வெள்ளி, 27 நவம்பர், 2009

மாவீரன் பிரபாகரன்...!

இன்று மாவீரர்கள் தினம். மாவீரர்களுக்கு வீர வணக்கம். இந்த பதிவை இடும் முன் நிறைய யோசித்தேன்....வலையுலகில் ஏற்கனவே புலிகள் பற்றியும் தமிழ் தலைவர் பிரபாகரன் பற்றியும் கருத்துரைகள் கொட்டி கிடக்கிறது...இதில் நாமும் எழுத வேண்டுமா என்று...ஆனாலும் அந்த மாவீரனைப் பற்றி ஒரு இடுகை இடும் போது அது என் வலை பூவை மேலும் மெருகூட்டும் என தோன்றியதால் இந்த பதிவு.

மிகச் சிறு வயதில் ஜூனியர் விகடன் மூலமே எனக்கு தமிழீழ தலைவரை தெரியும்....பின்பு தலைவர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை ,அதை தாங்கி வந்த செய்தி தாளை படித்து கொண்டிருப்பது போல தலைவனின் படம் தாங்கி வந்த நக்கீரன் படிக்கும் போது ஓரளவிற்கு இலங்கை விவகாரம் எனக்கு பிடி பட்டிருந்தது....என் தந்தை எனக்கு அறிமுகம் செய்த ஓரிரு நல்ல பழக்கங்களில் ஒன்று புத்தகம் வாசிப்பது...அப்போதைய அரசியல் நாளிதழ்கள் பெரும்பாலும் நடுநிலைமை வகித்தன இலங்கை விவகாரத்தில்....

என்னையுமறியாமல் சிறு வதிநிலேயே பிரபாகரன் மேல் மிகப் பெரும் ஒரு மரியாதையை ஏற்ப்பட்டு விட்டது...நினைத்து பார்க்க முடியா சாகசங்களுக்கு சொந்தக்காரர்....பல நாடு உளவுத் துறையினரின் கொலை முயற்சி....துரோகங்கள்...அனைத்தையும் தாங்கி தமிழினம் தலை நிமிரச் செய்தவர் தலைவர் பிரபாகரன்...எந்த அரசாங்கத்திடமும் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காத போது புலிகளிடம் மட்டும் ஏன் இத்தனை கேள்வி....

இதில் ஒரு படி மேலே போய் சில கத்து குட்டிகள் வலையுலகில், இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் கேள்விகளோடு கேலியும் செய்திருக்கிறது.......கத்தியை கைகளில் பிடித்து ஒழுங்காக வெங்காயம் வெட்ட தெரியாத நண்டு சிண்டுகளெல்லாம் மௌஸ் பிடித்து இந்த விவகாரத்தில் கருத்து சொன்னது சற்று ஆதிரமூட்டினாலும்....ஆதவனை நாய் பழிப்பதால் அதன் புகழ் எப்படி மங்காதோ அதே போல தலைவனின் புகழும் காலத்தால் அழியாதது....

வல்லாதிக்க அரசாங்கங்களோடு நிராதரவாக மோதி லட்சக் கணக்கான தமிழர்களை வாழ வைத்த பிரபாகரன் மாவீரன். அவர் கேள்விகளுக்கப்பாற்பட்டவர்....அந்த மாவீரனின் புகழும் வீரமும் உலகம் அழியும் வரையிலும் மங்காதிருக்கும், அதுவே தனி ஈழம் பெற தமிழர்களை வழிநடத்தும் என்றும் நம்புவோம்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

மரணம்...!

மரணம், என்ற வார்த்தையே ஒரு வித அமானுஷ்யத்தை சுமக்கும். மரணத்தை பற்றி நாமனைவரின் பார்வையும் ஒன்றே. முற்றும் துறந்தவர்களும் அதற்கு விதி விலக்கல்ல. பிறப்பும் இறப்பும் சமமாக இருப்பினும், பிறப்பை கொண்டாடுவது போல் ஒரு இறப்பை கொண்டாட முடியாது நம்மால். மரணத்தை வெல்ல முடியாது என்றுணர்ந்த மனிதன் சற்று சமரசத்திற்கு உட்பட்டு இறப்பும் பிறப்பை போல் வலியுணராமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆட்பட்டிருக்கிறான்.

