுதியில் இருந்து காலி செய்து, அவளை ரயில் ஏற்றி விட வேண்டிய வேலை எனக்கு ....



தோழி தங்கியிருந்த விடுதிக்கு செல்ல கிளம்பினேன்...மாலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் சற்று இருந்தது. கோடம்பாக்கம் சிக்னலில் சிகப்பு விளக்கு விழுந்த பொழுது நான் சிக்னல் அருகில் வந்திருந்தேன், என் முன்னே ஒரு சிற்றூந்து நிற்கும் அளவிற்கு இடம் இருந்தது..பின்னால் இருந்து யாரோ ஹாரன் அடிக்க , லேசாக திரும்பி பார்க்க, ஒரு நீல நிற மாருதி ஆல்டோ நின்றிருந்தது. பச்சை விளக்கு விழுந்தால் எல்லாம் கிளம்ப போகிறோம்.. இதிலென்ன அவசரம் என்று நினைத்ததால் நான் கவனத்தில் கொள்ளவில்லை அந்த ஒலிப்பானை....

ஓரிரு நிமிடங்களில் அவர்களுக்கு முன் சென்று நிற்க இடம் கிடைக்க அந்த கார் எனை தாண்டி சென்று நின்றது. அப்பொழுதுதான் கவனித்தேன்..பின் சீட்டில் இரு குழந்தைகள். முன் சீட்டில் ஓட்டுனர் இருக்கையில் ஒரு பெண். பக்கத்து இருக்கையில் அவளது கணவர். குழந்தைகள் தாவி குதித்து விளையாடிக் கொண்டிருக்க, அந்த ஆண் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு நேரம் அந்த பெண்ணை சரியாய் கவனிக்கவில்லை. இப்பொழுதான் பார்க்க ஆரம்பித்தேன். சுண்டியிழுக்கும் அழகு. (SKIN TONE)என சொல்லப் படுகிற தோலின் வழமை அவர்களின் இனத்தை பறை சாற்றியது. அப்பெண் அணிந்திருந்த டாப்ஸ் கண்டிப்பாக ஜீன்ஸ் போட்டால் மட்டுமே அணியக் கூடியது. கூலிங் க்ளாஸ் மாட்டியிருந்தாள். முப்பதுகளின் தொடக்கத்தில் அவள் இருக்க கூடும். நாற்ப்பதின் மத்தியில் அவளின் கணவர்.

ஓரிரு முறை பார்த்து விட்டு திரும்பினாலும் மறுபடியும் பார்க்க தோன்றவே, அவளின் கார் ரியர் வியு கண்ணாடி வழியே அவளை பார்த்தேன்....இப்பொழுது அவள் என்னை பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன்...கண்டிப்பாக அதிகம் சந்தோஷ படுவேன் என்றேன்னிக்கொண்ட போது ஒரு மென்புன்னகையில் நான். கூலிங் க்ளாஸ் அணிதிருப்பதால் அவள் எங்கே பார்க்கிறாள் என்ற கணிப்பு எனக்கில்லை. அதனால்தான் பார்த்து கொண்டிருந்தேன் அவளை. திடிரென்று குளிர் கண்ணாடியை லேசாக இறக்கி விட்டு தமிழ் சினிமா ஹீரோயின் போல ரியர் வியு கண்ணாடி வழியே எனை பார்த்தாள்..அப்பொழுதுதான் தெரியும் அவளும் எனைத்தான் அவ்வளவு நேரம் பார்த்திருக்கிறாள் என்று....... எதிர்பார்ப்பது நடந்தால் ஒரு சந்தோசம் தோன்றுமே...அப்பொழுது நமையரியா ஒரு புன்னகை முகத்தில் படர்வதை உங்களால் தடுக்க முடியாது...அந்த நிலையில் நான். குறும்பாக, எச்சில் தொட்டு புருவத்தை சரி செய்து கொண்டு சட்டை காலரை சரி செய்து விளம்பர பட ஆண்கள் போல கை கட்டி நின்று அவளை பார்க்க, எனது செய்கை அவளுக்கு மேலும் சிரிப்பை வரவழைக்க... சற்று சிரித்தே விட்டாள்...அவள் கணவர் அலைபேசியில் இருந்து கவனம் திருப்பி என்ன என்று கேட்க ஏதோ சொன்னாள்..அவர் மறுபடியும் பேச்சை தொடர்ந்தார்.

இப்பொழுது சிக்னலில் நாற்பது வினாடிகள் மீதமிருக்க...இப்படியே அந்த அழகியை விட்டு செல்ல மனமில்லை....எனது கைகளை காதிற்கு கொண்டு சென்று அலை பேசியில் பேசுவது போல் பாவனை காட்டி..அலை பேசி என்னை கேட்டேன்..! ஒரு பெண்ணுக்கு நாம் பிடித்தவராக இரண்டு விஷயம் கண்டிப்பாக தேவை. நல்ல புன்னகையும் உடல் மொழியும். என்ன தோன்றியதோ டாஸ் பானேல் மீதிருந்த அவள் அலை பேசியை எடுத்துக் கொண்டு எனை பார்த்தாள். என் நெஞ்சுக்கு நேராக இரு கைகளை கொண்டு சென்று விரல்கள் மடக்கி நான் எண்களை தெரிவித்து முடித்த பொழுது சிக்னலில் பச்சை. சீறி சென்று விட்டது ஆல்டோ. நான் வலப் பக்கம் திரும்பி விட்டேன். மனதென்னவோ ஆல்டோவோடு சென்று விட்ட மாதிரி திடிரென்று ஒரு வெறுமை வந்து சேர்ந்தது மனதில். :(

திங்கள், 4 அக்டோபர், 2010

தேவதை காதலிகள்...........!

கடந்து போனது பல பெண்களை...நிறைய பெண்களை காத்திருக்க வைத்து, சில பெண்களுக்கு மட்டும் காத்திருந்து என்று காதலித்து கதகளி ஆடினாலும் அடங்கவில்லை காதலுணர்வு.........இன்னும் இருபதில் இருப்பதைப் போலவே இருக்கிறது மனது...அதனாலேயே பதின்ம வயது பள்ளிப் பெண்களைப் பார்த்தாலும் பல்லிளித்துக் கொண்டு வெளியேற முற்படுகிறது காதல்...மனதை விட்டு வெளியில்.....

கே கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் முன்புறம் உள்ள தேநீர் விடுதிக்கு செல்லும் பொழுதெல்லாம் மனது இறகு கட்டிக் கொண்டு பள்ளி நாட்களுக்கு கூட்டிச் சென்று விடும்............ஐந்தாம் வகுப்பு படிக்கும் வாண்டு ஒன்று வந்து WAY PLEASE அங்கிள் என்று சொல்லும்பொழுதே எதார்த்தத்திற்கு வருவேன்....ஆனாலும் மனதில் அந்த சந்தோசம் வெகு நேரம் தங்கி நிற்கும்...

ஆனாலும் இப்பொழுதெல்லாம் சில தேவதைகளை துரத்த ஆரம்பித்திருக்கிறேன்......தேவதைகளை புரிந்து கொள்ள, அவர்களின் காதலை பெற பெரும் முயற்சி எடுக்கிறேன்.....ஆனாலும் சிறு குறுநகையுடன் என்னை நிராகரித்து விடுகிறார்கள் தேவதைகள்.....நிராகரித்துவிட்டால் கூட பரவா இல்லை......தங்களுக்கு பிடித்தவருடன் கண் முன்னே வலம் வந்து கொன்று எறிகிறார்கள்........

இது எனக்கு மிகவும் கஷ்டமான விஷயமாக படுகிறது....பிடித்து விட்டால் மயக்கி வீழ்த்தும் வரை அடங்குவதில்லை....வீழ்த்தி பழகிய பின்பு அது ஒரு தனி கலை போலவே ஆகி விட்டது.......இருபத்து ஐந்து வயதில் திருமணம் செய்து குழந்தைகளுடன் உள்ள நண்பர்களனைவரும் எரிச்சலாகவும் பொறாமையாகவும் பார்க்கிறார்கள்...

ஆனால் இப்பொழுது துரத்தும் தேவைதகளை புரிந்து கொள்வது மிக கடினமாக இருக்கிறது....மிருத்திக்காவும் இசெபெல்லாவும்...எனக் கண்டதும் ஒரு மந்தகாச புன்னகையை வீசுவார்கள்... சமயங்களில் மிருத்திகா கைகள் விரித்து அனைத்துக் கொள்வாள் எனைக் கண்டதும்...இசெபெல் எனைப் பார்த்ததும் புன்னகை சிந்தி பின்பு சிறு வெட்கம் சிந்துவாள்...

ஆனால் இவர்களை கவர ஒரே சிறந்த வழி அவர்களுக்கு பிடித்த சாக்லேட்டுகள் மற்றும் விஜய் பட பாடல்கள்...இரண்டுமே எனக்கு பிடிக்காதென்றாலும் வேறு வழி இல்லையாதலால்... காதலுக்கு மரியாதை செய்வதற்காக அவர்கள் விருப்பதிர்க்கேர்ப்ப வளைந்து போகிறேன்... பாடல்களுக்கு அவர்கள் போடும் ஆட்டத்திற்கு நான் அடிமை. ஆனால் இசபெல்லுக்கு நான் மிருத்திக்காவை காதலிப்பதும், மிருத்திக்காவிர்க்கு நான் இசபெல்லை காதலிப்பதும் இன்று வரை தெரியாது....

தெரிந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது..! :( :(
இருவருக்கும் என்னை பிடிக்க வைத்திருக்கிறேன்...

