செவ்வாய், 13 ஜூலை, 2010

சிதறல்கள்....!

இன்று ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தது....! இரண்டு நாட்களுக்கு முன்புதான் பதிவர் ஜாக்கி சேகர் இரு சக்கர வாகன விபத்துகள் குறித்து ஒரு இடுகை இட்டிருந்தார்.

இரண்டாம் ஷிப்ட் என்பதால் சுமார் இரண்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன்...அதிகாலை தவிர மற்றைய நேரங்களில் எனது வேகம் மிதமாகவே இருக்கும்...அறுபது கிலோமீடர்க்கு வேகத்திற்கு மேல் செல்வதில்லை....இன்றும் அதே போல் அதே வேகத்தில் சென்றுகொண்டிருந்தேன்....திருவான்மியூர் ஐ.டி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது...ரோட்டின் இந்த பக்கத்தை பார்க்காமலே சாலையை கடந்து கொண்டிருந்தான் ஒரு மாணவன்...பாதி சாலையை கூட அவன் கடக்கவில்லை என்பதால் சரி நாம் போய்விடலாம் என்றெண்ணி நான் என் வேகத்தை குறைக்கவில்லை....திடீரென என்ன நினைத்தானோ மீதி தூரத்தை ஓடி கடக்க முயற்சித்தான்...அவன் ஓட ஆரம்பிக்கும்பொழுதே எனக்கு தெரிந்து விட்டது ஏதோ நடக்க போகிறது என்று...ஆனால் யோசித்து பிரேக் போடும்போது வண்டி கட்டுபாட்டை இழந்து அவன் மேல் மோதிவிட்டது...நான் வண்டியில் இருந்து தூக்கி வீசப் பட்டேன்...விழுந்த மறு நொடியே ஹெல்மெட்டை கழட்டி கையில் வைத்துக் கொண்டு அவனை நோக்கி ஓடினேன்...அவன் எழவே இல்லை...மயங்கிவிட்டானோ என்று நினைத்து...நடு சாலையில் இருந்து அவனை இழுத்து கொண்டு சாலையின் ஓரத்திற்கு வந்தேன்.....பின்பு அவனை பார்த்த பொழுது சுயநினைவுடனே தான் இருந்தான்...

அதற்குள் அங்குவந்த இன்னொரு மாணவன் கொஞ்சம் தண்ணீர் கொடுக்க அடிபட்டவன் சற்று அசுவாசமாகினான்...ஆனாலும் 108 க்கு அழைத்தேன்...உள் காயம் ஏதும் பட்டிருக்குமோ என்று ....அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆம்புலன்சே வந்துவிட்டது...ஆனால் அந்த மாணவன் அடி இல்லை என்று சொல்லி கிளம்பிவிட்டான்...அம்புலன்சில் உள்ளவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு...108 க்கு மறுபடியும் அழைத்து எனது நன்றியை தெரிவித்து கொண்டேன்..! இங்கே 108 ஐ பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்...ஹைதராபாத்தில் இந்த சேவை வெகு முன்னரே வந்துவிட்டது...எந்தபகுதியிலும் சாலைவிபத்து நடந்தாலும் உடனே அழைத்து தெளிவாக சம்பவம் நடந்த பகுதி எது என சாலையின் எண்ணுடன் குறிப்பிட்டுவிட்டால் அடுத்த இருபது நிமிடத்திற்குள்(அதிகபட்சமாக) ஆம்புலன்ஸ் அங்குவந்து விடும்...விபத்து நடந்து சில நிமிடங்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி கிடைக்கபெருவதால் நிறைய உயிர்கள் காக்க பெரும்.


நேற்று தங்கைக்கு உடல்நிலை சரி இல்லை என்று சொன்னதால் அலுவலகத்தில் அனுமதி எடுத்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிட்டேன்...இது மழை நேரமென்பதால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள்...கோடம்பாக்கத்தில் உள்ள இருபத்திநாலு மணிநேர சேவை மருத்துவமனைக்கு சென்ற பொழுது இன்றைக்கு பார்க்க வேண்டிய நோயாளிகளுக்கான டோக்கன் கொடுத்தாகிவிட்டது என்றார்கள்....இனி நாளைதான் பார்க்க முடியும் என்று வேறு தகவல்....இந்நகரத்தின் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இங்கே அனைத்தும் வியாபாரமாகிவிட்டது...

