வெள்ளி, 24 ஜூன், 2011

முக புத்தத்தில்(FACE BOOK) பதிந்த சில STATUS MESSAGES

காளைகளை அடக்குவது சவாலான விஷயம் தான்..(ஜல்லிக்கட்டில்)
மான்களை அடக்க முற்ப்பட்டு நான் கற்றுக் கொண்டது..! :) :)
.........................................................................................................

நள்ளிரவு நேரத்தில் அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறாய் என்கிறாள்....

உனது இதயத்தில் என்றேன் சட்டென்று.....!
பதிலற்று அவள்...வெட்கத்தில் சிவந்த இரவு விடியலானது..! :) :)
..........................................................................................................

இப்போவே TICKET BOOK பண்ணுடா..அப்போதான் போனோமா ஜம்முனு கால் மேல கால் போட்டு படம் பாத்துட்டு
வந்துட்டே இருந்தோமான்னு இருக்கும் என்றாள்....

மெதுவாக அவள் பக்கம் திரும்பி, யார் கால் மேல யார் கால போட்டு என்றேன்? :( :(
முறைத்து பார்க்கிறாள்...
(26 ம் தேதி தனியா தான் படம் பாப்பேன்னு நினைக்கிறேன்)
.........................................................................................................

What's the best way to send frnds request to gals in FB???????(hardly thinking..!)
.........................................................................................................

நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் போது அவளது அழைப்பு(அலைபேசியில்)..

நான் உன்னுடன் இப்பொழுது பேச விரும்பவில்லை என்றேன்...!

சற்று அதிர்ச்சியுடன் எதற்கு என்றாள்? :(

உன்னுடன் பேசுவதும் ஒரு K.F STRONG BEER அருந்துவதும் ஒன்றுதான் என்றேன்.
BEER அருந்திக் கொண்டே உன்னுடன் பேசினால் போதையின் உச்சத்திற்கு சென்று மயங்கிவிடுவேன்
என்றேன்.

வாய் இல்லேன்னா உன்ன நாய் தூக்கிட்டு போயிடும் என்றாள் சிரித்துக் கொண்டே. :) :)
........................................................................................................

பூஜை புனஸ்காரங்கள் மற்றும் விரதம் இருந்துதான் தேவதைகளின் அருள் பெற
முடியுமா என்ன???

உற்சாகமான,கள்ளம் இல்லா மனதிருந்தாலே போதுமே.! :)
தேவதைகளின் அருள் கிடைக்குமே?
கிடைத்தது எனக்கு..இன்று.
570 AC பேரூந்தில் அலுவலகம் சென்ற பொழுது..!
:) :)
....................................................................................................

சீரான விசையில் சென்று கொண்டிருக்கும் பொழுது..
இடறி விழுந்து சிதறிப் போகிறது மனது.
கடந்து போகும் தேவதைகள் விட்டுச் செல்லும் அதிர்வுகளால். காயம்பட்டு வெற்றிடங்கள் உருவாகி வெறுமை கொண்டது மனது.
சுவாசம் தடைபட்டு தவிக்கிறேன்..
இதயம் முழுவதும் வெற்றிடமாய் ..

இட்டு நிரப்ப காத்திருக்கிறாளோ எவளோ ஒருத்தி?? :)
வரம் கொடுப்பதும்.. வதம் செய்வதும்..
தேவதைகளுக்கு விளையாட்டாகிப் போவதேன்?
................................................................................................
..............................................................................................

எனது உயிரினும் மேலாக உன்னைக் காதலிக்கிறேன் எனும்போதும்
சரி என்று ஒற்றை வார்த்தையில் நி கடந்து போகையில்...
கோபம் உன் மேலல்ல...

உன் மீதான என் காதலை சரியான வார்த்தைகள் கொண்டு கோர்க்க கூட முடியவில்லையே
என்று என் மேல்தான் அதிகம் கோபம் கொள்கிறேன்...

உன்னை நேசிக்கிறேன்...
என் உயிரினும் மேலாக...! :) :)

.............................................................................................