மிருத்திகா என் நண்பரின் இரு வயது குழந்தை. இசபெல் இன்னொரு நண்பனின் ஒன்றரை வயது குழந்தை. :) :)
குழந்தைகள் வரம். அதில் பெண் குழந்தைகள், கிடைப்பதர்க்கரிய வரம்......
எனக்கு திருமணம் ஆனால் பெண் குழந்தைகளுக்கு தகப்பனாகவே விரும்புகிறேன்.

ஏனென்றால் நான் பெண்களை நேசிக்கிறேன்...மிக மிக அதிகமாக..! :) :)

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

மனங்களை(மலர்களை) கொன்றவன்(கொண்டவன்)!

நண்பன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்..! அதில் சில உரலிகள் இணைக்கப்பட்டிருந்தது..! பார்த்துவிட்டு பதில் போடும்படி சொல்லியிருந்தான்...
உரலிகளை சொடுக்கி பார்த்த பொழுது அதிர்வின் விளிம்பிற்கு சென்று மீண்டேன்...அந்தரங்கமான பொழுதினில் காதலர்கள் அல்லது கணவன் மனைவி தங்களுடைய அலைபேசியில் உள்ள படமெடுக்கும் கருவி கொண்டு தங்களையும் அவர்கள் உறவு கொள்வதையும் படம் பிடித்திருக்கிறார்கள்...அதில் ஒரு காதலி பாத்துட்டு டெலிட் பன்னிருடா என்று அன்பொழுக கேட்டுகொள்கிறாள்....அனைத்தும் தங்க தமிழ் தமிழச்சிகளும் தமிழ் மகன்களும்தான்..

பரஸ்பர நம்பிக்கையுடன் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டிருப்பவர்கள் அவர்கள் ...அவர்களில் யாரும் பொருப்பாகமாடார்கள் அந்த படகாட்சி இணையத்தில் வந்ததற்கு...பின்பு எப்படி என்பர்வகளுக்கு....மின் சாதன பொருட்கள் எப்பொழுதும் நீண்டநாள் உழைக்கும் தன்மை கொண்டதில்லை...அப்படி பிரச்சினைகள் வரும்பொழுது அலைபேசிகள் வேறொரு கைகளுக்கு போகிறது குறைபாடுகளை சரிசெய்ய...அப்படி செல்லுமிடத்தில் RETRIVE என்ற சாப்ட்வேரை கொண்டு அலைபேசிகளில் அழிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்யப்பட்டு பின்பு இணையத்தில் உலவவிட படுகிறது...இதில் வருத்தமான விஷயம் சமந்தபட்டவருக்கே இந்த விஷயம் தெரியுமா என்பதுதான்...தெரிய வரும்பொழுது எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைக்கும்பொழுது நிறைய அதிர்வுகளை கொள்கிறது மனம்....

மனங்களை கொன்றாலும் அது கொலைக்கு சமம் தான்....இறந்த மனம் கொண்டவர்கள் நடைபிணம் என்று கூறிகொள்கிரார்கள்...கொள்ளபடுகிறார்கள்..

பெரிதாக கவனம் கலைக்கும் அழகு கிடையாது அவள்...ஆனால் உற்று நோக்கினால் கண்களில் குறும்புத்தனத்தை தாங்கி செல்பவள் அவள்...திரைப்படம் போல இருந்தாலும் உண்மையாக நடந்தது...அவளுக்கு சிறு வயதிலேயே தாய்மாமன் ஒருவனை பேசி வைத்திருந்திருக்கிறார்கள்...அவன் அவள் மேல் மிக மிக அக்கறையாக இருந்தான்...அவளை எங்கும் வெளியில் செல்ல விடுவதில்லை...கல்லூரி விட்டால் வீடு வீடு விட்டால் கல்லூரி என்ற வட்டத்தினுள்லையே தான் சுற்றி வந்தாள்....என் கண்களில் சிக்கும்வரை.....

வீட்டிலும் பெரிதாக அவளிடம் அக்கறை காட்டப்படவில்லை போதாக்குறைக்கு இந்த தாய்மாமனின் அன்புத் தொல்லை(சந்தேகம்) வேறு....இதெல்லாம் எனக்கு தெரிய வருவதற்கு முன்னமே அவளை வீழ்த்தியிருந்தேன்...! கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மோசம் செய்பவனல்ல நான்...பழக ஆரம்பிக்கும்போதே தெளிவு படுத்திவிடுவேன் பெண்களிடம் பொதுவாக...அவர்கள் என்னிடம் பழகும் வரையறையை பொருத்து.

காதல் எப்பொழுதும் யாரிடம் வேண்டுமானால் வரலாம்..! புனிதம் அல்லது உடலாசை என்று வேறுபடுத்துவது அவரவர் மனநிலையை பொருத்தது..எனக்கு அவளிடமும் அவளுக்கு என்னிடமும் காதல் இருந்தது..ஆனால் அது கல்யாணம் என்ற உறவைக்கொண்டு கட்டுபடுத்தக் கூடிய காதல் அல்ல....

அந்தரங்கமான பொழுதினில் இப்பொழுது நாமிருவரும் கையும்களவுமாக மாட்டினால் என்ன நடக்கும் என்று அவளிடம் கேட்டேன்...சிரித்துக்கொண்டே நமக்கு கல்யாணம் நடக்கும் என்றாள்..ஆனால் நான் கல்யாணத்தை பற்றி யோசிக்கும் நிலையில் இல்லையே என்றேன்...நானும் கூட என்றாள்...

நான் சொன்னது போலவே நடந்தே விட்டது...அதுவும் அவளின் தாய்மாமனிடம்...அவனுக்கு ஒரு சிறு சந்தேகம் என்னிடத்தில் இருந்திருக்கிறது...அதை ஊர்ஜிதபடுத்த அவன் முயற்சிக்கையில் அது உண்மையாகிப் போனது...எனது வீட்டில் இருந்து அவள் வீடு வரை தெருவில் அடி வாங்கிய படியே இழுத்துசெல்லப் பட்டாள்....என்னால் ஒரு வார்த்தை கூட கேட்க்க முடியவில்லை...

ஒரு பெண்ணை அதுவும் இப்படி நடுத்தெருவில் இழுத்து செல்லும்பொழுது கேள்வியெழுப்ப முடியாமல்...நான் ஆண்தானா என்ற குற்ற உணர்விர்க்குள்லானேன்...வெட்டுவேன் குத்துவேன் என்று அவளின் சொந்தபந்தகள் கொதிதெளுந்தார்கள்..நான் நண்பனின் வீடிற்கு சென்றுவிட்டேன்...என் பயமெல்லாம் அந்த பெண்ணின் வாழ்க்கை என்னால் பாழாகிவிடுமே என்பதுதான்....மேலும் கல்யாணம் என்ற விஷயத்தை நினைக்கவே குழப்பமாகி இருந்தது அப்பொழுதைய மனநிலை..

விஷயம் காவல் நிலையம் சென்றபொழுது...எனக்கும் அவளுக்கும் நட்பு ரீதியிலான பழக்கம் மட்டுமே என்றேன்...மேலும் அவள்தான் என் வீட்டிற்க்கு வந்தாள் என்றேன்....என் கண்களை அவள் பார்க்கவே இல்லை...அவளிடம் கேட்ட பொழுதும் நான் சொன்ன விஷயத்தையே சொன்னாள்...விஷயம் முடிந்து போனது...நான் அந்த பகுதியிலிருந்து கிளம்பி வந்துவிட்டேன்...வேறொரு பகுதிக்கு...வேறொரு வசிப்பிடம்...

அதன்பின்பு நான் கேள்விப்பட்ட விஷயம் அவளின் தாய்மாமன் அவளை கல்யாணம் செய்யவில்லை...அவளின் கல்லூரி படிப்பும் நிறுத்தப்பட்டது....பின்பு யாரோ ஒருவனின் மனைவியாகிபோனாள் என்று ...

முதல் மனதை கொல்லும் கொலையை கச்சிதமாக செய்திருந்தேன்...கேவலமான ஒரு மனிதபிறவி நான் என்ற குற்ற உணர்வுடன்...



அவள் செய்த தப்புக்கு அவளின் தந்தை எப்படி பொறுப்பாக முடியும் . அவரை கேட்டா என்னை அவள் காதலித்தாள்?? என்ற கேள்வியோடுதான் கேரளாவில் இருந்து பயணத்தை தொடங்கினேன்...(இது கொலைமுயற்சியின் நீட்சி..)

கேவலமான ஒரு மனிதப் பிறவி நான் என்பதை இன்னும் முழுமையாக நம்பத் தொடங்கினேன்...அவள் எனக்கு அலைபேசியில் அழைத்து அவளுக்கு இன்னும் இரு மாதங்களில் திருமணம் என்று சொன்ன பொழுது.....நல்ல வேளை உன்னை போன்ற ஒருவனிடம் மாட்டி என் வாழ்க்கையை சிதைக்க யோசித்திருந்தேன் என்றாள்.....

இந்த வேலையும் இந்த பணமும்தானே உன்னை என்னிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது....இதுதானே ஒருவரின் உயரத்தையும் ஒருவனின் தாழ்மையும் வேறுபடுத்துகிறது...இது தானே உன்னிடத்தில் கட்டில் மாறும் தைரியத்தை கொடுக்கிறது....அப்பொழுது தண்டனைக்குரியவள் நீயே....நல்ல வேளை உன் தந்தையை கொன்று மேலும் பாவம் சேர்க்கவில்லை என்று எண்ணிக் கொண்டேன்.....

