திங்கள், 25 பிப்ரவரி, 2013

கனவுகள் விற்ப்பனைக்கு (பாகம் 2)


இன்னைக்கி கண்டிப்பா இந்த ரெகார்டிங் முடிச்சே ஆகணும்னு வேகமா ரெகார்டிங் தியேட்டர் பக்கம் போனா அங்க செல்வா செம்ம பிஸியா வேற ஒரு ரெகார்டிங் வேலைல இருக்கான்...இவங்களோட இதே பொழப்பா போச்சுன்னு கம்போசிங் ரூம்க்கு போற வழில ஒரு பெரிய வீணை ஒன்னு..இன்னைக்கி வேலை முடியலேன்னா கையில காசு கிடைக்கதுன்க்ரா டென்ஷன் வேற..அதுல வீணை எப்டி பெருசா தெரியும் எனக்கு? தாண்டி போயி கம்போசிங் ரூம் கதவை திறக்க போறப்போ அறிவிருக்கா உனக்குன்னு ஒரு குரல்....



ஆம்பள குரல இருந்த பொளேர்னு விட்டுட்டுதான் பேசியிருப்பேன்..ஆனா கேட்டது ஒரு பொண்ணு. திகைச்சி போயிட்டேன்...என்ன எதுன்னு புரியிறதுக்கு முன்னமே எகிறிட்டா அவ...வீணை தாண்டினது குத்தமாம். வீணை அவளோடது அப்டீங்க்றதும், சர்வதேச கச்சேரிகள் பண்ணியிருக்கானும் இங்க ஒரு ரெகார்டிங்காக வந்திருக்கானுலாம் எனக்கெப்படி தெரியும்..நானும் 2 , 3 வாட்டி சாரி சொல்லி பாத்துட்டேன்...புது ரேடியோ மாதிரி அதே வால்யும். இப்போ என்னங்க பண்ணனும்? தாண்டிட்டேன். தப்புதான். மன்னிப்பும் கேட்டுட்டேன். இதுக்கு மேல என்ன பண்ணனும்னு இப்போ சத்தம் போடறீங்கன்னு கேட்ட பிறகுதான் கொஞ்சம் சத்தம் குறைஞ்சது அவகிட்ட....



இதுக்குள்ள செல்வா நம்ம ரகு(அவன்தான் வயசு கம்மியானவன் அந்த தியேட்டர்ல. டி வாங்க சாப்பாடு வாங்கனு அவனுக்கு வேலை அங்க) எல்லாம் கூடிட்டாங்க...கூடி மேடம் விட்ருங்க மேடம் அவர் தெரியாம பண்ணிடார்னு எனக்காக அவங்க வேற சாரி கேக்க அப்டியே முறைச்சி பாத்துட்டே அவளோட ரெகார்டிங் டைம் கேட்டுட்டு கிளம்பிட்ட.....அவ கிளம்பின உடனே செல்வாவும் ரகுவும் மத்த பசங்களும் ஏன்னே இப்டி காலையிலேயே கடையை சூடேத்தி விட்டேன்னு கலாய்க்க ஒழுங்கா என்னோட வேலையை எனக்கு முடிச்சி குடு செல்வா அப்டின்னு செல்வாட்ட சொல்லி வேலையை ஆரம்பிக்க சொல்லி, ரகுட்ட டி சொன்னேன்...



அன்னைக்கி 2 மணிநேரம் ரெகார்டிங் செஞ்சிட்டு செல்வா வேற வேலைக்கி தாவிட்டான்..நா என்னோட வேலையை பாக்க கிளம்பிட்டேன்.....

அடுத்த நாள் பாக்கி வேலையை முடிக்க கிளம்பிட்டேன்...நம்ம ரேடியோ ஜாக்கி சுசித்ராதான் டப்பிங் குடுக்க பேசியிருந்தேன்...அந்த இந்தான்னு வேலை முடிஞ்சா பிறகு பேசின அமௌண்ட் 4500 செட்டில் பண்ணா அந்தம்மா குதிக்க ஆரம்பிச்சிட்டா...எனக்கு பேசினது 5000 இப்போ 4500 தந்தா என்ன அர்த்தம்னு....அய்யோ ஐயப்பானு நெனைச்சிக்கிட்டேன்...சபரி காரன் கிடையாது...இது என்கூட தான் என் கம்பெனில வொர்கிங் பார்ட்னர் வேலை பாக்குது...அவன் பண்ண வேலை. அன்னைக்கி பாத்து கைல காசு வேற இல்ல...ரெகார்டிங் தியேட்டர்ல எவன்ட்டையும் ஐநூறு இல்ல...கரெக்டா நேத்து சண்ட போட்ட பொண்ணு வர்றா....



ரகுகிட்ட சொன்னேனே டேய் தம்பி எனக்கு இப்போ காசு வேணும்..அந்த பொண்ணுகிட்ட இருந்தா வாங்கி குடுடா...ஆனா எனக்குன்னு கேக்காத தரமாட்டானு ஐடியா வேற குடுதனுப்பினேன்..ரகு சின்ன பையன்.. யார்னாலும் அவன பாத்தா ஒரு சிரிப்போட பேச ஆரம்பிக்கிற முகம்...கடை நிலை ஊழியர்கள் எல்லாமே அப்டித்தான கஷ்டத்த மனசுல வைச்சாலும் சிரிப்பா உதட்டுல வைச்சிருப்பாங்க...