வேறொரு மருத்துவமனைக்கு போனோம்....தங்கைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் காத்திருக்கும் போது என் தோள்களில் சாய்ந்துகொண்டாள்....எங்களை கடந்து போன ஒரு நர்ஸ் எங்களை பார்த்து புன்னகைத்து டாக்டர் ரௌண்ட்ஸ் போயிருக்கார் இதோ வந்துவிடுவார் என்றார்...சொன்ன படியே டாக்டர் வந்தார்...மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஒரு ஊசி போட வேண்டும் என்றார்....எங்களை பார்த்து புன்னகைத்து போன அதே நர்ஸ் தான் ஊசி குத்தினார் தங்கைக்கு.... மருந்து சீட்டில் நோயாளியின் பெயரில் பெயர் எழுத மறந்து விட்டார் டாக்டர்....அந்த நர்ஸ் என் தங்கையிடம் பெயர் கேட்டு எழுதிக் கொடுத்தாள்.....முன்பகுதியில் இருக்கும் ரிசெப்சனில் பணம் கட்டும்படி கேட்டுகொண்டாள்.......ரிசெப்சனில் பணம்கட்டும்போது மருந்துசீட்டில் பெயர் பார்த்தால் திருமதி என்று விளித்து தங்கையின் பெயர் எழுதியிருந்தது....

வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் இருந்தால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன் மனைவி மட்டுமே என்ற கேடுகெட்ட கண்ணோட்டம் இந்த ஊரில் மட்டுமே பார்க்கமுடியும்......



பெண் தோழிகளில் புது வரவு இது.....நெடு நாட்களாக அலைபேசியில் மட்டுமே பேசிகொண்டிருந்தோம்....நிழற்படங்கள் பரிமாறிக்கொண்டாலும் நேரில் பார்க்க வேண்டும் என்று நெடு நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்....அந்த நாளும் வாய்த்தது. நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்திலுள்ள அந்த பன்னாட்டு கம்பனியில் அவளை சந்தித்தேன்...தொலைபேசியில் பேசியிருந்ததால் நேரில் பார்க்கும் போது எவ்வித தடுமாற்றம் இல்லை....குறும்புத்தனமான பேச்சினால் அவளுடன் இருந்த அரைமணி நேரமும் அரை நொடி ஆகிவிட்டாள்....

நேற்று இரவு ஏனோ தூக்கம் வரவில்லை...அவளுக்கு அலைபேசினேன்....திடீரென்று அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது...சொன்னேன்...தைரியம் இருந்தால் வீடிற்கு வா என்றாள்...போர்டிகோவில் இரண்டு பெரிய வெளிநாட்டு நாய்கள் இருக்கின்றன என்ற எச்சரிக்கை மீறி புறப்பட்டேன்...புறநகரில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி அது....

தெருக் கோடியில் வண்டியை நிறுத்திவிட்டு செருப்பை கழட்டி வண்டியின் டேன்க் பையில் வைத்துவிட்டு அவள் வீடு நோக்கி சென்றேன்....(மனதில் இருபது வயதில் ஒரு காதலிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி முத்தமிட சுவறேரிய நியாபகம் வந்து போனது..) அவளின் வீட்டு சுவறேரிய பொழுது உயிர் என் கைகளில் இல்லை...அடுத்து நடக்க போகும் அத்தனை நிகழ்வுகளுக்கும், நிகழ்வாக ஆகாமல் (சமுதாயத்தின்)மனதில் ஆழத்தில் உள்ள ஆபாசமான கற்பனை எண்ணங்களும் ஹாய்சங்களாகி போனாலும் அதற்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் நான்... இருபதுகளில் இருந்த தைரியம் முப்பதில் கொஞ்சம் குறைந்திருக்கிறது...ஆனாலும் மனதில் ஒரு குறுகுறுப்பு எனக்குள்...நாய்களுக்கு மட்டும் பயந்து கொண்டே உள்ளே குதித்தேன்....இரண்டு கார்கள் நான் இருந்த இடத்தில் நின்றதால்...நாய்கள் கார்களுக்கு அப்பால் படுத்திருந்தது....