யானைக்கும் அடி சறுக்கும்....அவள் பார்த்த வேலையை அவள் மிகவும் நேசித்தாள்....ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்களை மேய்க்கும் ப்ராஜெக்ட் லீடாக இருந்தாள்...அவளுக்கும் அவளின் சம பதவியிலுள்ள வேறொரு ஆணுக்கு ஆகவே ஆகாது....இருவரும் சமயம் பாத்து காத்திருந்தார்கள் ஒருவரை ஒருவர் காலை வாருவதற்கு....

அவள் என்னை தூற்ற தூற்ற அவளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிக்கொண்டே இருந்தது...பழி தீர்க்க சமயம் பார்த்து கொண்டிருந்த பொழுதுதான்...நியபகத்திர்க்குள் வந்தது நானும் அவளும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்தரங்கமான புகைப் படங்கள்...

முகத்தில் ஒரு வெற்றிபுன்னகயோடு அந்தப் படங்களில் ஒன்றை மட்டும் (அது ரொம்ப அந்தரங்கமான ஒன்று அல்ல ) அவளின் எதிரியான அந்த ஆணிற்கு அனுப்பிவைத்தேன்......சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து அழைப்பு வந்தது...கடும்கோபத்துடன் கேட்டாள் ஏன் அப்படி செய்தாய் என்று...பலமாக சிரித்தேன்....நீ வேசிமகன் என்றாள்....நீ முதலில் உன் தாயிடம் உறுதிபடுத்திக் கொள் என்றேன்...மீதி புகைப் படங்களை தந்து விடு என்று கெஞ்சினாள்....முடியாதென்றேன்.....உறுதியாக சொன்னாள்....இந்த படத்தால் தன் வேலையோ தன் மண வாழ்க்கையோ பாதிக்கப்படபோவதில்லை என்றும் உன்னை விட சந்தோஷமாகவும் உயர்ந்த நிலையிலுமே தன் வாழ்க்கை இருக்கும் என்றாள்........கொஞ்சமிருந்த மதிப்பையும் இழந்து என் மனதில் மறக்க வேண்டிய ஒரு பொருக்கி தெரு நாயாகிவிட்டாய் என்றாள்.....இனி இது போல் பொட்டைத்தனமாக வேறெந்த பெண்ணின் வாழ்விலும் விளையாண்டுவிடாதே என்றாள்..!

எதையோ வென்று விட்டதாய் நினைத்து இரண்டாம் மனதை கொல்வதிலும் கச்சிதம் கான்பித்துருந்தேன்..!


செய்த தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்தி பக்குவபடுதலே மனித வாழ்க்கையின் வாழ்வின் அர்த்ததிர்க்குல்லானதாக மாற்றும் என்பது என் எண்ணம்...

பொதுவாக நான் நெருங்கிப் பழகிய அத்தனை பெண்களுடனும் மிக மிக அந்தரங்கமான பொழுதுகளில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் என் கணினியில் பூட்டப்பட்ட ஒரு போல்டரில்(locked folder) இருக்கிறது...இன்றும்...

மிருக ஜாதியில் தோன்றியதுதான் மனிதயினமும்...அது கடவுளும் மிருகமும் ஒரு சேரப் பெற்ற ஒரு ஜாதி..அதில் உள்ள கடவுள் வெளிப்படும் நேரமும் மிருகம் வெளிப்படும் நேரத்திற்கு உள்ள கால இடைவெளி மிகக் குறைவே...

நான் மீண்டும் மிருகமாகமாட்டேன்..! இந்த பதிவை எழுதிமுடித்த பொழுது என்னிடம் இருந்த என்னுடன் பழகிய பெண்களின் அந்தரங்க புகைப் படங்கள் அனைத்தையும் அழித்திருந்தேன். நான் மனிதன். மனிதம் பழகி இன்புற்றிருக்க விரும்புபவன் .

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஒரு கொலை முயற்சியும்..அதன் நீட்சியும்...(பாகம் இரண்டு )

அன்று அதிகாலை ஆகும்பொழுது எல்லாம் ஒரு நேர்கோட்டில் சந்தித்த மாதிரி ஒரு தெளிவு பெற்ற நிலை போன்ற உணர்வது...காரணங்கள் என்று அலசி பார்க்கும்போதும் என் பக்கத்தில் இருந்து மட்டுமே யோசிக்க முடிந்தது....ஏனென்றால் பாதிக்கப்பட்டது நான் மட்டுமே, என்ற எண்ணம் மனதை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது..

என் மேல் இருந்த கோபம் மற்றும் சமுதாயத்தின் பால் இருந்த கோபம்...மற்றும் என் இயலாமை போன்ற காரணங்கள் அனைத்தும் கடைசியில் கை காட்டியது அவளின் தந்தையை....மூன்று தலைமுறையாய் அந்த குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காமல் போய் நான்காவது தலைமுறையில் பிறந்து தேவதையாய் மாறி மொத்த குடும்பத்தின் ஆசிர்வதிப்பிர்க்கு உள்ளான என்னவளின், பாசமிகு தந்தை...

ஏனோ அவரின் நடவடிக்கைகள் ஆரம்பம் தொட்டே தன் மகள் என் கைக்கு வந்து விட கூடாது என்ற ஒரு என்ன ஓட்டதிநூடையே செயல்படுத்தியது போன்றே அமைந்தன...அனைத்தும் சேர்ந்து எல்லாவற்றிற்கும் மேலாக என்னை ஒரு கேவலமான பிறவியாக அந்த தேவதையிடம் உணர்தியத்தின் மிக முக்கிய பங்கு அவரையே சார்ந்தது என்று தெரிந்ததால்....முடிவு செய்தேன் அவரை கொலை செய்து விடுவதென்று....

அவள் வாழ்நாள் முழுவதும் கதறி அழ வேண்டும் என்ற ஒரு கூருர எண்ணம் மனதில் தோன்றிய பொழுதே அவ்வளவு ஒரு பரவசம் கொண்டது மனது....அவள் தந்தை இறந்த உடன் அவர் உடலை பார்த்து அவள் கதறி அழுவதை ஒளிந்திருந்து ரசிக்கவேண்டும் என்றும் தீர்மானித்து கொண்டேன்...ரத்த ஓட்டத்தில் அவ்வளவு ஒரு வேகம் உடல் முழுவதும் ஒரே பரவசம்...ஏதோ ஒரு பெரிய சாதனை செய்யபோவதாக ஒரு பிரம்மிப்பு மனதினுள்.....

ரயில்வே துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்னுடைய வில்லன் மாமனார்...கொச்சியில் இருந்து தினமும் இருபத்தைந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்தால்தான் அவர் பணிபுரியும் ரயில்நிலையம் வரும்....கொச்சியில் வேலை செய்த உடன்பயின்ற நண்பனின் உதவியோடு அவனின் வண்டியை வாங்கிக் கொண்டு முதல் நாள் பின் தொடர்ந்து சென்றதன் விளைவு தூர வித்தியாசங்கள்....மற்றும் அவர் காலை அலுவலகம் வந்து மற்றும் மாலை வீடு திரும்பும் நேரம் சரியாக கணிக்க முடிந்தது....

இரண்டு நாட்கள் பின்தொடர்ந்ததன் விளைவு, சம்பவம் அரங்கேற்ற வேண்டிய இடமும் தெரிவு செய்யப் பட்டது...அது சற்று மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி...மேலும் நெறைய மரங்கள் சூழ்ந்த பகுதி...இதுவே ஏற்ற இடம் என்று முடிவு செய்துகொண்டேன் மனதினுள்...அன்று இரவு நிறைய குடித்தேன்....மனது ஏனோ பாரமாக இருந்தது....அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது....நியாய தர்மங்கள் என் முன் தராசு தட்டில் ஆடிக் கொண்டிருந்தன...ஆனாலும் இடையிடையில் அவளின் முகம் தெரியும்பொழுது எல்லாம் அனைத்தும் மறந்து போய்விடும்....தீர்க்கப் பட வேண்டிய அசுரனாகவே தெரிந்தார் அவளின் தந்தை...

அன்று இரவுதான் நண்பனிடம் நான் போட்டிருக்கும் திட்டத்தினை விளக்கி கூறினேன் .....அவர் தன்னுடைய ஹோண்டா ஆக்டிவாவில் செல்லும்பொழுது நண்பனின் மாருதி ஓம்னி வண்டியை கொண்டு பின்னால் இடித்து சாகடிப்பதே என்னுடுடைய திட்டம்..நண்பன் அரண்டு விட்டான்...சமாதான படித்தினேன்...எல்லாம் நல்ல படியாக முடியும் நான் பொறுப்பு என்று உறுதி கூறினேன்...அந்த நள்ளிரவுக் குளிரிலும் அவனுக்கு உடல் நடுங்கி வேர்த்துக் கொண்டிருந்தது.....

அடுத்த நாள் நண்பன் வேலைக்கு போகவில்லை....நானும் வெளியில் எங்கும் போகவில்லை....கொஞ்சம் மது அருந்தினால் தேவலை என்று தோன்றிய பொழுது நானும் நண்பனும் கொஞ்சம் மது அருந்தினோம்....இரவாக ஆரம்பித்த பொழுது கிளப்பினோம் ஒம்னியை....வழிநெடுக ஏனோ அம்மா அப்பா நியாபகம் வந்து கொண்டே இருந்தது...நண்பன் வேறு கண்டிப்பாக இப்படி செய்ய வேண்டுமா என்றான் இரு முறை.....

