செவ்வாய், 13 நவம்பர், 2018

அசுரன்


\\ஆழ் நித்திரையில் கனவில் தோன்றி ஒரே ஒரு வரம் மட்டும் கேட்க
சொன்னது தேவதை..
பேராசையின் உச்சத்தில் தேவதையையே வரமாக கேட்டேன்
சினம் கொண்டு சீறி மறைந்து போனது தேவதை

தேவதைகளை துரத்தியலைந்து தோல்வியுற்ற அசுரர்
கூட்டத்தில் ஒருவனானேன் கலைந்து போன கனவின் முடிவில் //


\\அசுரரின் காதல் மிருகத்தையொத்தது
தேவரின் காதல் மனிதத்தையொத்தது

மிருகத்தின் காதல் வஞ்சகம் சூழ்ச்சிகளற்றது
மனிதத்தின் காதல் வஞ்சகம் சூழ்ச்சிகள் கொண்டது...

வஞ்சக சூழ்ச்சிகளில் மயங்கி கிறங்கி தேவரிடம் இரையாகி போகவே
இசைந்து உருகுகிறது தேவதைகள்...

மிருக காதல்களை உதைத்து உதாசீனப்படுத்துவதை
சிலாகித்து செய்கின்றது தேவதை //

\\ தேவதைகளுக்கும் அகவை விதிவிலக்கல்ல
குட்டி போட்டு வயிறு பெருத்து பருத்து விரிந்து தொங்கும்
மார்பகங்களை பெற்று மூட்டு வலியின் ஆரம்ப நிலையை நெருங்கும்
போது....

தேவர்களின் காதல் வஞ்சகமானது சூழ்ச்சிகளை கொண்டது என்றுணரும்
தேவதைகள்.//

\\ஏக்கத்துடனும் ஆற்றாமையுடனும் உன்னை மிஸ் பண்ணிட்டேன்டா
என அசுரர்களை நோக்கி அழுது புலம்பியபடியே தேவதைகள் //