அது பின்னிரவு பொழுது...அப்பொழுதும் விளக்கேரிகிரதென்றால் அது கண்டிப்பாக முதியவர்கள் வசிக்கும் அறையாய் இருக்காது என்ற என் கணிப்பு சரியாய் இருந்தது....அங்கே அவள்தான்...எனை பார்த்ததும் அதிர்வின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள்....விளயாட்டிர்க்குதான் சொன்னேன் என்றாள்....அறைக்குள் இருந்ததால் அவளை முத்தமிட முடியவில்லை....பறக்கும் முத்தங்கள் கொடுத்து விட்டு பறந்து வந்து விட்டேன் வீட்டிற்க்கு....ஆனாலும் சிறிய சறுக்கல் ஏற்பட்டிருந்தால், வாழ்வின் அடுத்த பகுதியில் கற்பழிப்பு முயற்சியிலோ....அல்லது திருட்டு குற்றத்திலோ உள்ளே சென்றிருப்பேன்...என்பது மூளைக்குள் இன்னும் பலமாக உரைத்துக்கொண்டே இருக்கிறது.

இனி இந்த மாதிரி காதல் விளையாட்டுக்கள் கூடாது என்று முடிவெடுத்து கொண்டேன்...!

திங்கள், 5 ஜூலை, 2010

பிரிந்து விடலாம் அம்மு ...!

எனக்கு மழை ரொம்ப பிடிக்கும்..! நான் மழை காதலன்...! பள்ளி பருவத்திலும் கல்லூரி காலத்திலும்...மழை வந்து விட்டால் சுத்தியிருப்பதேல்லாம் மறந்து நனைந்து ஆட்டம் போட்டு மகிழ்வேன்...! ஆனால் பின்பு பணிக்குச் செல்ல ஆரம்பித்த உடன் மழை காலங்களில் மழை ஏன் வருகிறது என்று யோசிக்க வைத்தது சென்னை நகரின் வடிகால் வசதி தன்மையும் போக்குவரத்து நெரிசலும்..! ஆனால் இன்று பெய்த மழையை மிகவும் ரசித்தேன்....உந்துருளியில் முழுவதும் நனைந்து கொண்டே வந்தேன்...! நினைவலையில் அம்முவுடன் கடற்கரையில் ஆடித் திரிந்த நினைவுகள் சிறிது போதயுட்டியது..!

அம்மு என்னை விட பத்து வயது இளையவள்..! அவள் சிறு பிள்ளையாக குட்டை பாவாடை அணிந்து ஒன்றாம் வகுப்புக்கு போகும்போது நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன்...அதன் பிறகு கால ஓட்டத்தில் அம்மு காணாமல் போனது....மறுபடியும் சென்னையில் சந்திக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருந்தது...பெண்கள்தான் எவ்வளவு வேகமாக வளர்ந்து விடுகிறார்கள்..! பொறியியல் பட்டம் பெற்று அதற்க்கு மேல் ஏதோ பட்டய படிப்பிற்காக சென்னை வந்திருந்தாள்...! அப்பொழுது அம்மு சில பிரச்சினைகளில் சிக்கியிருந்தது... தனித்திருந்த அம்முவிற்கு நான்தான் துணை..! சிறு குழந்தை என பழகினால் அம்மு என்னிடம் மிகுந்த முதிர்ச்சியான ஒரு உறவை கேட்டது...சில விஷயங்கள் நம்மால் உடனடியாக முடிவெடுக்க முடியாது...அப்படி முடிவெடுக்க முடியாமல் ஆரம்பித்தது தான் அம்முஉடன் நெருக்கமாக பழக நேரிட்டது..
பெண்களுடனான எனது மற்றைய உறவு போல் இதை நான் கருதவில்லை...ஏதோ ஒரு பிடிப்பு இந்த உறவில் இருப்பது போல் தோன்றினாலும் இந்த உறவு நெடிய உறவாக மாறுவதற்கு சாத்திய கூறுகள் அறவே அற்று போயிருந்தது...அம்மு மிகவும் உயர் சாதி என்னும் ஒரு பிரிவைச் சேர்ந்தது.....இதன் காரணமாகவே தான் காதலித்தவனை கரம் பிடிக்க முடியாமல் கடும் அழுத்தங்களுக்கிடையே சென்னையிலுள்ள சொந்தங்களின் வீடிற்கு அனுப்பப்பட்டதாக என்னிடம் சொல்லியிருக்கிறது...அந்த காதலன் கப்பலில் பணிபுரிபவன்...அவன் கப்பலேரிவிட்டான்...