எட்டரை மணிபோல என்னுடைய வில்லன் மாமனார் பணிசெயும் இடத்திற்கு சென்றடைந்தோம்...சென்ற பத்தாவது நிமிடத்திலேயே மாமனார் வெளியே வந்து வண்டியை கிளப்பிவிட்டார்....குறிப்பிட்ட இடைவெளியில் அவரை பின்தொட்ரந்தோம்...சில இடங்களில் எங்களுடைய வண்டியின் முகப்பு விளக்குகளை அனைத்து விட்டோம்....சம்பவம் அரங்கேற்ற குறிக்கப் பட்ட இடமும் நெருங்கிக் கொண்டே வருகிறது....அங்கு ஒரு மனித தடயமும் இல்லை...ஒரு வாகனமும் கடக்கவில்லை...எல்லாம் திட்டமிட்ட படி சரியாக சென்றுகொண்டிருக்கிறது...சில மீட்டர்கள் தூரத்தான் அவருக்கும் எங்களுக்கும்....வண்டியின் வேகத்தை அதிகரிக்க சொல்கிறேன் நண்பனிடம்....அவனும் வேகத்தை கூடி விட்டான்....ரத்த நாளங்கள் வெடித்துவிடும் அளவிற்கு ரத்த ஓட்டம் தாறுமாறாக இதயத்தில்...நெருங்கிவிட்டோம் அவரை...கண்களை மூடிக் கொண்டேன் ஒரு நிமிடம்...ஒரே ஒரு நிமிடம் தான்....அப்பாவும் தங்கையும் வந்து போனார்கள் நினைவில்....கண் விழித்த பொழுது முன்னே செல்வது அப்பா போலவே தோன்றியது.....நண்பனின் காலோடு சேர்த்து பிரேக்கை அழுத்தி மிதித்தேன்....தேய்த்து கொண்டே வண்டி திரும்பி சற்று நிலை தடுமாறி நின்றுவிட்டது....அவர் சென்று கொண்டே இருக்கிறார்....

நண்பன் ஏதும் பேசவில்லை என்னிடம்....நானும் கூட......அன்றிரவு குடிக்கவில்லை....ஏனோ நன்றாக உறங்கினோம்...அடுத்த நாள் காலை கேரளா மண்ணிற்கு விடை கொடுத்து கிளம்பிவிட்டேன் தாய்நாட்டை நோக்கி....
இன்றும் என் வில்லன் மாமனார் சந்தோஷமாக பேரன் மார்களை கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார் தன் தேவதை மற்றும் தேவதையின் அமெரிக்க கணவனோடும்....

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ஒரு கொலை முயற்சியும் அதன் நீட்சியும்......

உடல்கள் மற்றும் உணர்வுகள் பரிமாறிக் கொண்டதால்...காதலின் நீட்சிமை குறித்து கவலை கொண்டதில்லை அப்பொழுது...!
அந்த இருப்பதி நான்கு வயதில் எதையும் சாதித்து விடும் மனநிலையில் மட்டும் நான்....சமூக கட்டுபாடுகள் அனைத்தும் ஒரு கனவாக மட்டுமே என் முன்னே..
பொருட் தேவைகளின் எதார்த்தம் அறியாமல்..பணத் தேவைகளின் பிரதானம் புரியாமல்..
ஆனால் தமிழ் திரை கதை நாயகன் போலவே...காதலுக்கு மரியாதை செய்வதற்காக எதையும் செய்து பார்க்க துடிக்கும் ஒரே மன நிலை மட்டும் அப்பொழுது மனதில்...

இருபத்தி நான்கு வயதில் தமிழகத்தில் ஒரு சாதாரண பொறியியர்க் கல்லூரியில் பயின்ற மாணவனால் எட்டக் கூடிய சம்பளமே என்னால் எட்ட முடிந்தது...
ஆனால் பணக்கார காதலி மற்றும் பணத்தால் மிதக்க கூடிய சம்பளமுடன் ஒரு பதவியில் இருப்பவள்...எனக்கு வாய்த்ததனால் முளைத்தது பிரச்சினை...
தமிழ் திரைப் படம் போலவே...மொழி ஜாதி மற்றும் அந்தஸ்த்து மற்றும் பிராந்திய வேறுபாடு காரணங்களாக...........

அவளுடைய தந்தை மிகவும் விவரமானவர் போல....பையன் ஒரு ஐந்து லகரம் வருட வருமானமாக வாங்கட்டும்...பிறகு பார்க்கலாம் என்று தூண்டிலையும் கொடுத்து மீன்கள் இல்லா நீர்ப் பரப்பையும் கை காட்டி விட்டார்...அவளின் வருட வருமானம் ஐந்து லகரத்தை தொட்டு விட்டது அப்பொழுதே....
காதல் என்பது எந்த வித கட்டுபாடுகளும், வாழ்வியலின் தேவைகளும் பிடிபடாமலும் புரியாமலும் போய்க் கொண்டிருந்த வேளையில்...வீசப் பட்ட அணு குண்டு இது....

கணினி பொறியியல் படிக்காமல் இயந்திரவியல் பொறியியல் படித்து வயிறெரிந்து கொண்டிருந்த வேளையது.....
திடீரென ஐந்து லகர சம்பளத்திற்கு எங்கு போவது...பல பெண்களை கடந்து வந்தாலும் முதன்முறையாக வாழ்க்கை முழுவதும் உடன்வர ஓருயிர் இவள்தான் என்று முடிவு செய்திருந்ததால்...எக்காரணத்தையும் கொண்டு இழக்க விரும்பவில்லை அவளுடன் கொண்ட காதலை...

எனக்கும் அவளுக்கும் நடுவில் தொள்ளாயிரம் மைல்கள்..!(வசிப்பிடங்களின் தூர வித்தியாசம்) .....
எக்காரணத்தையும் கொண்டும் அவனை நீ சந்திக்க கூடாது....அவனிடம் கேள் அவனுக்கு எவ்வளவு நாட்கள் அல்லது மாதங்கள் தேவைப்படும் என்று....ஆனால் உன்னை விட ஒரு ரூபாயாவது அவன் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கேட்டு சத்தியம் வாங்கிக் கொண்டார் அவளின் தந்தை...

பார்க்க வருகிறேன் ஒரு முறை மனம் விட்டு பேசிவிடலாம்...சாத்தியக் கூறுகளின் அளவீடுகலயாவது அளக்க இந்த பேச்சு உதவும் என்று மன்றாடிய பொழுது ...கதறி அழுகிறாள்...தந்தையின் வாக்கை மீற முடியாதென்று....
சினம் கொண்டவளாக சீறுகிறாள் என் மீது...உனக்காக என் ஒட்டு மொத்த குடும்பத்தை எதிர்த்து நிற்கிறேன்....உன்னால் ஒரு நல்ல வேலை கிடைக்க எடுக்கும் முயற்சியை காட்டிலும் என்னை சந்திக்க மட்டுமே குறியாய் நிற்கிறாய்.....சதை வெறி பிடித்தவன் நீ என்றாள்....

எங்கு போவது யாரை பார்ப்பது...எவ்வாறு அத்தகைய சம்பளத்தை எட்ட முடியும் என்று எதுவுமே புரியவில்லை...யாரை பார்த்தாலும் பயம் தோன்ற ஆரம்பித்தது....எதை பார்த்தாலும் பயம்...வாழ்வில் எதற்கும் லாயக்கற்றவன் என்று எனக்கு நானே முடிவு செய்து கொள்ளலானேன்.....

நியூ யோர்க்கில் வசிக்கும் இதய சிறப்பு மருத்துவரான அவளின் முறைப்பையன் அவளை சந்திக்க வைக்க அவளின் தந்தை முயற்சித்து கொண்டிருந்தார்...ஒருபக்கம் இவளுக்கும் நிறைய அறிவுரை வழங்கப்பட்டு கொண்டிருந்தது அவளின் ஒட்டு மொத்த குடும்பத்தாரிடமிருந்து...

நாட்கள் ஓடிக் கொண்டே இருந்தது....மனதளவில் தோற்று போயிருந்ததால் நிறைய நேர்முக தேர்வுகளில் இறுதிக் கட்டத்தில் தோல்வியுற்று வெளியேறினேன்....
என் தேவதையும் யதார்த்தம் புரிந்து கொள்ள பழகியிருந்தாள்....

பின்புதான் ஒரு நாள் அவளை சந்தித்தேன் நேரில்( பழைய பதிவொன்றில் அதை பகிர்ந்திருக்கிறேன்)
அவள் என்னவள் இல்லை என்று தெரிந்த நொடி நொறுங்கித்தான் போனேன்...அன்று இரவு முழுவதும் குடித்து கொண்டே அழுது கொண்டிருந்தேன் தனியாக ............

செவ்வாய், 13 ஜூலை, 2010

சிதறல்கள்....!

இன்று ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தது....! இரண்டு நாட்களுக்கு முன்புதான் பதிவர் ஜாக்கி சேகர் இரு சக்கர வாகன விபத்துகள் குறித்து ஒரு இடுகை இட்டிருந்தார்.

