புதன், 3 செப்டம்பர், 2014

லிங்கம்


இது சற்று ஆண் தன்மை கொண்ட பதிவு. இதை புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் உள்ள பெண்கள் படித்து விட்டு கருத்தேற்றவும். சினம் கொள்ளும் பெண்ணியவாதிகள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

என்னுடைய உணர்வுகளை மட்டுமே இங்கு நான் பதிகிறேன். அதனாலேயே நான் திரட்டிகளில் என் பதிவுகளை பகிர்வதில்லை. என் எண்ணங்களை விற்கவோ சந்தைப் படுத்தவோ நான் முனைவதில்லை. கருத்துக்களை எதிர்கொள்ள திறனியற்றவன் என கொள்ளல் வேண்டாம்.என்னுடைய எண்ணங்களை பதிவுகளாக பதிந்த பின்பு நான் லேசாகி எடையற்று போகிறேன் என்பது மட்டுமே உண்மை.

பின்னுட்டங்கள் வர வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி சென்றிடுவேன்.


லிங்கம். இரண்டு குறியீடுகளை சுட்டும் பெயர் இது. ஒன்று சிலையாகி போன சவமெறித்து சாமியனவன்.இன்னொன்று கடவுளென உயிர் உருவாக்கி உடல் உண்டாக்கும் ஆண் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த உறுப்பு. எதற்காக இந்த பெயர் அந்த கடவுளுக்கு என்று யோசிப்பேன். அழிக்கும் கடவுள் என பெயர் கொண்டவனுக்கு அதே பெயர். உயிரை உருவாக்குவதில் ஒரு பங்கு வகிக்கும் அந்த உறுப்புக்கும் அதே பெயர் (தமிழில் ).

ஆதி காலத்திலேயே இந்த ஆதி மொழியில் அந்த உறுப்பைக் குறிக்க இந்த பெயர் பயன்படுத்தபட்டிருக்கிறது. ஆதி தமிழினத்தில் இனம் காத்த அனைவரும் கடவுளானார்கள். மலை மேல் நிற்கும் முத்து குமர வேல் பாண்டியனும்(முருகன்) சிவன் என்றும் லிங்கம் என்றும் இரு பெயர்களில் அழைக்க படும் சவமெரித்தவனும் இனம் காத்து மாண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். அதனாலேயே இனம் தழைத்தோங்க பங்கு வகித்த இந்த உறுப்புக்கும் அதே பெயர் வழங்கல் வந்ததோ என்னவோ.

பெண்ணிற்குள் உள்ள கரு முட்டைகளை பற்றி அதிகம் பேசாமல் ஆணுறுப்பையும் அதில் உருவாகும் உயிர் நீரையுமே அதிகமாக சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. கோடிக் கணக்கான ஆண் உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டையை பாதுகாக்கும் அணுக்களோடு கடும் சண்டையிட்டு ஏதோ ஒரே ஒரு உயிரணுவை மட்டும் பத்திரமாக வெற்றியோடு கரு முட்டைக்குள் செலுத்துகின்றது.

பெண்ணின் கரு அவளிடத்தே இருக்கின்றது. ஆணின் உயிரணுக்கள் லிங்கத்தின் வழியாக உடல் விட்டு உடல் கடத்தபடுகிறது .உடல் விட்டு உடல் செல்வதால் இங்கு அதிக சேதம் பாதுகாப்பு என அத்தனை அம்சங்களிலும் அடிபட்டு பின்பு உள்செல்வதால் அதை கடவுளென கொண்டிருக்கலாம்.