சிரித்து கொண்டே விடை பெற்று உலகை விட்டு போகும் மனிதனை கதைகளில் மட்டுமே கேள்விபட்டிருப்போம். யதார்த்த வாழ்வில் அப்படி ஒரு நிகழ்வு நடப்பது சாத்தியமா?? பிறந்த குழந்தை தன சுவாசத்தை ஆரம்பிக்கும் முதல் தொடங்குகிறது வாழ்வின் மேல் உள்ள பற்றுதல்...அப்படியே அது இறுகி வலுப் பெற்று வேர்விட்டு
உலகை விட்டு செல்ல கூடாது என்ற ஒரு வித வெறியாக மாறுகிறது...! ஒரு வித பரிதவிப்பு இருந்து கொண்டே இருக்கிறது எப்பொழுதும்....

மரண பயம் வாழ்வின் மேல் உள்ள பற்றுதலை அதிகரிக்கிறது...நாம் பிறக்கும் போதே நமக்கும் மரணத்திற்குமான விளையாட்டு ஆரம்பிக்கிறது....அது எப்பொழுதும் நம்மை சுற்றி கொண்டேயிருக்கும் கண்ணுக்கு தெரியாத காற்றலைகளாக...என்றே எனக்கு தோன்றும்...சமயங்களில் அதன் விளையாட்டு சற்று குறும்பாக மாறி என்னை சிறிது நட்போடு உரசி விட்டு செல்வதாக உணர்ந்த சமயங்கள் எனக்குண்டு....

சமயங்களில் எனக்கு சற்று வித்தியாசமான கோணங்களில் யோசிக்க தோன்றும்.....சாலையோரம் உள்ள தேநீர் விடுதியில் தேநீர் அருந்தும் போது ,சாலையில் எதிரே வேகமாக வந்து கொண்டிருக்கும் பேரூந்து.....கட்டுபாட்டை இழந்து இங்கே பாய்ந்தால் எப்படி இருக்கும் என்றஎண்ணம் மனதில் தோன்றி செல்வதை என்னால் கட்டுபடுத்த முடியாது.....அதைப்போலவே பெரிய மேம்பாலத்தின் அடியில் செல்லும்போது அப்படியே இது சரிந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கும்...

சற்று முன் பார்த்த அழகான அந்த இளம்பெண், எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் இளம்ஜோடி, முதல் இருக்கையில் நான் போயமர்ந்த போது என்னை எழுப்பிய வயதான பெண்....எல்லாம் கன பொழுதில் சதைகள் பிய்க்கப் பட்டு சதையும் எலும்புமாக கிடக்க....நானும் நண்பனும் சிறு காயம் கூட இன்றி இருக்கையில் அமர்ந்திருக்கிறோம்......பேரூந்து முக்கால் வாசி உருக்குலைந்து விட்டது....மீட்பு குழுவினருடன் அனைவரையும் மீட்டு மருத்துவ மனை கொண்டு சென்ற போது என் தோளில் கை போட்டு ஒரு வித நட்போடு மரணம் புன்னகைத்ததை இந்நொடி மறக்க முயற்சிக்கிறேன்.....

மரணத்தை ஒரு இறுதி முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாத மனித நாகரிகம் இறப்பிற்கு பின்பும் பல சடங்குகளை செய்து அவர்கள் நலனை உறுதி செய்து கொள்கிறது...
நமக்கான இறுதி நாளை நாமே தீர்மானிபதர்க்கு ஒருவித அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வகையில் பார்க்கும் போது கொள்கைக்கும் மற்றும் கோட்பாடுகளுக்காகவும் உயிர் துறக்கும் கரும்புலி தோழர்களும் மற்றும் பிற தற்கொலை போராளி படையும் ,மரணத்தை வென்றவர்களாகவே தெரிகிறாகள் என் கண்களுக்கு.

திங்கள், 23 நவம்பர், 2009

மிட்டாய்..!