இரண்டாம் ஷிப்ட் என்பதால் சுமார் இரண்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன்...அதிகாலை தவிர மற்றைய நேரங்களில் எனது வேகம் மிதமாகவே இருக்கும்...அறுபது கிலோமீடர்க்கு வேகத்திற்கு மேல் செல்வதில்லை....இன்றும் அதே போல் அதே வேகத்தில் சென்றுகொண்டிருந்தேன்....திருவான்மியூர் ஐ.டி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது...ரோட்டின் இந்த பக்கத்தை பார்க்காமலே சாலையை கடந்து கொண்டிருந்தான் ஒரு மாணவன்...பாதி சாலையை கூட அவன் கடக்கவில்லை என்பதால் சரி நாம் போய்விடலாம் என்றெண்ணி நான் என் வேகத்தை குறைக்கவில்லை....திடீரென என்ன நினைத்தானோ மீதி தூரத்தை ஓடி கடக்க முயற்சித்தான்...அவன் ஓட ஆரம்பிக்கும்பொழுதே எனக்கு தெரிந்து விட்டது ஏதோ நடக்க போகிறது என்று...ஆனால் யோசித்து பிரேக் போடும்போது வண்டி கட்டுபாட்டை இழந்து அவன் மேல் மோதிவிட்டது...நான் வண்டியில் இருந்து தூக்கி வீசப் பட்டேன்...விழுந்த மறு நொடியே ஹெல்மெட்டை கழட்டி கையில் வைத்துக் கொண்டு அவனை நோக்கி ஓடினேன்...அவன் எழவே இல்லை...மயங்கிவிட்டானோ என்று நினைத்து...நடு சாலையில் இருந்து அவனை இழுத்து கொண்டு சாலையின் ஓரத்திற்கு வந்தேன்.....பின்பு அவனை பார்த்த பொழுது சுயநினைவுடனே தான் இருந்தான்...

அதற்குள் அங்குவந்த இன்னொரு மாணவன் கொஞ்சம் தண்ணீர் கொடுக்க அடிபட்டவன் சற்று அசுவாசமாகினான்...ஆனாலும் 108 க்கு அழைத்தேன்...உள் காயம் ஏதும் பட்டிருக்குமோ என்று ....அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆம்புலன்சே வந்துவிட்டது...ஆனால் அந்த மாணவன் அடி இல்லை என்று சொல்லி கிளம்பிவிட்டான்...அம்புலன்சில் உள்ளவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு...108 க்கு மறுபடியும் அழைத்து எனது நன்றியை தெரிவித்து கொண்டேன்..! இங்கே 108 ஐ பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்...ஹைதராபாத்தில் இந்த சேவை வெகு முன்னரே வந்துவிட்டது...எந்தபகுதியிலும் சாலைவிபத்து நடந்தாலும் உடனே அழைத்து தெளிவாக சம்பவம் நடந்த பகுதி எது என சாலையின் எண்ணுடன் குறிப்பிட்டுவிட்டால் அடுத்த இருபது நிமிடத்திற்குள்(அதிகபட்சமாக) ஆம்புலன்ஸ் அங்குவந்து விடும்...விபத்து நடந்து சில நிமிடங்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி கிடைக்கபெருவதால் நிறைய உயிர்கள் காக்க பெரும்.


நேற்று தங்கைக்கு உடல்நிலை சரி இல்லை என்று சொன்னதால் அலுவலகத்தில் அனுமதி எடுத்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிட்டேன்...இது மழை நேரமென்பதால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள்...கோடம்பாக்கத்தில் உள்ள இருபத்திநாலு மணிநேர சேவை மருத்துவமனைக்கு சென்ற பொழுது இன்றைக்கு பார்க்க வேண்டிய நோயாளிகளுக்கான டோக்கன் கொடுத்தாகிவிட்டது என்றார்கள்....இனி நாளைதான் பார்க்க முடியும் என்று வேறு தகவல்....இந்நகரத்தின் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இங்கே அனைத்தும் வியாபாரமாகிவிட்டது...

வேறொரு மருத்துவமனைக்கு போனோம்....தங்கைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் காத்திருக்கும் போது என் தோள்களில் சாய்ந்துகொண்டாள்....எங்களை கடந்து போன ஒரு நர்ஸ் எங்களை பார்த்து புன்னகைத்து டாக்டர் ரௌண்ட்ஸ் போயிருக்கார் இதோ வந்துவிடுவார் என்றார்...சொன்ன படியே டாக்டர் வந்தார்...மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஒரு ஊசி போட வேண்டும் என்றார்....எங்களை பார்த்து புன்னகைத்து போன அதே நர்ஸ் தான் ஊசி குத்தினார் தங்கைக்கு.... மருந்து சீட்டில் நோயாளியின் பெயரில் பெயர் எழுத மறந்து விட்டார் டாக்டர்....அந்த நர்ஸ் என் தங்கையிடம் பெயர் கேட்டு எழுதிக் கொடுத்தாள்.....முன்பகுதியில் இருக்கும் ரிசெப்சனில் பணம் கட்டும்படி கேட்டுகொண்டாள்.......ரிசெப்சனில் பணம்கட்டும்போது மருந்துசீட்டில் பெயர் பார்த்தால் திருமதி என்று விளித்து தங்கையின் பெயர் எழுதியிருந்தது....

வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் இருந்தால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன் மனைவி மட்டுமே என்ற கேடுகெட்ட கண்ணோட்டம் இந்த ஊரில் மட்டுமே பார்க்கமுடியும்......



பெண் தோழிகளில் புது வரவு இது.....நெடு நாட்களாக அலைபேசியில் மட்டுமே பேசிகொண்டிருந்தோம்....நிழற்படங்கள் பரிமாறிக்கொண்டாலும் நேரில் பார்க்க வேண்டும் என்று நெடு நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்....அந்த நாளும் வாய்த்தது. நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்திலுள்ள அந்த பன்னாட்டு கம்பனியில் அவளை சந்தித்தேன்...தொலைபேசியில் பேசியிருந்ததால் நேரில் பார்க்கும் போது எவ்வித தடுமாற்றம் இல்லை....குறும்புத்தனமான பேச்சினால் அவளுடன் இருந்த அரைமணி நேரமும் அரை நொடி ஆகிவிட்டாள்....

நேற்று இரவு ஏனோ தூக்கம் வரவில்லை...அவளுக்கு அலைபேசினேன்....திடீரென்று அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது...சொன்னேன்...தைரியம் இருந்தால் வீடிற்கு வா என்றாள்...போர்டிகோவில் இரண்டு பெரிய வெளிநாட்டு நாய்கள் இருக்கின்றன என்ற எச்சரிக்கை மீறி புறப்பட்டேன்...புறநகரில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி அது....

தெருக் கோடியில் வண்டியை நிறுத்திவிட்டு செருப்பை கழட்டி வண்டியின் டேன்க் பையில் வைத்துவிட்டு அவள் வீடு நோக்கி சென்றேன்....(மனதில் இருபது வயதில் ஒரு காதலிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி முத்தமிட சுவறேரிய நியாபகம் வந்து போனது..) அவளின் வீட்டு சுவறேரிய பொழுது உயிர் என் கைகளில் இல்லை...அடுத்து நடக்க போகும் அத்தனை நிகழ்வுகளுக்கும், நிகழ்வாக ஆகாமல் (சமுதாயத்தின்)மனதில் ஆழத்தில் உள்ள ஆபாசமான கற்பனை எண்ணங்களும் ஹாய்சங்களாகி போனாலும் அதற்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் நான்... இருபதுகளில் இருந்த தைரியம் முப்பதில் கொஞ்சம் குறைந்திருக்கிறது...ஆனாலும் மனதில் ஒரு குறுகுறுப்பு எனக்குள்...நாய்களுக்கு மட்டும் பயந்து கொண்டே உள்ளே குதித்தேன்....இரண்டு கார்கள் நான் இருந்த இடத்தில் நின்றதால்...நாய்கள் கார்களுக்கு அப்பால் படுத்திருந்தது....

அது பின்னிரவு பொழுது...அப்பொழுதும் விளக்கேரிகிரதென்றால் அது கண்டிப்பாக முதியவர்கள் வசிக்கும் அறையாய் இருக்காது என்ற என் கணிப்பு சரியாய் இருந்தது....அங்கே அவள்தான்...எனை பார்த்ததும் அதிர்வின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள்....விளயாட்டிர்க்குதான் சொன்னேன் என்றாள்....அறைக்குள் இருந்ததால் அவளை முத்தமிட முடியவில்லை....பறக்கும் முத்தங்கள் கொடுத்து விட்டு பறந்து வந்து விட்டேன் வீட்டிற்க்கு....ஆனாலும் சிறிய சறுக்கல் ஏற்பட்டிருந்தால், வாழ்வின் அடுத்த பகுதியில் கற்பழிப்பு முயற்சியிலோ....அல்லது திருட்டு குற்றத்திலோ உள்ளே சென்றிருப்பேன்...என்பது மூளைக்குள் இன்னும் பலமாக உரைத்துக்கொண்டே இருக்கிறது.

இனி இந்த மாதிரி காதல் விளையாட்டுக்கள் கூடாது என்று முடிவெடுத்து கொண்டேன்...!

திங்கள், 5 ஜூலை, 2010

பிரிந்து விடலாம் அம்மு ...!

எனக்கு மழை ரொம்ப பிடிக்கும்..! நான் மழை காதலன்...! பள்ளி பருவத்திலும் கல்லூரி காலத்திலும்...மழை வந்து விட்டால் சுத்தியிருப்பதேல்லாம் மறந்து நனைந்து ஆட்டம் போட்டு மகிழ்வேன்...! ஆனால் பின்பு பணிக்குச் செல்ல ஆரம்பித்த உடன் மழை காலங்களில் மழை ஏன் வருகிறது என்று யோசிக்க வைத்தது சென்னை நகரின் வடிகால் வசதி தன்மையும் போக்குவரத்து நெரிசலும்..! ஆனால் இன்று பெய்த மழையை மிகவும் ரசித்தேன்....உந்துருளியில் முழுவதும் நனைந்து கொண்டே வந்தேன்...! நினைவலையில் அம்முவுடன் கடற்கரையில் ஆடித் திரிந்த நினைவுகள் சிறிது போதயுட்டியது..!