ரகு போயி அவகிட்ட கேட்ட உடனே காசு குடுத்தா...மடையன் நேரா வந்து அவ பாக்கும்போதே என் கைல காச திணிச்சி இந்தான்னான்னு சொல்லிட்டு அப்பீட் ஆகிட்டான்...எனக்கு மிர்ச்சி சுசிய இங்கிருந்து கிளப்பணும்...அதனால காச கைல குடுத்து கிளப்பி விட்டேன். இனி உன் விளம்பர படங்களுக்கு டப்பிங் பேச மாட்டேனு சவுண்ட் விட்டுடே போச்சு நம்ம சுச்சி...எல்லாம் முடிச்சிட்டு நிமிர்ந்து பாத்தா இவ வைச்ச கண்ணு வாங்காம என்னையே பாத்துகிட்டு நிக்கிறா(முறைச்சிதான்)....இந்த சண்டாள பய ரகு கரெக்டா டியோட வந்து நிக்கிறான்...நா ஒன்னு எடுத்துக்கிட்டேன் இப்போ ஸ்டூடியோ வெளில நானும் அவளும் நிக்கிறதால ரகு அவட்ட டி கிளாஸ் நீட்ட அவ வேண்டாம்னா...மாமி மெஸ்ல வாங்கினதுதான் பரவால குடிங்க அப்டினேன்...ரகு இவன என்னடா பண்றதுங்கற தோரணைல என்னை ஒரு பார்வை பாக்க அவ டீயை எடுத்துகிட்டா...


கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கலைனாலும் கொஞ்சம் அசிங்கமா இருந்தது, தெரியாதவங்கிட்ட அதுவும் முதல் சந்திப்பே சண்டை போட்டவங்கட்ட, கடன் வாங்கினது..சமாளிக்கனுமே அதனால பேசலாம்னு முடிவு பண்ணேன்...வேலை டென்சன்ல அவள சரியா பாக்கல...யாத்தி என்ன அழகா இருக்கா அப்டின்னு தோணிச்சி முதல் முறையா அவகிட்ட பேசணும்னு யோசிச்சப்போ...பொண்ணு சான்சே இல்ல...சக்க பிகர்....அதாவது குடும்ப குத்துவிளக்குனு சொல்வோமே அந்த மாதிரி...பெயர் என்னனு கேட்டேன்...காய்திரினா....அப்டியே பேச ஆரம்பிச்சோம்...ஸ்டெல்லாமெரில படிச்சதும் திருவாரூர் பூர்விகம்னும் பலகோடி ரூவா சொத்தும் வீடும் நம்ம கபாலி பேட்டைல (மயிலாப்பூர்) இருக்கும்னு தெரிய வந்தது....இது வரைக்கும் எந்த புள்ளைட்ட பேசும்போதும் ஒரு குறுகுறுப்பு வந்ததில்ல...என்ன ஊர் பக்கம் சண்டியன் தோரணைல அலைஞ்சதால ஒருத்தியும் பாக்க மாடளுக..என்ன எங்க தேவமாரு புள்ளைங்க மட்டும் எரியகுள்ள சண்டைல நம்ம பேரு மாட்டும் போது சிரிச்சு கிண்டல் பண்ணிட்டு போவாள்க...சுத்தி முத்தி தேடினா ஒரே கிளைல வந்து நிப்பாள்க....கொண்டயன்கொட்டார் கிளைல அம்மா கிளைலையே பொண்ணு கட்டலாம்னு கேள்வி பட்டதுல இருந்தே அவங்கள தேவமாருனே நாங்க சொல்ல மாட்டோம்...கூறுகெட்ட கூதியுள்ளைக....அம்மா கிளைல கெட்டுனா தங்கச்சி முறைல...அப்புறம் மொட்டைகுண்டி பயகளுக்கும் நமக்குமென்ன வித்தியாசம்னு ஒரு வெறுப்புதான்....ஆனா காயத்ரிட்ட பேசும்போது ஒரு நல்ல பீல் மனசுக்குள்ள...சாதரணமா நம்ம பக்கத்துக வீடுகாறன்கட்ட பேசற மாதிரி பேச ஆரம்பிச்சிட்டோம் அரைமணி நேரத்துக்குள்ள....எனக்குனா ஆச்சிர்யம் ....ரகுவும் செல்வாவும் ஏதோ பேசி சிரிசிக்கிடானுங்க....அப்புறம் அவளோட டீடைல் தெரிஞ்சது..பெரிய பெரிய கர்நாடக இசை ஜாம்பவன்களோட இசை கச்சேரி செஞ்சிருக்கானும், இசைதான் மூச்சுனும்,வீணை மட்டுமே தன்னோட காதலன்னும் சொன்னா....காமக் கண் கொண்டு பாக்காம முதல் முதலா ஒரு பெண் சிநேகம்...பெருசா மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கலத்தான்...ஆனாலும் பேசிட்டே இருக்கணும்னு தோன வைச்ச பொண்ணு.....