எண்பதுகளின் மத்தியில் தென்னக தெருக்களில் அவர்களை சாதரணமாக பார்க்கலாம்..! கையில் பெரிய உருளை தடியோடு வருவார்கள். குழந்தைகளின் ஆதர்ஷ நாயகர்கள் அவர்கள். அவர்களை தெருக்களில் பார்த்து விட்டால் குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு சென்று வீடிலுள்ளவரிடம் அடம் செய்து காசு வாங்கி விடுவார்கள்.

உருளைத் தடியின் உச்சத்தில் உள்ள சவ்வு மிட்டாய்தான் இத்தனைக்கும் காரணம். இங்கே(சென்னையில்) சவ்வு மிட்டாய் என்று பஞ்சு மிட்டாயை சொல்கிறார்கள்.
ஆனால் நான் குறிப்பிடுவது சவ்வைப் போல இழுத்தால் நீண்டு கொண்டே போகும் மிட்டாய். சவ்வு மிட்டாயில் என்ன விசேஷம் என்று கேட்குறீர்களா? விசேஷம் அதில்லை.மிட்டாய் விற்பவரின் கலை கரங்கள்தான் விசேஷம். கொஞ்சமே கொஞ்சமாக அந்த உருளை தடியின் உச்சிலுள்ள சவ்வு மிட்டாயை எடுத்து குழந்தைகள் என்ன வடிவில் கேட்க்கிரார்களோ அந்த வடிவில் செய்து தருவார். மயில்,கிளி,கைகடிகாரம்,வண்டி, என பல்வேறு வடிவங்களில் செய்து நம் கைகளில் ஒட்டிச் செல்வார்.

குழந்தைகளுக்கு உடனே மிட்டாயை சுவைக்க மனம் வராது....கைகளில் வைத்து கொண்டே இருப்பார்கள். பின்பு அரை மனதோடு சாப்பிடுவார்கள். நானும் சவ்வு மிட்டாயின் தீவிர ரசிகன்தான். இது போக காசு மிட்டாய் என்று ஒன்று உண்டு. அந்த மிட்டாயினுள் காசுகள் இருக்கும் சில சமயம். அப்புறம் பாக்கு மிட்டாய்,தேன் மிட்டாய்...
இன்று இவையனைத்தும் கிடைப்பதில்லை...தேன் மிட்டாய் மட்டும் ஆங்காங்கே தென்படுகிறது.




நான் நாலாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம். குமார் மச்சானுடன் தான் இருப்பேன் எப்போதும். குமார் மச்சானின் தந்தையும் என் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் குடும்ப நண்பர்களாகி விட்டோம். குமார் மச்சான் படித்து விட்டு வட்டி தொழில் செய்து வந்தார். அப்போது குமார் மச்சான் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். நான் எட்டு வயதில் இருந்தேன் என நியாபகம். குமார் மச்சானிடம் ஒரு லூனா வாகனம் இருந்தது. அதில்தான் என்னை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்வார். அவரின் நண்பர்களனைவரும் ஒத்த வயதுடயவர்களேன்பதால் அவர்கள் கூடினாலே அங்கே இளமை கொப்பளிக்கும்.

அப்படி அவர்கள் ஒன்றுகூடும் போதெல்லாம் நான் என்ன கேட்க்கிறேனோ அதெல்லாம் வாங்கி என் கைகளை நிரப்பி விடுவார்கள். இப்படியான ஒரு பொழுதில்தான் குமார் மச்சானுக்கும் அவர் நண்பனுக்கும் ஒரு போட்டி வந்திருக்கிறது. அவர்கள் கடைசியாக பேசியது மட்டும் என் காதினில் விழுந்தது.