அம்மு என்னை விட பத்து வயது இளையவள்..! அவள் சிறு பிள்ளையாக குட்டை பாவாடை அணிந்து ஒன்றாம் வகுப்புக்கு போகும்போது நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன்...அதன் பிறகு கால ஓட்டத்தில் அம்மு காணாமல் போனது....மறுபடியும் சென்னையில் சந்திக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருந்தது...பெண்கள்தான் எவ்வளவு வேகமாக வளர்ந்து விடுகிறார்கள்..! பொறியியல் பட்டம் பெற்று அதற்க்கு மேல் ஏதோ பட்டய படிப்பிற்காக சென்னை வந்திருந்தாள்...! அப்பொழுது அம்மு சில பிரச்சினைகளில் சிக்கியிருந்தது... தனித்திருந்த அம்முவிற்கு நான்தான் துணை..! சிறு குழந்தை என பழகினால் அம்மு என்னிடம் மிகுந்த முதிர்ச்சியான ஒரு உறவை கேட்டது...சில விஷயங்கள் நம்மால் உடனடியாக முடிவெடுக்க முடியாது...அப்படி முடிவெடுக்க முடியாமல் ஆரம்பித்தது தான் அம்முஉடன் நெருக்கமாக பழக நேரிட்டது..
பெண்களுடனான எனது மற்றைய உறவு போல் இதை நான் கருதவில்லை...ஏதோ ஒரு பிடிப்பு இந்த உறவில் இருப்பது போல் தோன்றினாலும் இந்த உறவு நெடிய உறவாக மாறுவதற்கு சாத்திய கூறுகள் அறவே அற்று போயிருந்தது...அம்மு மிகவும் உயர் சாதி என்னும் ஒரு பிரிவைச் சேர்ந்தது.....இதன் காரணமாகவே தான் காதலித்தவனை கரம் பிடிக்க முடியாமல் கடும் அழுத்தங்களுக்கிடையே சென்னையிலுள்ள சொந்தங்களின் வீடிற்கு அனுப்பப்பட்டதாக என்னிடம் சொல்லியிருக்கிறது...அந்த காதலன் கப்பலில் பணிபுரிபவன்...அவன் கப்பலேரிவிட்டான்...

நாங்கள் மிக நெருக்கம் ஆகியிருந்த கட்டம் அது...! அம்மு தன் வீட்டில் பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்கிறேன் என்றாள் என்னுடன் வாழ்வதற்காக...! நான் ஏதும் சொல்லவில்லை...! திடீரென ஹைதராபாத் வருமாறு வேலைக்கான அழைப்பு..! அம்மு நிறைய அழுதது..! பின்பு தன்னையும் சீக்கிரம் அங்கு அழைத்து செல்லுமாறும் கேட்டது..! படித்து முடி உனக்கும் அங்கேயே ஒரு வேலை வாங்கி விடலாம் என்று சொல்லி சென்றேன்...! தினந்தோறும் என்றிருந்த அலைபேசி அழைப்பு சில மாதங்களுக்கு பிறகு ஒரு வாரம் அணைக்கப்பட்டு விட்டது....ஏதோ பிரச்சினை என துடித்து போயிருந்தேன்... ஒரு வாரம் கழித்து அழைத்த போது அம்மு வெகுநேரம் அழுதது....

அழுது முடிக்கும் மட்டும் விட்டு பின்பு கேட்டேன்..என்ன பிரச்சினை என்று??? என்னை மன்னிப்பாயா ?? என்று திரும்ப திரும்ப கேட்டது??? ஏதோ பெரிய விஷயம் நடந்தேறியிருக்க வேண்டும் என்று மனது சொல்லியது. சரி என்றேன். என்னுடம் பேச்சை நிறுத்த கூடாது என்று சத்தியம் கேட்டது, செய்தேன். கப்பலேறிய அந்த காதலனின் கப்பல் சென்னை துறைமுகம் வந்திருந்ததேனவும் எல்லாம் மறந்து ஒரே ஒரு முறை எனது பழைய காதலி வேண்டும் என்று அவன் கேட்டதாக சொன்னது...
ஒரு நாள் முழுவதும் அவனுடன் தங்கியிருந்ததாக சொன்னது..! எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை....உண்மையான காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எப்பொழுதோ நான் சொன்ன எடுத்துகாட்டை மேற்கோள் காட்டியது.

அடுத்த சில நாட்களில் நிகழ்வுகள் வேகமாக நடந்தேறியது...அம்முவுடைய காதலன் அவள் வீட்டில் போய் மறுபடியும் பெண் கேட்க ....இம்முறை ஒத்து கொண்டார்கள்..!
அம்முவிற்கு அந்த பையனுடன் இன்னும் ஆறு மாதங்களில் மணம் நடக்க போகிறது. அம்மு நாளையுடன் சென்னை நகரை விட்டு சொந்த ஊர் செல்கிறது...!சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து பத்து நாட்களே ஆகின்றன....வேலை பளு காரணமாக அம்முவை பார்க்க இயலவில்லை இந்த பத்து நாட்களில்......கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்றது...அதுதான் இன்னைக்கு மழையில் நனைய ரொம்ப பிடித்து போனது...ஏனோ எவ்வித மனநிலையையும் மழை அடித்து சென்றுவிடும்...!

சந்தித்தேன் அம்முவை, சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம்...ஏனோ பேசிய விஷயங்கள் அனைத்தும் மனதிற் ஒட்டாமல் சம்ப்ரதாயதிர்க்கு பேசியது போலிருந்தது கிளம்பும் நேரம், வாழ்த்துக்கள் என்று கை கொடுத்தேன்....தொட மறுத்து விட்டது அம்மு....வேண்டாம் என்றது. வாழ்த்துக்கள் என்று சொல்லி பிரியும் போது அம்முவின் கண்கள் பார்த்தேன்...கொஞ்சம் கலங்கி போயிருந்தது...! அந்த பிரபலமான காபிக் கடையில் கொஞ்சம் இனிப்புகள் வாங்கிகொடுத்து இனிய பிரிவாக மாற்றினேன்...!

இவ்வளவு இலகுவான ஒரு பிரிவை சந்திப்பது முதல் முறை எனக்கு... சிறிய குறுநகை... மற்றும் வார்த்தைகளற்ற உணர்வு பரிமாற்றம்(கண்களால்)..


ஆட்டோவில் ஏறியதும் என்னை பார்த்து தலையசைத்தது அம்மு... அம்மு சென்ற பிறகு, எனது உந்துருளியை எடுப்பதற்கு செல்லும்வழியில் அலைபேசியை எத்தோச்சையாக எடுத்து பார்த்த பொழுது பதினாறு எடுக்கப்படாத அழைப்புகள் இருப்பதை கண்டு எடுத்து யாரென்று பார்த்தால்...



ஷைலு புஜ்ஜி என அழைப்புக்கு பெயர் சொன்னது எனது அலைபேசி...! ஷைலு ஹைதராபாத்தில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவி...! என்னுடனான இந்த உறவிற்கு அவள் வைத்திருக்கும் பெயர் - காதல்....!

வியாழன், 1 ஜூலை, 2010

ஆல் இன் ஆல் அழகுராசாவிர்க்கு பதில் இது...!

என்னமோ நபிகள் நாயகம் மட்டும்தான் குஜிலிகளுடன் கும்மாளமிட்டார் என எள்ளி நகயாடியிருக்கிறார் அழகு..! அது பொய் என்ற கருத்துக்கு நான் போகவில்லை...!

ஆம் உண்மையே...மனிதனாக பிறந்த எவருக்கும் வரும் இச்சைகளே அவருக்கும் வந்திருக்கிறது...! இறை தூதர் என்றாலும் மனிதனாக பிறந்து மாண்டு போனவர் தான் அவர்.

மாறாக பத்து கைகளுடன் பத்து கால்களுடன் தோற்றம் கொடுக்கும் கிராபிக்ஸ் வேலை எல்லாம் அவர் காண்பிக்கவில்லை..! பிறந்த குழந்தையாக அண்ட சராசரங்களை பொக்கை வாயில் காண்பிக்கவில்லை...!

கிருஷ்ணன் என்ற அந்த கடவுள் பாத்திரம் போல் பெண் வெறி பிடித்து ஆடவில்லை..! பார்த்த பெண்களை எல்லாம் கட்டிலில் வீழ்த்தும் திறைமை அவருக்கு இருந்ததில்லை...

மாடு மேய்க்கும் அந்த கிர்ஷ்ணனுக்கு காம சூத்திர நூல் கைக்கு கிடைத்ததோ என்னவோ....பல வித கோணங்களில் ஒரே சமயத்தில் பல பெண்களை புணர்கிறான்..! (ஆதாரமாக உள்ள ஓவியங்கள் கோழிகோடு அரண்மனையில் உள்ளது... 1970 வரை அது மக்களின் பார்வைக்கு விடப் படவில்லை என்பது அங்குள்ள அறிவிப்பு பலகயிலிருந்தே தெரிகிறது..)

