ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சில பெயர் காரணங்கள்....

சில ஊர்களின் பெயரை கேட்க்கும்போது எப்படி இந்த பெயர்கள் தோன்றியிருக்கும் என்று யோசிப்பதுண்டு...அதுபோலவே சில சொலவடைகளும்..! எங்கோ கேட்ட படித்த வழக்கில் மட்டுமே உள்ள சில பெயர் காரணங்கள் இங்கே..


காயலான் கடை:
மன்னர்கள் காலத்தில் காயல்பட்டினம் மிகபெரிய துறைமுகம் கொண்ட நகரம். ரோம் நகரில் இருந்து பண்ட பரிமாற்றங்கள் நடைபெற்ற துறைமுகம் இது....வாணிபத்திற்காக பயன்படுத்தப் பட்டாலும்...பழைய மற்றும் அறிய பொருட்களை வியாபாரம் செய்யும் இடமாக மாற்றம் பெற்றது காயல்பட்டினம்...பல பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு பண்ட மாற்றிர்க்காக வந்து செல்ல துவங்கியிருந்தனர்...அப்போது மக்களிடத்தில் இப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் காயல்பட்டினத்தான் கடை என்று அழைக்கப் பெற்றது....பின்பு காலஓட்டத்தில் மருவி காயலான் கடை என்றானது.



கட்டாரன் காய்:
கங்கைகொண்டான் கட்டாரம் வென்றான் என்று ராஜ ராஜ சோழனுக்கு ஒரு பட்டமுண்டு...தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது கங்கை உட்பட இன்று ஆசியகண்டம் என்றழைக்கபடும் பல பகுதிகளின் உள்ள நாடுகளை போரிட்டு கைப்பற்றி அங்குள்ள ஆறுகளில் இருந்து 108 குடங்களில் தண்ணீர் ஊற்றப்பட்டது என்பது வரலாறு. கட்டாரங் என்பது இன்று மலேசியாவில் உள்ள ஒரு நகரம். ராஜ ராஜன் வென்ற நாடுகளில் மலேசியாவும் ஒன்று..வெற்றியை கொண்டாட அங்கிருந்து கொண்டுவந்த விதைகளை இங்கு நட்டு வளர்க்க...அதற்க்கு கட்டாரங்க்காய் என்று பெயர் பெற்றது (கட்டாரங் காய் என்பது எலுமிச்சையை விட பெரிதாக ஆரஞ்சு பழத்தை விட கொஞ்சம் சின்னதாக இருக்கும்...தென்னகத்தில் இத ஊறுகாயாக பயன்பாட்டில் இருந்தது..)

இன்றும் இந்தோனேசியாவில் மன்னர் பொறுப்பேற்கும் வைபவத்திலும் மற்றும் அதிபர் பொறுப்பேற்கும் போதும் 11 திருமூலரின் பாடல் வரிகளின் மேல் பிரமாணம் எடுப்பதாக செய்திகள் உண்டு.




நிக்கோபார் தீவுகள்:
நாகபட்டினத்தில் இருந்து நாலு கால் வாரத் தொலைவில் உள்ளதாக குறிக்கப்பெற்றது இந்த தீவு ....அங்குள்ள மீனவர்களால்....பின்பு அதுவே சுருக்கம் பெற்று நாள்கார்வார் தீவுகள் என்றானது....பின்பு வெள்ளையர்கள் காலத்தில் அவர்கள் உச்சரிப்பின் காரணமாக நிக்கோபார் என்றானதாக நாகபட்டினத்தில் வழக்கில் உள்ள கதைகள் உண்டு .