குமார் மச்சான் சொல்லிக்கொண்டிருந்தார்...அவன் என் மாப்ளை ,யார் என்ன பண்ணாலும் அவன் என்ன விட்டு போக மாட்டான்....சிறிது நேரத்தில் அந்த நண்பர் என்னை தன் கவாசாகி பைக்கில் ஏற்றிக் கொண்டு ஊரை முழுவதும் ஒரு வட்டம் அடித்தார்....பின்பு அவர் வீட்டுக்கு அழைத்து சென்றார்...அங்கு எல்லோரும் மிக அன்பாக பேசினார்கள்....எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அவர்களை....பின்பு மீண்டும் அவர் வீட்டிலிருந்து கிளம்பினோம்...அப்போது எனக்கு அவர் கைகள் பத்தாத அளவிற்கு சாக்லேட் வாங்கி கொடுத்தார்....பின்பு பழைய இடத்திற்கே வந்தோம்....வந்த உடன் மச்சானிடம் ஒட்டிக் கொண்டேன்...அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்....நான் அதை செவி மடுக்கவில்லை...திடீரென்று குமார் மச்சான் என்னிடம் எங்க ரெண்டு பேரில் உனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார்..! அவர் கண்களில் அவ்ளோ ஒரு நம்பிக்கை தெரிந்தது அவர் பெயரை மட்டுமே சொல்வேனென்று....நான் எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் என்றேன்....அந்த நண்பர் மச்சானை பார்த்து சிரிக்க....மச்சான் திரும்பவும் என்னிடம் இரண்டு தடவை கேட்டார்....நான் அதே பதிலை தான் திரும்பவும் சொன்னேன்.

யார் சொன்னார்கள் குழந்தையின் அன்பு எதிர்பாற்பற்றதென்று....இந்த உலகில் எல்லாதிற்கும் ஒரு விலை இருக்கின்றது...அப்போது நான் அந்த நிகழ்வுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை....ஆனால் கொஞ்சம் வளர்ந்த பொழுது குற்ற உணர்ச்சி என்னை குத்தி கிழித்தது....மச்சானின் கண்களில் தான் எவ்ளோ ஒரு நம்பிக்கை நான் அவர் பெயரை சொல்வேனென்று...நொடி பொழுதில் எல்லாத்தையும் சிதைத்திருக்கிறேன்....கைகள் நிரம்பிய சாக்லேட்டுக்க்ளுக்காக...


அது ஒரு நெருங்கிய உறவினரின் திருமண விழா... நான் அப்பா அம்மா எல்லாம் திருமணதிற்கு முதல் நாளே சேரன்மாதேவி போய்விட்டோம். அப்பொழுதெல்லாம் ஓலை பெட்டியில் சீனி மிட்டாய் தென்னக கிராமங்களில் பிரபலம். சீனி மிட்டாய் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். எனக்கு அப்பொழுது ஆறு வயது இருக்கும்...கோபாலன் மாமாவும் சுசிலா அத்தையும் வந்துவிட்டார்கள் நாங்கள் வந்த சில நிமிடங்களிலேயே...

எனக்கு பிடித்தமான சீனி மிட்டாய் மாமா வாங்கி வந்திருந்தார்...அப்பொழுது இரவு நேரமாகி விட்டதால் அதை காலையில் சாப்டலாம் என்று அம்மா அதைக் கொண்டு போய் வீட்டினுள் வைத்து விட்டார்...தாத்தா வீட்டில்தான் வுரவினர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்....அது நல்ல பெரிய கிராமத்து வீடு.சாணம் போட்டு மொளுவிய தரையுடன் ஒரு வித நெல் மனம் வீடு முழுக்க அடித்துக் கொண்டே இருக்கும்.

அப்பா அம்மாவுடன் மற்றும் உறவுக் காரர்களுடன் நடைகூட வீட்டில் படுத்துக் கொண்டனர். மீதமிருந்தவர்களெல்லாம் உள்ளரங்கு வீட்டுக்குள் படுத்துக் கொண்டனர்....இது போக ஒரு தனி பத்தி இருந்தது....அதில் என்னைப் போல நண்டு சிண்டுகளும் கோபாலன் மாமாவும் அப்புறம் அத்தையும். எனக்கு சீனி மிட்டாய் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது....அம்மா இப்பொழுது வெளியே படுத்திருக்கிறார்....நான் மிட்டாய் எடுத்து தின்றால் கூட அம்மாவிற்கு தெரியப் போவதில்லை என்ற நினைப்பே சிறிது சந்தோசம் கொடுத்தது.......ஆனாலும் மிட்டாய் இருந்த பகுதிக்கு முன்னமாக அத்தையும் மாமாவும் படுத்துக் கொண்டார்கள்... நான் அவர்களுக்கு பக்கத்தில்.....