குளத்தில் நீராடிக்கொடிருக்கும் பெண்களின் ஆடைகளை திருடிக் கொண்டு அவர்களை நிர்வாணமாக ரசிக்கிறான் இந்த குஜால் பார்டி....! இவன் விளையாடி விட்டு போன பெண்களை மணந்த அந்த புன்னியவான்கலேல்லாம் புலம்பியிருப்பார்கள் இந்த அயோக்கியன் ஆணுறுப்பில் அடி பட்டு சாக வேண்டுமென்று...! அவன் தான் வானத்தில் இருந்து குதித்தவனாயிற்றே....கடைசி வரைக்கும் அவன் வேலைகளை செய்வனே செய்து கொண்டிருக்கிறான்.....இஸ்லாமில் நபிகள் பற்றி சொன்னதை போலதான் கீதையிலும் சொல்கிறார்கள் இவன் (கிருஷ்ணன் ) ஒரு தீராத விளாயாட்டு பிள்ளை என்று...!

இரண்டு மனைவிகள் மற்றும் கள்ள உறவுகளில் பல பெண்கள் என்று ஆரியர்கள் பெண்களை எவ்வாறு அடிமை படுத்த வேண்டும்...எப்படி கள்ள உறவு கொள்ள வேண்டும் என்று பாடம் வேறு கூறி செல்கிறான்....! அதனால் தான் என்னவோ வெறித்தனமாக வழிபடுகிறார்கள் இந்த காமுகனை ஆரிய தேசத்தில்(வட இந்தியா)

இறுதியாக எவனும் இங்கு போற்றும்படி இல்லை....இங்கே அவனவன் செய்த விளயாட்டுதனங்களை ஒப்பிட்டு மட்டுமே பார்க்கலாம்....அப்படி பார்க்கையில் நபிகளை விட குஜால் பேர்வழி, இந்த காமக் கடவுள் கிருஷ்ணன்..!

புதன், 30 ஜூன், 2010

சில நினைவுகள் கொல்கிறேன்..!

கருத்து பிழை எழுத்து பிழை என முடிவெடுக்க வேண்டாம் தலைப்பை பார்த்த மாத்திரத்தில்..! இதை பகிர வேண்டும் என்று நெடு நாள் எண்ணம் இருந்தாலும் வேலை பளு மற்றும் கொஞ்சம் ஆர்வமின்மை காரணம்...ஆனால் இன்று படித்த இரண்டு பதிவுகளின் தாக்கம் இதில் வரும் சில சம்பவங்கள்...! பதிவை படித்து முடிக்கும் பொழுது உங்களுக்கு தலைப்பு சரியே என்று தோன்றலாம்!

அப்பொழுது முதல் வகுப்பு படித்து கொண்டிருந்தாக நியாபகம்...அசோக் என்னுடன் பயிலும் சகா...எனக்கு உற்ற தோழன்..! வாரயிறுதி நாட்களில் அசோக் வீட்டிலேயே நிறைய பொழுது களியும்...ஆரம்பத்தில் அவன் வீட்டிற்க்கு செல்லும்பொழுதெல்லாம் அங்கேயே மதிய உணவு முடித்து விடுவேன்...அவன் வீட்டில் ஒரு வயதான் பாட்டியும் உண்டு...ஒரு முறை அவன் வீட்டிற்க்கு விளையாட சென்றிருந்த பொழுது பாட்டி கேட்டது நீங்க தெலுங்கா என்று? இல்லை தமிழ் மட்டுமே தெரியும் என்றேன்...(திருநெல்வேலி மற்றும் அந்த சுற்று புறங்களில் நாயக்கர் இனம் வெகுவாக உண்டு) அப்டியா என்று சில நிமிட மௌனத்திற்கு பிறகு நீங்க என்ன ஜாதி என்று கேட்டது.....உண்மையிலேயே அப்பொழுது எனக்கு என் ஜாதி என்னவென்று தெரியாது.... தெரியாது என்பது என் பதிலாக இருக்க....பாட்டிக்கு எப்படியாவது என் ஜாதியை அறிய குறுகுறுப்பு அதிகமாயிருக்க வேண்டும்....

உங்க அப்பாவுக்கு எந்த ஊர் என்று கேட்கவும் அம்பாசமுத்திரம் என்றேன்...அங்கே எந்த தெரு என்றது பாட்டி.....முடபாலம் என்று சொல்லவும் பாட்டியின் முகம் சுருங்கி போய்விட்டது....சேரிப்பையன் என சப்தம் போட்டு சொல்லிக் கொண்டே உள்ளே சென்றது....நானும் அசோக்கும் விளையாட ஆரம்பிக்கும் நேரம் வீட்டினுள் நிறைய சப்தம்..பாட்டிக்கும் அசோக் அம்மாவிற்கும் சண்டையாகி விட்டது என்னை வீட்டினுள் அனுமதிததர்க்காக ......

அசோக் அம்மா சொன்னது பையன் செவப்பா இருக்கனே...அவனுக எப்போ இவ்ளோ கலரா இருந்திருகாணுக என்றது....தலித்துகள் கருப்பாக மட்டுமே இருப்பார்கள் என்பது பொது பார்வை அல்லவா....எனது மூதாதையர்கள் மலையில் வசித்தவர்கள்....இன்றும் கூட மலைவாசி இனங்களில் நிறமுடயவர்களை காண முடியும்....சிவப்பாக பிறந்தது என் குற்றமும் அல்ல...

விஷயம் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.....தண்ணீர் தாகம் என்று அசோக் அம்மாவிடம் சொன்ன பொழுது முன்பு கொடுத்த எவர்சில்வர் குவளைக்கு பதில் ஒரு பழைய பிளாஸ்டிக் குவளையில் தண்ணீர் தந்தார்கள்....அந்த குவளை அசுத்தமாகவும் நிறைய இடங்களில் கீரல்களோடும் இருந்தது....ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று மட்டும் ஊகிக்க முடிந்தது......ஆனால் என்ன என்பது மட்டும் தெளிவில்லை.....தண்ணீர் குடிக்க மனமில்லை....ஆனாலும் பார்த்து கொண்டிருக்கிறார்களே என்று குடித்து விட்டு குவளையை கொடுக்கும் பொழுது அசோக் அம்மா சொன்னது வெளியேவே இருக்கட்டும் என்று...அதோடு இனிமே நீ உங்க வீட்டிலேயே விளையாடு சரியா என்றபடிக்கு அசோக்கை உள்ளே இழுத்து சென்று விட்டது.....

நிறைய அவமானமாய் இருந்தது வீட்டிற்க்கு வராதே என்று சொன்னது....அம்மாவிடம் வந்து நடந்ததை சொன்ன பொழுது அம்மா இனி நீ அங்கே போக வேண்டாம் என்று மட்டும் சொல்லி முடித்துகொண்டார்கள்..! பின்பு கொஞ்சம் விவரம் தெரிந்த வயதில் எல்லாம் பிடிபட ஆரம்பித்தது....! அப்பொழுதுதான் ஒரு அதிர்சிகரமான விஷயமும் தெரியவந்தது....எனக்கு விவரம் தெரிந்த வரை நாங்கள் குடியிருந்த பகுதிகளனைத்தும் உயர்சாதியினர் அல்லது அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர் வாழும் பகுதியாகவே இருந்தது....விஷயம் இதுதான் வாடகைக்கு வீடு பார்க்கும்பொழுதெல்லாம் உரிமையாளர் என்ன சாதி என்று கேட்க்கும் பொழுது என் தந்தை உயர்சாதி என்றே சொல்லி இருக்கிறார் என பின்பு தெரிந்து கொண்டேன்...! பின்பு என் தந்தை அரசு ஊழியர் சங்க தலைவர் ஆனா பொழுது பரவலாக சாதிய அடையாளத்துடனே அறியப்பட்டார்...!


ஆனால் நான் பத்தாம் வகுப்பு பயிலும் போதெல்லாம் நண்பர்களின் வீட்டிற்க்கு சென்று உணவு உண்பதெல்லாம் சாதாரணம் ஆகிப்போனது....சாதி என்று ஏதும் பார்க்கவில்லை எவரும்....உள்ளே இருந்தது ஆனால் உள்ளே மட்டுமே...! எனக்கு ஆதிக்க சாதியில் நிறைய நண்பர்களுண்டு...! அவர்களின் ஒரே ஆச்சிரியம் என் நிறம் மட்டுமே..! என் சக தலித் தோழர்கள் கூட என்னை வெள்ளை பறையன் என்றே அழைப்பார்கள் கிண்டலுடன்...! பாப்பனியம் என்று எந்தளவிற்கு பேசுகிறோமோ அந்தளவிற்கு மாறுபட்ட நிறைய பார்ப்பன நண்பர்களும் கூட எனக்குண்டு.....அவர்கள் வீட்டில் இனம் வேறுபாடு எப்பொழுதும் கண்டதில்லை நான்..!

இருந்தாலும் ஒரு சோற்று பதம் கூட நான் கிடையாது என்பதற்கிணங்க விஷயங்கள் நடைபெறுகிறது.....இன்றும் வட தமிழகம் முழுவதிலும் இரட்டை குவளை முறை மற்றும் உயர் சாதியினர் தெருக்களில் தலித்துகள் செருப்பணிய தடை என்று இன்று கூட இருநூறு வருடத்திற்கு முந்தய பாரம்பரியத்துடந்தான்??????? இருக்கிறது தமிழகம்...!