படைத்த கடவுளை எதிர்த்துக் கொண்டு ,தன்னை பெற்றது ஒரு பெண் என்பதை மறந்து கடவுளை அடைய பெண்ணை நிராகரிக்க வேண்டும் என்று எப்படி மனித இனத்திற்கு இடையில் தோன்றியதென்பதை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. தினமும் கல்லூரி பேருந்தில் செல்லாமல் சற்று தாமதமாக வகுப்பிற்கு செல்வது ரொம்ப பிடிக்கும். சமயங்களில் தாமதமாக வந்ததற்காக வகுப்பாசிரியர் வெளியே நிற்க சொல்லிவிடுவார் .அப்படியான சமயங்களில் அப்டியே கல்லூரி உணவு விடுதிக்கு சென்று விடுவோம் நண்பர்களைவரும்.


அப்படி ஒரு நாள் கல்லூரிக்கு பேருந்தில் போகும்போது நேர்ந்த அந்த நிகழ்வுதான் இந்த பதிவிற்கு மையம். பொதுவாக நான் கூட்டமான பேரூந்துகளை ரசிப்பதில்லை. அதனால் முடியாத பட்சத்தில் மட்டுமே கூட்டமான பேரூந்துகளில் பயணிப்பேன் (நெல்லையில்)...அப்படியான ஒரு அவசரமாக கல்லூரிக்கு போகவேண்டிய நாளில் கூட்டமான பேரூந்தில் ஏறிக்கொண்டேன். பள்ளிக் கல்லூரி மற்றும் வேலைக்கு போவோர் கூட்டம் பேரூந்து முழுவதும். நான் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினேன்..(பின்பக்க படிக்கட்டு வழிந்து கொண்டிருந்தது கூட்டத்தால்) முன்னேறி பேரூந்தின் மையபகுதிக்கு சென்றுவிட்டேன். ஆண்களும் பெண்களும் என நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருந்தோம்..சுவாசிக்கவே சிரமப்படுகிற அளவுக்கு புழுக்கமும் வேயர்வையும் பேருந்தினுள்...சற்று நிம்மதியாக மூச்சு விட நான் என் முகத்தை லேசாக திருப்பி ஆண்களின் ஜன்னல் பக்கம் பார்க்க துவங்கியிருந்தேன்...


திடீரென்று ஒரு புது ஸ்பரிசம் என்மேல் ....அதுவரையில் உரசிய ஆண் உடல்களில் இருந்து இந்த உடல் சற்று வித்தியாசமாக இருந்தது ...அதுவும் சரியாய் எனது இடுப்புக்கு கீழ் பகுதியில் அழுந்தி உறைய ஆரம்பித்தது அந்த உடல்

இத்தனைக்கும் நான் என் பார்வையை இன்னும் எடுக்கவில்லை ஜன்னலை விட்டு..ஆனால் உடல் ஏதோ ஒரு விதமான உணர்விற்கு ஆட்பட்டிருந்தது ... எனதுறுப்பு பெருத்திருந்தது...மனதுக்கு தெரியவில்லை என்றாலும் உடலுக்கு உடல் மொழி புரிகிறது

அழுத்தம் அதிகமான பொழுது யாரிது என்று திரும்பி நான் பார்க்கும் போதே அவர்களும் என்னை திரும்பி பார்க்கிறார்கள்...நிற்க்கக் கூட இடம் இல்லாமல் ஒரு கையில் சாப்பாட்டு பையும் தோள்களில் ஒரு பையும் என ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருக்கும் அவருக்கு அப்பொழுது எனது தாய் வயதிருக்கும். நேருக்கு நேர் அவர் கண்கள் பார்த்த அடுத்த நொடியே அங்கிருந்து கூட்டத்தை முண்டியடித்து விலக்கி படிகளில் வந்து தொங்கிக்கொண்டேன்...கீழே விழுந்தாலும் பரவாயில்லை என தோன்றிற்று

மனதிற்குள் ரொம்ப அசிங்கமாக உணர்ந்தேன் ஆணாய் பிறந்ததற்காக கேவலமாக உணர்ந்தேன் எனது ஆணுறுப்பை வெட்டியெறிய வேண்டும் போல இருந்தது ...