நாங்கள் மிக நெருக்கம் ஆகியிருந்த கட்டம் அது...! அம்மு தன் வீட்டில் பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்கிறேன் என்றாள் என்னுடன் வாழ்வதற்காக...! நான் ஏதும் சொல்லவில்லை...! திடீரென ஹைதராபாத் வருமாறு வேலைக்கான அழைப்பு..! அம்மு நிறைய அழுதது..! பின்பு தன்னையும் சீக்கிரம் அங்கு அழைத்து செல்லுமாறும் கேட்டது..! படித்து முடி உனக்கும் அங்கேயே ஒரு வேலை வாங்கி விடலாம் என்று சொல்லி சென்றேன்...! தினந்தோறும் என்றிருந்த அலைபேசி அழைப்பு சில மாதங்களுக்கு பிறகு ஒரு வாரம் அணைக்கப்பட்டு விட்டது....ஏதோ பிரச்சினை என துடித்து போயிருந்தேன்... ஒரு வாரம் கழித்து அழைத்த போது அம்மு வெகுநேரம் அழுதது....

அழுது முடிக்கும் மட்டும் விட்டு பின்பு கேட்டேன்..என்ன பிரச்சினை என்று??? என்னை மன்னிப்பாயா ?? என்று திரும்ப திரும்ப கேட்டது??? ஏதோ பெரிய விஷயம் நடந்தேறியிருக்க வேண்டும் என்று மனது சொல்லியது. சரி என்றேன். என்னுடம் பேச்சை நிறுத்த கூடாது என்று சத்தியம் கேட்டது, செய்தேன். கப்பலேறிய அந்த காதலனின் கப்பல் சென்னை துறைமுகம் வந்திருந்ததேனவும் எல்லாம் மறந்து ஒரே ஒரு முறை எனது பழைய காதலி வேண்டும் என்று அவன் கேட்டதாக சொன்னது...
ஒரு நாள் முழுவதும் அவனுடன் தங்கியிருந்ததாக சொன்னது..! எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை....உண்மையான காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எப்பொழுதோ நான் சொன்ன எடுத்துகாட்டை மேற்கோள் காட்டியது.

அடுத்த சில நாட்களில் நிகழ்வுகள் வேகமாக நடந்தேறியது...அம்முவுடைய காதலன் அவள் வீட்டில் போய் மறுபடியும் பெண் கேட்க ....இம்முறை ஒத்து கொண்டார்கள்..!
அம்முவிற்கு அந்த பையனுடன் இன்னும் ஆறு மாதங்களில் மணம் நடக்க போகிறது. அம்மு நாளையுடன் சென்னை நகரை விட்டு சொந்த ஊர் செல்கிறது...!சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து பத்து நாட்களே ஆகின்றன....வேலை பளு காரணமாக அம்முவை பார்க்க இயலவில்லை இந்த பத்து நாட்களில்......கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்றது...அதுதான் இன்னைக்கு மழையில் நனைய ரொம்ப பிடித்து போனது...ஏனோ எவ்வித மனநிலையையும் மழை அடித்து சென்றுவிடும்...!

சந்தித்தேன் அம்முவை, சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம்...ஏனோ பேசிய விஷயங்கள் அனைத்தும் மனதிற் ஒட்டாமல் சம்ப்ரதாயதிர்க்கு பேசியது போலிருந்தது கிளம்பும் நேரம், வாழ்த்துக்கள் என்று கை கொடுத்தேன்....தொட மறுத்து விட்டது அம்மு....வேண்டாம் என்றது. வாழ்த்துக்கள் என்று சொல்லி பிரியும் போது அம்முவின் கண்கள் பார்த்தேன்...கொஞ்சம் கலங்கி போயிருந்தது...! அந்த பிரபலமான காபிக் கடையில் கொஞ்சம் இனிப்புகள் வாங்கிகொடுத்து இனிய பிரிவாக மாற்றினேன்...!

இவ்வளவு இலகுவான ஒரு பிரிவை சந்திப்பது முதல் முறை எனக்கு... சிறிய குறுநகை... மற்றும் வார்த்தைகளற்ற உணர்வு பரிமாற்றம்(கண்களால்)..


ஆட்டோவில் ஏறியதும் என்னை பார்த்து தலையசைத்தது அம்மு... அம்மு சென்ற பிறகு, எனது உந்துருளியை எடுப்பதற்கு செல்லும்வழியில் அலைபேசியை எத்தோச்சையாக எடுத்து பார்த்த பொழுது பதினாறு எடுக்கப்படாத அழைப்புகள் இருப்பதை கண்டு எடுத்து யாரென்று பார்த்தால்...