மக்களின் மனதில் மாற்றம் கொண்டு வரவேண்டிய போராட்ட காரர்கள் எல்லாம் கொள்கை விற்று வாழும் நிலையில்...மாற்றம் என்பது சிறு மனிதாபிமானமாக ஆதிக்க சக்திகளின் இதயத்தில் தோன்றினால் கூட போதும் .....மிகப்பெரிய சமூக மாற்றம் கண்ணுக்கு தென்படும் சாத்தியக் கூறுகள் உண்டு...! இரண்டாயிரம் ஆண்டுகள் நாங்க இப்படிதான் என்று சொல்லி மீசையை நீவிக் கொள்வதிலோ அல்லது நெஞ்சினில் தொங்கும் நூல் கற்றைகளை பெருமையாக பார்ப்பதிலோ நீங்கள் சாதித்ததோ அல்லது சாதிக்க போவதோ எதுவுமில்லை..!

சனி, 3 ஏப்ரல், 2010

மறுபடியும்.......

ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து மறுபடியும் தொடுகிறேன் ஹைதராபாத் மண்ணை...சந்தோஷமாக பறந்து திரிந்து,கழித்து கொண்டிருந்த வாழ்க்கையில் recession என்ற புயல் அடித்ததில் கலைந்தது வாழ்க்கை கனவு...அடுத்தது என்ன என்ற இலக்கில்லாமல் அந்த மண்ணை,அதில் அனுபவித்த சந்தோசத்தை என்று எதையும் விட மனமில்லாமல் விட்டு விலகி முழுதாக ஓராண்டு கழிந்து விட்டது....மறுபடியும் இங்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற முடிவோடு தான் ரயிலேறினேன் அங்கிருந்து..

இதுதான் வேலை இதுதான் வாழ்க்கை என்று ஏதுமற்று ஆனால் எப்படியோ சற்று சந்தோஷமாக என்று கூட சொல்லலாம், அப்படி சென்றது சென்னையில் கழித்த போன வருடம் முழுவதும்.....எக்கச்சக்க பெண்கள் என்னை சுற்றி...பணம் ஒரு பொருட்டே அல்ல என்று களமிறங்கிய நண்பர் கூட்டம்...போதாததற்கு வலைக் கூடத்தில் வேறு பதிவராக இறங்கி என்று போன பொழுதுகள் மகிழ்ச்சியாகவே போனது....

ஒரு நள்ளிரவில் தொலைபேசியில் வேலைக்கான அழைப்பு வந்தது மறுபடியும் ஹைதராபாத் வரச்சொல்லி...
இம்முறை சென்னையை விட்டு செல்ல மனமில்லாமல் கிளம்பிசென்றேன்.....காரிலும் பைக்கிலும் சீறிப் பாய்ந்த சாலைகளில் இம்முறை பேரூந்து பயணம்...சொந்த வாகனம் இருந்ததால் சேருமிடம் பற்றிய கவலை கொண்டதில்லை முன்பு ,இம்முறை நடத்துரிடம் இடம் சொல்லவே மொழிப் பிரச்சினை...
முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு கல்லூரி மாணவன் எனக்கு உதவி செய்தான் நான் சேர வேண்டிய அலுவலகம் வரை வந்து வழிகாட்டி......

முன்போ சத்யம் ஹைதராபாத் முழுவதும் தமிழ் மக்களின் ராஜ்யமே மேலோங்கியிருக்கும்...இந்த புது அலுவலகத்தில் நான் மட்டுமே தமிழன்...தெலுங்கு புரிந்து கொள்ள முடிந்தாலும் ...பேச வராததால் தனித்தே இருக்கிறேன்...இப்பொழுது ஹைதராபாத் எனக்கு முழுதும் புதிதாக தோன்றுகிறது....ஆறுதலான சில விஷயங்களில் ஒன்று சில பழைய நண்பர்களை சந்தித்தேன்...தொடர்கிறது சந்திப்பு...

ஆனாலும் நள்ளிரவில் அலுவலகம் விட்டு வந்து பால்கனியில் தனியாக புகைபிடிக்கும் பொழுது ஏனோ இனம் காண முடியாத உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்யும்...சில நாட்களுக்கு பிறகு ஹைதராபாத் அலைபேசிச் சேவை பெற்ற உடன் அஸ்மாவிடம் பேச வேண்டும் போல தோன்றியது.....அஸ்மா ஒரு நட்சத்திர பாரில் அறிமுகம்...பதிம வயதில் இருப்பவள்...பேரழகி.! அவள் தொழில் அவள் உடலை விற்ப்பது...
அறிமுகமே எங்களிருவருக்கும் கடும் சண்டையில் முடிந்தது (பணம் தொடர்பாக அல்ல..) பின்பு இரண்டாம் முறையும் அவளையே அழைத்தேன்....நிறைய அவளிடம் பேசினேன்....ஆங்கிலம் ஹிந்தி என இரண்டையும் கலந்து பேசுவாள்....

தனித்தே எவ்வளவு நாள் வாழ உத்தேசம் என சென்னையில் அறிமுகம் ஆனா ஒரு வலைத்தோழி கேட்டது நியாபகத்திர்க்குள் வந்து போகிறது...பேரூந்தில் நின்று கொண்டிருக்கும் என் அம்மாவின் வயதுடைய பெண்ணிற்கு என் இருக்கையை விட்டு கொடுக்கிறேன்......ஹிந்தியில் நன்றி மகனே என்றார்கள்....தங்கைக்கு மாப்பிள்ளை தேடி அலைந்து கொண்டிருக்கும் அப்பா ஒரு வரன் வந்ததை பற்றி நம்பிக்கையோடு பேசினார் அலை பேசியில்.....

அஸ்மாவிடம் பேசினேன்...வார இறுதியில் தனக்கு பாரில் வேலை இல்லை என்றும் அப்பொழுது சந்திக்கலாம் என்றாள்....பணம் எதுவும் வேண்டாம் என்றும் அவள் சமையலை சாப்பிட்டு போகும் படியும் கேட்டாள்.....சரி என்றிருக்கிறேன்.....

இந்த தனிமையே நீடிக்க வேண்டும் என்ற நினைத்தாலும்....ஏதோ ஒரு இனம் தெரிய உணர்வு என்னை பயம் கொள்ள செய்கிறது .........மறுபடியும்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சில பெயர் காரணங்கள்....

சில ஊர்களின் பெயரை கேட்க்கும்போது எப்படி இந்த பெயர்கள் தோன்றியிருக்கும் என்று யோசிப்பதுண்டு...அதுபோலவே சில சொலவடைகளும்..! எங்கோ கேட்ட படித்த வழக்கில் மட்டுமே உள்ள சில பெயர் காரணங்கள் இங்கே..


காயலான் கடை:
மன்னர்கள் காலத்தில் காயல்பட்டினம் மிகபெரிய துறைமுகம் கொண்ட நகரம். ரோம் நகரில் இருந்து பண்ட பரிமாற்றங்கள் நடைபெற்ற துறைமுகம் இது....வாணிபத்திற்காக பயன்படுத்தப் பட்டாலும்...பழைய மற்றும் அறிய பொருட்களை வியாபாரம் செய்யும் இடமாக மாற்றம் பெற்றது காயல்பட்டினம்...பல பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு பண்ட மாற்றிர்க்காக வந்து செல்ல துவங்கியிருந்தனர்...அப்போது மக்களிடத்தில் இப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் காயல்பட்டினத்தான் கடை என்று அழைக்கப் பெற்றது....பின்பு காலஓட்டத்தில் மருவி காயலான் கடை என்றானது.



கட்டாரன் காய்:
கங்கைகொண்டான் கட்டாரம் வென்றான் என்று ராஜ ராஜ சோழனுக்கு ஒரு பட்டமுண்டு...தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது கங்கை உட்பட இன்று ஆசியகண்டம் என்றழைக்கபடும் பல பகுதிகளின் உள்ள நாடுகளை போரிட்டு கைப்பற்றி அங்குள்ள ஆறுகளில் இருந்து 108 குடங்களில் தண்ணீர் ஊற்றப்பட்டது என்பது வரலாறு. கட்டாரங் என்பது இன்று மலேசியாவில் உள்ள ஒரு நகரம். ராஜ ராஜன் வென்ற நாடுகளில் மலேசியாவும் ஒன்று..வெற்றியை கொண்டாட அங்கிருந்து கொண்டுவந்த விதைகளை இங்கு நட்டு வளர்க்க...அதற்க்கு கட்டாரங்க்காய் என்று பெயர் பெற்றது (கட்டாரங் காய் என்பது எலுமிச்சையை விட பெரிதாக ஆரஞ்சு பழத்தை விட கொஞ்சம் சின்னதாக இருக்கும்...தென்னகத்தில் இத ஊறுகாயாக பயன்பாட்டில் இருந்தது..)

இன்றும் இந்தோனேசியாவில் மன்னர் பொறுப்பேற்கும் வைபவத்திலும் மற்றும் அதிபர் பொறுப்பேற்கும் போதும் 11 திருமூலரின் பாடல் வரிகளின் மேல் பிரமாணம் எடுப்பதாக செய்திகள் உண்டு.




நிக்கோபார் தீவுகள்:
நாகபட்டினத்தில் இருந்து நாலு கால் வாரத் தொலைவில் உள்ளதாக குறிக்கப்பெற்றது இந்த தீவு ....அங்குள்ள மீனவர்களால்....பின்பு அதுவே சுருக்கம் பெற்று நாள்கார்வார் தீவுகள் என்றானது....பின்பு வெள்ளையர்கள் காலத்தில் அவர்கள் உச்சரிப்பின் காரணமாக நிக்கோபார் என்றானதாக நாகபட்டினத்தில் வழக்கில் உள்ள கதைகள் உண்டு .