கல்லூரியில் இறங்கிய உடன் வகுப்பிற்கு செல்லாமல் நேராக கழிப்பறைக்கு சென்று ஓ வென கத்தினேன் ...எனதுருப்பை வெளியெடுத்து கைகளால் முறுக்கினேன்...வலி உயிர் போயி வந்தது...அதனால் இன்னும் கொஞ்சம் கத்தினேன்..ஆனாலும் எனது கோபம் அடங்கவில்லை..அதெப்படி நமது மனதை மீறி ஒரு உறுப்பு செயல்படமுடியும் என்று ....(பின்னாளில் படித்து தெரிந்து கொண்டேன் சிறு மூளை சொல்பேச்சி கேளததுவென்று ) ஆனாலும் அன்றைக்கு அந்த அம்மா பார்த்த பார்வை இன்றும் ஊசி போல் குத்தும் .


அந்த நிகழ்விற்கு பிறகு கூட்டமான பேரூந்தில் ஆண்கள் பக்கமாக நின்று கொள்வேன்.இது கொஞ்சம் வசதியாக நிற்க உதவியது. இப்படியாக அந்த நிகழ்வுகளை மறந்து போனேன். சென்னை பேரூந்துகளுக்கு பழகிய பிறகு, கூட்டத்திற்கும் பெண்கள் மீது படுவதற்கும் பழகியிருந்தேன்(கூட்ட நெரிசலால் தான் எனக்கு திருட்டு காமம் பிடிக்கவில்லை).

ஒரு மாலைப் பொழுதினில் வேலை முடித்து மத்யகைலாசில் 5E இல் ஏறினேன். நல்ல கூட்டம்.ஆண்கள் ஒரு வரிசை பெண்கள் ஒரு வரிசை என் ஏற்கனவே இருக்க இருந்த இடைவெளியில் பெண்கள் ஒரு வரிசை ஆண்கள் ஒரு வரிசை என நிற்க..நிலைமை என்னவென்று உங்களுக்கே புரியும்.எனக்கு திரும்ப கூட வழி இல்லை. சரி கம்பியை இருக்க பற்றி Balance செய்து உராய்வதிலிருந்து கொஞ்சம் தவிர்க்கலாம் என எண்ணிக்கொண்டேன்.ஏனென்றால் சென்னை வந்த புதிதில் ஒரு நாள் தங்கை ரொம்ப வருத்த பட்டாள் பேரூந்து கூட்ட அவஸ்தையை பற்றி.அடுத்த 2 வாரத்தில் அவளுக்கு ஸ்கூட்டி வாங்கினோம்.ஆதலால் முடிந்த வரை பெண்கள் மீது படாமல் பயணிக்கவே முயல்வேன்.

ஆனால் அன்றைக்கு வேறு வழியே இல்லை என்பதுபோல நெரிசல். என் முன் முப்பதுகளில் இரு பெண்கள். ஒருவர் எனக்கு நேராக நின்றார். என் பக்கத்தில் நின்றவன் என்னை நெருக்கிக்கொண்டு வந்தான் அவன் என்ன நோக்கத்திற்காக வருகிறான் என தெரிந்ததால் அவனை மேலும் நகர விடாமல் நிப்பாட்டினேன்.அப்பாட என் முன்னிருக்கும் பெண்ணை safe gaurd பண்ணிவிட்டேன் என நினைத்துக் கொள்ள முயன்ற பொழுதே அந்த பெண் சிறிது பினகர்ந்தார் ...நான் பின்நகர என் பின்னால் இருந்த ஆண் என்னை முன்னே செல்லுபடி கேட்க்க சிறிது முன்செல்ல வேண்டிய கட்டாயம் ..இப்பொழுது அந்த பெண் அப்படியே என் மேல் படர்ந்துவிட்டார்.இருக்கின்ற நெரிசலில் இதை கவனிக்க கூட யாராலும் முடியாது