இரக்கமற்ற ஜீவன் என்றால் அது கண்டிப்பாக பெண்களாகத்தான் இருக்க வேண்டும்..........
நிமிடங்களில் மனதை கொள்ளை கொள்பவர்களும் அவர்கள்தாம்.........
நிமிடங்களில் மனதை கொல்பவர்களும் அவர்கதாம்.........!
செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் சாபம் இது..........
..............................................................................................

suffering frm severe neck pain..! :(
சுளுக்குக்கு பாட்டி வைத்தியம் செய்ய ஆள் இல்லாததால..
பேத்தி வைத்தியம் செய்து கொண்டேன்
Yes.., The Lady Doctor was too young. :)
.............................................................................................

வார்த்தைகளுக்குண்டான சக்தியை..
சிறு முத்தங்களுடனான ஸ்பரிசம் வென்று விடுகிறது
சில சமயங்களில்..!
:) :)(காதலர்களுக்கிடையே மட்டும் )
.............................................................................................

பேரூந்தில்தான் அலுவலகம் செல்கிறேன்...!
நொடிப் பொழுது பார்வை பரிமாற்றங்களும், சிறு குறு நகையும்..
காற்றில் பறக்கும் கவிதைகளாக..
:) :)

BIKE இப்போ வீட்ல REST எடுக்குது :) :)

BIKERS uh பாத்தா இப்போ பாவமா தெரியுது..!
..........................................................................................

Life Is Simple.
But May Changes According To PPl's Vision..
The Mre U see As Complicated, The Mre It 'll Luks Filled With Complications..
Hav A Simple Vision...
..........................................................................................
துணை தேடி அலைகையில், தனிமை
மட்டுமே துணையாய்..

தனிமை விரும்பிய தருணங்களில் உடனிருக்கும்,
துணையே வினையாய்...!

:) :)

LIFE IS A CIRCLE BOSS..!
..........................................................................................
ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம்..!
நான் ரசித்த அந்த வரிகள்....

100 இல் போனால்,பின்னால் 108 துணைக்கு வரும்
:) :)
...........................................................................................

காதலிப்பது தான் என்னை சந்தோஷப்படுத்துகிறதென்றால்...
காலம் முழுவதும் காதலித்து கிடக்கவே விரும்புகிறேன்.....

நான் காதலன்....
:) :)
................................................................................................
ஐ.டி நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த பொழுது,
வண்ணத்துபூச்சி ஒன்று நெஞ்சினில் மோதி படபடத்தது...!
வண்டியின் வேகம் குறைத்து, சாலையோரம் நிறுத்தினேன்..

படபடப்புடன் பறந்து போனது பட்டாம்பூச்சி, என் நெஞ்சில் உள்ள காதலனைத்தும்
அதனிடம் கொட்டி விடுவேனோ என்று பயந்து...
:) :)
பட்டாம்பூச்சி விட்டு சென்ற கந்தக நிற கலவை என் நெஞ்சினில்
இன்னும் மிச்சமாக.......
.............................................................................................................

Selecting A Relationship is a Hard Thing To Deal With....! :) But Most Of The People Are Doing The Right Thing By Selecting A Wrong One...!

.............................................................................................................

I wanna Pause Ma Life In This Dream, But I know Its Not Possible, But Lemme Close Ma Eyes At least..Don't Wake Me Up..! :)
...........................................................................................................

Though its been losing a year of lifetime, ppl are always happy to celebrate their Birthday..! :) Today Am Entering Into My 32. I Feel Gud That Am Surrounded By A Lots Of Good ppl's.
............................................................................................................

சந்திப்பு முடிந்து கிளம்பும் போது முத்தம் வேண்டுமென்றேன்..!
நாம் ஏன் காமம் கடந்த காதலாக நம்முடைய காதலை மாற்றக்கூடாது
என்றாள்? :(
சுரத்தே இல்லாமல் மாற்றலாம் என்றேன்..!
காதலுடன் சிரித்த படி எனது கன்னம் கிள்ளி நான்கு முத்தங்கள்
வைத்து இப்போ OK வா என்றாள்.
முத்தம் கிடைப்பதை விட அதை வாங்கும் முயற்சியில்தான்
கொப்பளித்து கொந்தளிக்கிறது காதல்..!
......................................................................................................