ஷைலு புஜ்ஜி என அழைப்புக்கு பெயர் சொன்னது எனது அலைபேசி...! ஷைலு ஹைதராபாத்தில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவி...! என்னுடனான இந்த உறவிற்கு அவள் வைத்திருக்கும் பெயர் - காதல்....!

வியாழன், 1 ஜூலை, 2010

ஆல் இன் ஆல் அழகுராசாவிர்க்கு பதில் இது...!

என்னமோ நபிகள் நாயகம் மட்டும்தான் குஜிலிகளுடன் கும்மாளமிட்டார் என எள்ளி நகயாடியிருக்கிறார் அழகு..! அது பொய் என்ற கருத்துக்கு நான் போகவில்லை...!

ஆம் உண்மையே...மனிதனாக பிறந்த எவருக்கும் வரும் இச்சைகளே அவருக்கும் வந்திருக்கிறது...! இறை தூதர் என்றாலும் மனிதனாக பிறந்து மாண்டு போனவர் தான் அவர்.

மாறாக பத்து கைகளுடன் பத்து கால்களுடன் தோற்றம் கொடுக்கும் கிராபிக்ஸ் வேலை எல்லாம் அவர் காண்பிக்கவில்லை..! பிறந்த குழந்தையாக அண்ட சராசரங்களை பொக்கை வாயில் காண்பிக்கவில்லை...!

கிருஷ்ணன் என்ற அந்த கடவுள் பாத்திரம் போல் பெண் வெறி பிடித்து ஆடவில்லை..! பார்த்த பெண்களை எல்லாம் கட்டிலில் வீழ்த்தும் திறைமை அவருக்கு இருந்ததில்லை...

மாடு மேய்க்கும் அந்த கிர்ஷ்ணனுக்கு காம சூத்திர நூல் கைக்கு கிடைத்ததோ என்னவோ....பல வித கோணங்களில் ஒரே சமயத்தில் பல பெண்களை புணர்கிறான்..! (ஆதாரமாக உள்ள ஓவியங்கள் கோழிகோடு அரண்மனையில் உள்ளது... 1970 வரை அது மக்களின் பார்வைக்கு விடப் படவில்லை என்பது அங்குள்ள அறிவிப்பு பலகயிலிருந்தே தெரிகிறது..)

குளத்தில் நீராடிக்கொடிருக்கும் பெண்களின் ஆடைகளை திருடிக் கொண்டு அவர்களை நிர்வாணமாக ரசிக்கிறான் இந்த குஜால் பார்டி....! இவன் விளையாடி விட்டு போன பெண்களை மணந்த அந்த புன்னியவான்கலேல்லாம் புலம்பியிருப்பார்கள் இந்த அயோக்கியன் ஆணுறுப்பில் அடி பட்டு சாக வேண்டுமென்று...! அவன் தான் வானத்தில் இருந்து குதித்தவனாயிற்றே....கடைசி வரைக்கும் அவன் வேலைகளை செய்வனே செய்து கொண்டிருக்கிறான்.....இஸ்லாமில் நபிகள் பற்றி சொன்னதை போலதான் கீதையிலும் சொல்கிறார்கள் இவன் (கிருஷ்ணன் ) ஒரு தீராத விளாயாட்டு பிள்ளை என்று...!

இரண்டு மனைவிகள் மற்றும் கள்ள உறவுகளில் பல பெண்கள் என்று ஆரியர்கள் பெண்களை எவ்வாறு அடிமை படுத்த வேண்டும்...எப்படி கள்ள உறவு கொள்ள வேண்டும் என்று பாடம் வேறு கூறி செல்கிறான்....! அதனால் தான் என்னவோ வெறித்தனமாக வழிபடுகிறார்கள் இந்த காமுகனை ஆரிய தேசத்தில்(வட இந்தியா)

இறுதியாக எவனும் இங்கு போற்றும்படி இல்லை....இங்கே அவனவன் செய்த விளயாட்டுதனங்களை ஒப்பிட்டு மட்டுமே பார்க்கலாம்....அப்படி பார்க்கையில் நபிகளை விட குஜால் பேர்வழி, இந்த காமக் கடவுள் கிருஷ்ணன்..!