இதற்கு மேல் என்னாலும் எதுவும் செய்ய முடியாது என முடிவுக்கு வந்துவிட்டேன்.நானும் அப்பெண்ணும் வடபழனி வரை விலகவேயில்லை வடபழனியில் இறங்கும்போது என்னை பார்த்துவிட்டு கூட்டத்தில் கரைந்து மறைந்து போனார். ஆனால் எனக்கு இந்த அனுபவம் ரொம்ப புதிதாக இருந்தது..இருதய துடிப்பு எகிறிவிட்டது சில நொடிகளுக்கு பார்வை மங்கிவிட்டது கண்டிப்பா புணர்ச்சியில் கூட இப்படி ஒரு பரவசம் அனுபவித்ததில்லை..

உணர்வுகளுகுட்பட்டதுதான் மனித உடலும் மனமும். ஆதலால சமயங்களில் இப்படி நடக்கலாம்...ஆனால் இதையே ஒரு வேலையாக வைத்திருப்போரை காணும்போதுதான் நாயின் நியாபகம் வருகிறது....

இப்போது உணர்வுகளை அடக்க பழகியிருக்கிறேன் ஒருவாறு ...பெண்கள் மேலே பட்டாலும் லிங்கத்தை ஒரு வித அமைதியுடன் வைத்திருக்க கற்றிருக்கிறேன். இப்போது கொஞ்சம் மனதிற்கு இதமாக இருக்கிறது என்னுடைய உறுப்புகள் என்னுடைய கட்டளைக்கு அடிபணிகின்றனவே ..!
.




காத்தாடி...! :-)





காற்றாடி....காற்று வீசும் வரை ஆடிவிட்டு பின்பு அடங்கிபோகும்..!
இந்த காற்றாடியை கூட வாழ்க்கை பாடமாக எடுத்துக்கொள்ளலாம்..!
நிற்க...

இங்கு நான் இந்த காற்றாடியை ஒப்பிடுவது வேறொரு விஷயத்திற்காக...
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து கன நேரத்தில் பறந்து போகும் சின்ன சின்ன காதல் கூட காற்றாடி மாதிரித்தான்...

ஆங்கிலத்தில் கிரஸ் என்று சொல்கிறார்கள்..! தமிழில் அது போல ஒரு வார்த்தையை தேடுகிறேன்..என் அறிவுக்கு எட்டிய வரை அப்படி ஒரு வார்த்தை சிக்கவில்லை...

எனக்கு இந்த கிரஸ்(CRUSH) ரொம்ப பிடிக்கும்..
சொல்லவும் முடியாமல் மெள்ளவும் முடியாமல் தாண்டி போக வேண்டும் இந்த உணர்வில்..ஆனால் நிஜத்தில் நிலைமை காலை பிடித்து காதல் பிச்சை கேட்க்க சொல்லும்...இடம் பொருள் ஏவல் இப்படி எதுவுமே நமக்கு சாதமாகத ஒரு நிலையில்தான் இந்த உணர்வு உள்ளுக்குள் குதித்து ஆட்டம் போடும்..

உங்களுக்கு தெரியுமா? பெண்களுக்கு இந்த வகை கிரஸ் ரொம்ப பிடிக்கும்..தீண்டி தீ மூட்டி விட்டு சாதரணமாக கடந்து போக முடியும் அவர்களால்.. இந்த சிறு விளையாட்டு அவர்களுக்கு நிறைய பிடிக்கும்...மிக ரசித்து விளையாடுவார்கள் பெண்கள்...
ஏனென்றால் இந்த விளையாட்டில் எந்த சிக்கலும் இல்லை..காயங்கள் சேதங்கள் வராது என்பது கூடுதலான காரணம்...

எனக்கு இந்த கிரஸ் என் சகோதரியின் தோழிகளிடத்தில்..நண்பனின் காதலியிடம்..சில நண்பர்களின் சகோதரிகளின் மீதும் சில நண்பர்களின் மனைவிகளின் மீதும் வந்து சென்றிருக்கிறது...