உனது சந்தோஷமே எனதும்...!
என்னை பார்க்காமல் இருப்பதுதான் உன் சந்தோஷத்தை
அதிகரிக்கிறதென்றால் அதற்கும் நான் உடன்படுவேன்...
சுயநலமற்றது உன்னுடனான எனது காதல்..
.....................................................................................................
நீ நீயாகவே இருக்க வேண்டும் என நினைப்பதால்...
நீ இப்படி இருக்கலாம் என்ற என் எண்ணங்களை எனக்குள்ளே கொன்று புதைக்கிறேன்..

சில கொலைகளும் கூட சந்தோஷத்தை தருமோ???
:) :)
..................................................................................................

நாளை உலகம் அழியுமென்றால் மிக மிக சந்தோசம் கொள்வது நானாக மட்டுமே இருப்பேன்..!
உன்னுடனான நினைவுகளை கடைசியாக கொண்டு மரித்துப் போவதென்பது
எனக்கு வரமென்பேன்..!
காதலிக்கிறேன் என்று ஒற்றை வரியில் அடக்கக்கூடியதல்ல
என் காதல்..!
..................................................................................................
பேசா நிமிடங்களின் நகர்வு அழகு..!
பேரூந்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த 16 வயது பெண் குறுகுறுப்புடன்
எனைப் பார்த்து கொண்டே....

பேரூந்தை விட்டு இறங்கும் பொழுது எனைப் பார்த்து சிந்திய ஒரு புன்னகை
கவிதை.! :)
...............................................................................................

முந்தய நாள் பௌர்ணமியாக....
நிலவை காணவில்லை நேற்று...

கோபத்துடன் அலைபேசியில் கத்திக்கொண்டிருந்த அவளிடம்
நிலவை காணாமல் செய்துவிட்டாய் என்றேன்..

குழப்பத்துடன் மௌனமானாள்..
நிலவை விட மெல்லியதான நீ கோபமானதால் சிவந்த
உன் முகம் கண்டு, சூரியன் உதித்து விட்டது என்ற
தப்பான எண்ணத்தில் சென்று விட்டது நிலவேன்றேன்.

கோபத்தில் சிவந்த முகம் இப்பொழுது வெட்கத்தில் சிவந்தது...

:) :) :)
...........................................................................................

சமயங்களில் சைத்தான் குடியேறுகிறது மனதில்...
உன்னை சந்தேகிக்க வற்புறுத்துகிறது...

சந்தேகம் கொள்கிறேன்...
என் மீதும்...உன் மீது நான் வைத்திருக்கும் காதலின் மீதும்....

உண்மையான அன்பில் சந்தேகம் எதற்கு....
உண்மைகள் கொண்டு உருவேற்றுகிறேன் நம் காதலை...
..........................................................................................

காணும் இடங்களனைத்தும் எனக்கான உன் நினைவுகளை..
நாம் பகிர்ந்து கொண்ட சந்தோஷ தருணங்களை..
பரிசளிக்கிறது...

நீ இல்லாத இந்த தவிப்பான பொழுதுகளை..
பகிர்ந்து கொண்டு
என்னை மென்சோகத்தில் இருந்து மீட்க்க போராடுகிறது..
இந்த மாநகரத்து சாலைகளும் மரங்களும் பாலங்களும்.....

சீக்கிரம் விடுமுறை முடித்து வந்து சேரடி என் கண்மணி..
.......................................................................................

நீ இல்லாமல் இருப்பதால் நான் படும் வேதனையை
நேற்று நிலவோடும் மேகக் கூட்டத்தோடும் பகிர்ந்துகொண்டேன்...

வெறுமை தாங்க முடியாமல் நிலவு மறைந்து போனது...
கட்டுபடுத்திக் கொண்டு ஆறுதல் சொன்ன மேகமாலும் கூட தாங்க முடியாமல்
கரைந்துருகி பொழிந்து விட்டது மழையாய்......

பிரிவு துயர் நீக்க முடிவெடு என்னவளே....
அயல் மாநிலத்து பயணம் முடித்து சீக்கிரம் வந்து சேரடி என் கண்மணி...

(நேற்றைய மழையில் இட்ட STATUS message இது...என்னவள் இப்பொழுது கன்னட தேசத்திற்கு சென்றிருக்கிறாள் :( )