சரி இனிமேல் காலையில் தான் சாப்பிட முடியும் என்று முடிவுக்கு வந்தவனாக படுத்துறங்கிப் போனேன்.....ஆனால் நள்ளிரவில் ஏதோ சப்தம் கேட்டு விழித்து கொண்டேன்.....உடனே எனக்கு சீனி மிட்டாய் நியாபகத்தில் ஓடியது...யாருக்கும் தெரியாமல் சாப்பிட வேண்டும் என்றேன்னிக்க் கொண்டிருக்கும் போதே எனக்கு இருட்டு ஓரளவிற்கு பழகியிருந்தது.....எனக்கு பக்கத்தில் படுத்திருந்த மாமாவைக் காணோம்....சற்று உத்து பார்த்த பொழுது தான் தெரிந்தது மாமா அத்தையின் மேல் படுத்திருக்கிறார் என்று....எனக்கு புரிந்து விட்டது.......... அங்கே இங்கே நகண்டு அவர்களுக்கு கரடியாகி விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்... பின்பு சிறிது நேரங்கழித்து படுதுரங்கிப் போனேன்....இதில் ஆசிரியம் என்னவென்றால் அந்த காட்சியைக் கண்ட பொழுது எனக்கு, வழக்கமான குழந்தைகளுக்கு தோன்றும் அதிர்ச்சியோ இல்லை பயமோ அல்லது அருவருப்போ தோன்றவில்லை என்பதுதான்......ஆனால் இது ரொம்ப முக்கியமான குறுகுறுப்பான விஷயம் என்பது மட்டும் சிறு வதிலேயே படிந்து விட்டது மனதில்................

சில நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பி பள்ளி விடுமுறை நாளொன்றில் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடும் போது பக்கத்துக்கு வீடு ரேஜினாக்காவை( என்னை விட ஒரு வயது மூப்பு... ஏழு வயதிருக்கும்) மொட்டை மாடியில் வைத்து அவள் மறுத்து அழ அழ நான் முயற்சித்து பார்த்தது அந்த காம்பவுண்டில் இன்று வரை யாருக்கும் தெரியாது.


அவன் எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பன் கிடையாது. ஆனால் வேறு ஜாதி. அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்...ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியிலேல்லம் ஒரு ஒரு பலமான ஆசாமியை தெரிந்து வைதிருக்கிரவனால் மட்டுமே மாணவ தாதா ஆக முடியும் நெல்லையில்....எந்த பிரிவைச் சேர்ந்த தாதா கூட்டம் சண்டைக்கு வந்தாலும் இந்த மாதிரி நட்பு இருக்கிரவனால் மட்டுமே பிரச்சினையை பேசி தீர்க்க முடியும்...அந்த வகையில் இவனை எனக்கு தெரியும்......ஒரு பெண்ணால் என் நண்பனுக்கு ஒரு பிரச்சினை வந்த பொழுது இவனை பார்க்க வந்திருந்தேன்...இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு அழகான ஐந்து அல்லது ஆறு வயது ஆண் குழந்தை ஒன்று அவன் மீது தாவி ஏறிக் கொண்டு விளையாடியது....யாரிந்த குழந்தை என்றதற்கு பக்கத்து வீடு குழந்தை என்றான் அவன்....பின்பு சிறிது நேரம் கழித்து அந்தக் குழந்தைக்கு ஒரு பெரிய மில்கி பார் சாக்லேட் வாங்கி கொடுத்தான் அவன்....பின்பு அக்குழந்தையிடம் கேட்டான் நேற்றிரவு என்ன பார்த்தாய் என்று.....அதற்க்கு அக்குழந்தை சொன்னது அப்பா ஷேம் ஷேம் ஆக(ஆடையில்லாமல்) அம்மா மேல படுத்து நெறைய முத்தம் குடுத்தார் என்றது.....!

சனி, 21 நவம்பர், 2009

பால்யக் காதல்..????

உங்களில் எத்துனைப் பேருக்கு உங்கள் சிறு வயது நியாபகங்கள் மனதிர்ப் பதிந்து போயிருக்கும் என்று தெரியவில்லை...ஆனால் இந்தப் பதிவைப் படிக்கும் போது சிறிதாக ஏதாவது உங்கள் மனதின் அடியாழத்தில் கிளர்ந்தெழுந்தால் உங்கள் பால்ய காலத்தை ரசித்து வாழ்ந்திருக்ரீர்கள் என்று கொள்ளுங்கள்.