இது ஒரு மாதிரியான சற்று குறும்பான உணர்வு...குறும்புத்தனமான நட்புணர்வு என்று கூட சொல்லலாம்...இந்த உணர்வில் வரும் பெண்களெல்லாம் எனக்கு மிக மிக பிடித்தவர்கள்..ஆனால் கன நேரம் கூட தவறாக என்ன முடியாதளவிற்கு நல்ல தோழிகளாக இருப்பார்கள்...அதுவே அவர்களின் மீது தீரா அன்பினை உரமிட்டு வளர செய்யும்

ஆனால் எப்பொழுதும் ஒரு உள்ளுணர்வு உள்ளத்தில் அழுத்திக் கொண்டே இருக்கும்...ஒரு கோடு கீறி அதை லக்ஸ்மன கோடாக எண்ணிக் கொள்வேன்..அதை எப்பொழுதும் தாண்டியதில்லை...
நண்பர்களைவரும் அவர்களில் ஒருவனாக எண்ணுவதாலேயே என்னை அவர்களில் அவர்கள் குடும்பங்களில் ஒருவனாக நடத்துகிறார்கள்...அந்த எண்ணமே என்னை சீராக கோடு தாண்டாமல் நடத்தி செல்லும்...

பொதுவாக நெருங்கிய வட்டங்களில் அறிமுகமாகும்(நண்பர்கள்) பெண்கள் மத்தியில்தான் இது வரும் என்றில்லை...மிக நெருக்கமான நல்ல தோழிகள் மீதும் எனக்கு இந்த கிரஸ் உண்டு...

அவள் ஒரு ஐ.எ.எஸ் அதிகாரியின் மகள்...செம்ம குறும்புக்காரி..ஒரு பொது நண்பர் வட்டத்தில் அறிமுகம்..2009இல் வேலை இழந்து முழு நேர வலை உலாவியாக நேரம் போக்கிக் கொண்டிருந்த நேரம்...ஆர்குட் மூலம் பள்ளிப் பிள்ளைகளையும் கல்லூரி மான்களையும் வலை போட்டு பிடித்துக் கொண்டிருந்த நேரம்..

சரியாக மாலை 6 மணியானால் தன்னுடைய காரில் என் வீடருகே நிற்ப்பாள்...என்னுடைய பைக்கை உதைக்கும் போது அவள் காரை பூட்டி விட்டு என் பின்னே தொற்றிக் கொள்வாள்...அவளுக்கு பைக் சவாரி மீது கொள்ளை பிரியம்..
தோள்களில் நாடியை தாங்கிய படி கேட்ப்பாள்..டேய் யாரவது உன்னை இப்போ பார்த்த என்ன ஆகும் என்பாள் பயங்கலந்த குரலில்...

நான்- என்னாகும்பா?

அவள்- அடப் பாவி...உங்கப்பாட்ட போயி உங்க பையன் யாரோ ஒரு பொண்ணோட ஊர் சுத்துறானு சொல்ல மாட்டாங்களா?

நான்- அப்போ உங்கப்பாட்ட யாரவது சொன்னா?

அவள்- ஒன்னும் நீ உள்ள போகணும்(சிறை)
இல்ல எனக்கு மாப்ளையா வரணும்..

நான் சிரித்து கொண்டே அப்போ உனக்கு தெரிஞ்சவங்க யாரவது பாத்த நல்ல இருக்குமே என்பேன்..

ஏய் என்று முதுகில் குத்திவிட்டு ரொம்ப பேசுரேடா என்பாள்...

ஒரு நாள் சடாரென டேய் எண்ணிய பாக்றதுக்கு வீட்டுக்கு ஒருத்தன் வந்திருக்காண்டா..... INTRESTING uh பேசறாண்டா என்றாள்....
அய்யோ அப்போ என் கதை முடிஞ்சி போச்சா? ந உன்ன பொண்ணு கேக்கலாம்னு நேனைசெனே என்றேன்....விழுந்து விழுந்து சிரித்த படி போடா லூசு என்றாள்...இப்போது ஐரோப்பாவில் கணவனுடன் வசிக்கிறாள்...வலயரட்டையில் கேட்க்கிறாள் என் மேல உனக்கு லவ்வே வரலயாட என்று..! :-( :-( :-(


சில தோழிகளுடன் அவர்களுக்கும் என் மேல் ஈர்ப்பு இருப்பதை அறிந்தே இருந்தேன்... ஆனால் அது கண்டிப்பா ஒரு ஈர்ப்பு மட்டுமே...

ரசித்து கடந்து வந்த, நான் கிரஸ் கொண்ட பல பெண்கள் இன்றும் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள்..இன்னும் அதே குரும்போடும் அதே குருகுருப்போடும்...! :-)



இருவாரங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வழியே உதித்த கிரஸ் இது...

அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது அங்குள்ள கம்பெனிக்கு சொந்தமான மடிக்கணினியை அங்கு ஒப்படைத்து விட்டு வரவேண்டும். அதன் படியே அங்கு ஒப்படைத்து விட்டு வந்தேன்.

நான் வேலை பார்ப்பது ஒரு பன்னாட்டு கம்பனி. பன்னாட்டு கம்பெனி என்றால் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருக்கும் பிசாத்து கம்பெனி இல்லை...உலகில் 42 நாடுகளில் தொழிற்சாலை அமைத்து பல ஆயிரம் கோடிகளை கொட்டும் பார்ச்சுன் 500இல் 30தாவது இடம் பிடிக்கும் கம்பெனி.

உலகின் எந்த நாட்டிற்க்கு பயணமானாலும் அங்கு போன பிறகு பிரத்யோகமாக நமக்கு ஒரு மடிக்கணினி தருவார்கள் நான் வேலை செய்யும் இந்த பாகசுர கம்பனியில்...

இந்தியா வந்த பிறகு இங்கு மடிக்கணினி பெற்றுக் கொண்டேன்.
அதில் ஏற்ற வேண்டிய அப்ப்ளிகேசன்ஸ்காக கம்பெனிகென்று இருக்கும் சேவை பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும். என்னுடைய வேலை நேரம் அமெரிக்க வேலை நேரத்தோடு பொருந்தி போவது. அதாவது இந்தியாவில் முழு இரவு பணி. பொதுவாக ஆசியாவிற்கான சேவை பிரிவு இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு முடிவடையும். அதன் பின்பு அத்தனை உதவி கேட்டு வரும் அழைப்புகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு செல்லும். அந்த நினைப்பில் தொலை பேசியில் எண்களை அழுத்தினேன்...


எடுத்ததோ ஒரு காந்த குரலுக்கு சொந்தாகாரி. அழைப்புகளை எடுப்பவர்கள் அவர்களின் பெயரை சொன்ன பிறகே நம்மிடம் என்ன மாதிரியான உதவி வேண்டும் என்பார்கள். இவள் பெயரை சொன்ன பொழுது மனதிற்குள் மணி அடித்தது..! :-) அச்சு அசலாக தமிழ் பெயர். ஆனால் அமெரிக்காவில் சேவை பிரிவில் நம்மாட்கள் வேலை செய்ய மாட்டார்கள். எனக்கு தெரிந்து ஆசியாவிற்கான சேவை பிரிவில் பெரிய பிரிவு பெங்களுருவிலும் பெய்ஜிஙிலும் மட்டுமே உண்டு. ஆனால் அவை அனைத்து சர்வதேச நேரத்தில் செயல் படமாட்டா.