பால்யக் காலம் என்றால் புரியும் ...ஆனால் பால்யக் காதல்??? உடனே பதின் வயதுகளைப் பற்றி எழுதப் போகிறேன் என்றெண்ண வேண்டாம் என் மனதைப் பாதித்த எனது வாழ்வில் ஒளியேற்ற வந்த சில தேவதைகளின் மீதான எனது காதலே இது. இங்கே கண்டிப்பாக காதலைப் பற்றி நான் சில வரிகள் சொல்ல வேண்டும்...இல்லாவிடில் இந்தப் பதிவின் நோக்கத்தை கொச்சையாக பார்க்கிற வக்கிர கண்ணோட்டம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
இதற்கு முன் ஒரு பதிவில் சொன்னது போல காதல் ஒரு உணர்வுப் பூர்வமான விஷயம். உணர்வுகளால் ஈர்க்கப் பட்ட , இணைந்த , இணையத் துடிக்கிற இதயங்களின் சேர்க்கையை யோசிக்காமல் காதல் என்று சொல்லலாம். உணர்வுகளுக்கு மட்டுமே அங்கு முக்கியதுவம் காட்டப்படும். வயது,நிறம்,பணம்,ஜாதி,மதம் போன்றவைகளுக்கு அப்பார்பட்டது இந்தக் காதல்.

ஆங்கில நர்சரிப் பள்ளியில் தான் பள்ளி வாழ்க்கையை தொடங்கினேன். எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் படிப்பென்பதை அறியாமலே கடந்து போனது. நான் ஒழுங்காக படிக்காமல் இருந்தால் கூட பரவாஇல்லை...ஆனால் சேட்டைகளுக்கும் குறை வைக்காமல் இருந்தேன்...அதனாலேயே என் ஆசிரியைகளுக்கு என்னை பிடிக்காமல் போனது....வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை அடிவெளுத்தெரிந்து விடுவார்கள்...அதனாலேயே படிப்பென்பது பணங்காயக தெரிந்தது...(அப்போவே..) இந்த நிலையில் தான் முதல் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்தேன்.

என் வாழ்வின் முதல் காதலையும் இங்குதான் கண்டேன்...! ரோஜா நிற குடைக்குள் மல்லிகை ஒன்று நடந்து வருவது போலதான் இருக்கும் அவர்கள் குடை பிடித்து வருவது...! என் முதல் வகுப்பு ஆங்கில ஆசிரியை. பெர்சியுஸ் என்பது அவர்கள் பெயர். இப்பொழுதும் மனதை விட்டு அகலாத முகம் அவர்களுடையது...! பேரழகு+ ஒரு குறும்பு கலந்த சிரிப்பு... இதுதான் பெர்சியுஸ். அப்பொழுதான் கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வேலைக்கு சேர்ந்திருந்தார்கள்.
வழக்கம் போல் நான் கடைசி வரிசையில் போயமர்ந்து கொண்டேன்.(தீர்க்கதரிசி...!) அப்பொழுதெல்லாம் பாட புத்தகங்களை பைண்டு செய்யும் வழக்கம் இருந்தது,புத்தகங்கள் கிழிந்து விடாமலிருக்க. சற்று வித்தியாசமாக என் தந்தை அனைத்து பாட புத்தகங்களையும் சேர்த்து ஒரே ஒரு பைண்டு செய்து தந்தார். பார்க்க அது ஒரு பெரிய லிப்கோ டிக்சனரி போலிருக்கும்.

முதலாம் வகுப்பின் முதல் நாள் முதல் பாட வேளை பெர்சியுசுடயது. ஏனோ அவர்களை பார்த்த உடன் மற்ற ஆசிரியைகளிடம் தோன்றும் பயம் தோன்றவே இல்லை. மாறாக அவர்களுடைய குறும்புச் சிரிப்பின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதாகவே உணர்ந்தேன். என்னையுமறியாமல் புன்னைகை பரவிய முகத்துடன் அந்தப் பொழுது இப்பொழுதும் மனதில் ஓடி மறைகிறது.. புது வகுப்பு புது ஆசிரியர் என மொத்த வகுப்பும் மிரட்சியோடிருக்க நான் மட்டும் உற்சாகமாக இருப்பதைக் கண்ட பெர்சியுஸ் நேராக என்னிடம் வந்தார்...வகுப்பில் மாணவர் பெயர் கேட்கும் படலம் என்னிலிருந்தே தொடங்கியது. கடைசியாய் அமர்ந்திருந்த என்னிடம் இருந்து முதல் முதலாக ஒரு முதல் தொடங்கியது என்னை உற்சாகத்தின் உச்சத்தில் நிற்க வைத்தது...என்னை அங்கீகரித்த பெர்சியுஸ் என் தேவதை ஆகி போனது.அதன் பிறகான நாட்களில் ஆங்கிலம் என் தாய் மொழி போலானது. என் தேவதையிடம் நற்சான்று பெற நாயாக உழைக்க ஆரம்பித்தேன். கை மேல் பலனிருந்தது..ஆங்கிலத்தில் என்னை அடித்துக் கொள்ள ஆளில்லாமல் போனது என் வகுப்பில். என்னை முதல் வரிசையில் அமரும்படி தேவதை கேட்டது...! எனக்குள்ளிருந்த சாத்தான் மற்றைய ஆசிரியைகளின் முகங்களை என் மனக்கண்ணில் ஓட விட்டதால் உறுதியாக மறுத்து விட்டேன்.

அதன்பின் பெரும்பாலும் என் புத்தகத்தைதான் வகுப்பெடுக்க வாங்கிச் செல்லும் என் தேவதை..அப்படி வாங்கிச் செல்லும்போது என் புத்தகத்தை தன் தலையில் வைத்து வடை விற்கும் பெண் போல் கூவி கேலி செய்யும். கரும்பலகையில் எழுதிப் போட்டு விட்டு என்னருகே வந்தமரும் தேவதை. என் கை பிடித்து என் கையெழுத்தை அழகாக்கியது. சத்தியமாக என்னால் என் தாய்க்குச் சமமாக வைத்துப் தேவதையை பார்க்க முடியவில்லை...என் சகோதரியாகவும் பாவிக்க என் மனது ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு தோழியாக வைத்துப் பார்த்து மனது குதுகலித்தது.இருவரின் உலகமும் ஈடுகட்ட முடியாத அளவு வேறுபாடுகளைச் சுமந்திருந்தாலும் ,தேவதையின் உலகத்தினுள் இன்னும் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பெரிய மனுஷ தனத்தோடு செய்த காரியங்கள் தேவதைக்கு சிரிப்பையே வரவழைத்தது.
பள்ளி முடிந்த பிறகு தினமும் தேவதையின் வீட்டிற்க்கு சென்று விட்டு பின்பே என் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டேன். அத்தனை பேர் வகுப்பில் பயின்றாலும் தேவதை என்னிடம் மட்டுமே ஒரு வித பாசம் கொண்டிருந்ததென்பதை உறுதியாகக் கூற முடியும் என்னால். அம்மாவிடம் அனுமதி வாங்கி ஞாயிற்றுக் கிழமைகளில் தேவதையுடன் வேதக் கோவிலுக்குச் செல்வது சொர்கத்துக்கு செல்வது போலிருக்கும் எனக்கு. அமைதியாக கண்கள் மூடி ஜெபித்துக் கொண்டிருக்கும் தேவதையை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். தேவதையின் நட்பால் மற்ற ஆசிரியைகளும் கொஞ்சம் கனிவாக நடந்து கொண்டார்கள் என்னிடம். ஒன்றாம் வகுப்பு இறுதியில் தேவதை திடீரென்று பள்ளிக்கு வரவில்லை...தேவதையின் வீட்டிற்க்கு சென்றேன்..வரவேற்ற தேவதை இனி பள்ளிக்கு தான் வரப் போவதில்லை என்றது என் கண்களை ஊடுருவியபடி...