என்னுடைய மடிக்கணினிக்கு தேவையான அப்ப்ளிசெசன்ஸ் பற்றிய பட்டியல் கொடுத்து விட்டு கிடைத்த நொடிகளில்(பொதுவாக இந்த சேவை பிரிவு பெண்கள் தேவை இல்லாமல் பேச்சு வளர்க்க மாட்டார்கள்) நீங்கள் இந்தியாவில் இருந்து அழைப்பை எடுக்கிறீர்களா என்றேன்? ஆமாம் என்ற ஒற்றை சொல்லோடு உங்கள் கோரிக்கை படி அத்தனை அப்ப்ளிகாசன்ஸ் ஏற்றப்பட்டுவிடும் என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள் பாவிமகள்.

எங்கள் கம்பெனிக்கென்று ஒரு வலையரட்டை அப்ப்ளிகேசன் உண்டு. அதன் மூலம் தேவையான பொழுது வேலை சமந்தமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சக ஊழியர்களிடம் பேசிக் கொள்வோம். என்னுடைய வலையரட்டை சர்ச் பாரில் அவள் பெயரை இட்ட உடன் பளிச்சென்று பச்சை நிறத்தில் ஒளிந்ர்ந்தால். உடனே ஒரு ஹலோ சொன்னேன். அடுத்த நொடியே ஒரு ஹாய் சொல்லி நீ தமிழனா என்றாள்.மனதிற்குள் மத்தாப்பு பூத்தது..! :-)

பின்பு ஒரு வாரகாலம் சில பல மரியாதைகளுடன் சென்று கொண்டிருந்த அரட்டை பின்பு லேசாக சற்று குறும்புத்தனமாக செல்ல ஆரம்பித்தது...
அப்படி சென்றுகொண்டிருந்த ஒரு குறும்பு அறைட்டைதான் கீழே நீங்கள் பார்க்க போவது..







குறிப்பு: ஆரஞ்சு வண்ணத்தில் கோடு வரைந்திருப்பது அவளை சுட்டும்.
சிவப்பு மற்றும் வண்ணமற்ற பகுதி என் பெயரை சுட்டும்.


இந்த மாதிரி சமயதிர்க்கேற்றவாறு ஒரு நகைசுவையோ அல்லது குட்டி கதைகளோ சொன்னால் பெண்களின் மனதை சிறிது சிறிதாக வெல்லலாம்..! :-)

இந்த குட்டி கதைக்கு பிறகு...அதை படித்து அவள் ஆச்சிரியப்பட்டு என்னிடம் பேச ஆரம்பித்த பிறகு புகைப்படங்கள் பரிமாறிக்கொண்டோம்...

எனக்கு சாபமா அல்லது கேடா என்று தெரியவில்லை...எனக்கு அமையும் பெண்கலேல்லாமே 25க்கு குறைந்தே வந்து தொலைக்கிறார்கள்....இவளுக்கு 23என்றாள்...! கேம்பஸில் வந்தேன் என்றாள். வாங்க போங்கலாம் வேண்டாம் என்றவள் இப்போது வாட போடா என்கிறாள்..! அலைபேசி என்னை கேட்டிருக்கிறேன் நாம் இன்னும் சிறிது பழகிய பிறகு பார்க்கலாம் என்றாள். அலைபேசி என்னை வாங்காமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன். என் இசை நாயகிக்கு சங்கதி தெரிந்தால் கொன்று போட்டுவிடுவாள். :-(


பெரிய பெரிய சந்தோஷங்களை தேடி என் சந்தோஷத்தை தொலைக்காமல் இது போன்ற குட்டி குட்டி கதைகளிலும் நகைசுவையிலும் அமையும் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களே என்னை மேலும் மேலும் இன்புற்றவனாக ஆக்குகின்றது..!

:-) :-) :-)
சந்தோஷமாக இருக்கிறேன் எப்பொழுதும் போல...
காற்று அடங்கி சரியும் காற்றாடி போல...
காற்று இறங்கி என் உடல் மண் மீது சாயும்வரை..!