கண்கள் மறைக்கிரளவிர்க்கு நீர் கொட்டிக் கொண்டே இருந்தது..சிரித்துகொண்டே என்னை தேற்றினார்கள் தேவதையின் பெற்றோர். நெற்றியில் அழுந்தி ஒரு முத்தமிட்டது தேவதை. ஒரு வாரம் கடுமையான காய்ச்சல் வந்து படுத்து விட்டேன். மீண்டும் பள்ளிக்கு போன போது தெரிந்தது...கல்யாணம் என்ற பெயரில் என் தேவதை என்னிடம் இருந்து களவாடபட்டது.
மீண்டும் பழைய நிலைக்கு சென்று விட்டேன்...! படிப்பு மங்கி சேட்டைகள் அதிகரித்தது. சில காலம் வரை பார்க்கிற இடமெங்கும் தேவதையை தேடிக் கொண்டிருந்தேன்...பின்பு தேடலும் தொலைந்து போனது.

என்னுடைய உணர்வுகளுக்கு பெயர் சூட்ட உங்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது....உங்களைப் பொறுத்த வரைக்கும் அந்த உணர்வுக்கு எந்த பெயர் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்...என்னைப் பொறுத்த வரை அது என் முதற் காதல். இப்போதும் என் தேவதை பெர்சியுஸ்.




காலச் சக்கரத்தின் வேகமான சுழற்சியில் பத்தாம் வகுப்பை எட்டியிருந்தேன். ஆங்கில வழிப் பள்ளி என்றாலும் விவரம் தெரிந்த. வயதுக்கு மீறிய வளர்ச்சி கொண்டிருந்த மாணவர்களை தனியாக பிரித்து ஒரு வகுப்பில் போட்டு விட்டார்கள். அந்த வகுப்பிலும் வளர்ச்சி மற்றும் இதர குணநலன்கள் கடைசி வரிசையே எனக்கு ஒதுக்கப் பட்டது. தேவைகள், ரசனைகள், பெண்ணைப் பற்றிய பார்வைகள், முரண்பட்ட சமூகக் கண்ணோட்டம் என்று நரம்பை முரிக்கிக் கொள்ளும் பதின் வயதுக்குள் வாழ்ந்த பருவம் அது.

எதாவது வித்தியாசமாக செய்து சுற்றிருந்தவர்களின் கவனம் என் மீது படிய வைப்பதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றதால்...எப்பொழுதும் ஒரு நண்பர் கூட்டத்தின் ஊடே இருந்தேன். எதையும் ஒரு முரட்டுதனத்தோடு அணுகும் முறையே கொண்டிருந்தோம் நண்பர்களைனைவரும். பள்ளியின் தாளாளர் எங்களைவரையும் கூப்பிடு இந்த வருடம் முடிந்த பிறகு உங்களுக்கு இந்த பள்ளியில் இடம் கிடையாது கண்டிப்பாக என்று சொல்லிவிட்டார். ஏதோ ஒரு பெரிய வெற்றியை சாதித்து விட்டதாக அன்று இரவு நண்பர் கூட்டம் அனைத்தும் பீர் குடித்து மகிழ்ந்தது...தோம்..! இப்படி சென்று கொண்டிருந்த வாழ்வில் புயல் போல் நுழைந்தது ராதா. கல்லூரி செல்லும் பெண்ணைப் போலதான் இருந்தது பார்ப்பதற்கு..அறிவியல் ஆசிரியைக்கு திடீரென்று ஒரு அறுவை சிகிச்சைக்காக விடுப்பு எடுத்துக் கொண்டதால் அந்த பணிக்கு ராதா. பேரைக் கேட்டு ஒரு வயதான பெண்மணிதான் வரபோகிரதென்றேன்னிக் கொண்டோம். சத்தியமாக இப்படி ஒரு இளம் யுவதியை அதுவும் இந்த வகுப்புக்கு எப்படி என்று வியந்து மாய்ந்து போனோம். பின்புதான் முழு பெயர் அனு ராதா என்று தெரிந்தது. வகுப்புக்குள் ஒரே களை கட்டத் தொடங்கியது. வகுப்பாசிரியர் வந்து அந்த பெண்ணிடம் வாலாட்டினால் டி.சி கிழிக்கப்படும் என்று எச்சரிக்கை இட்டு சென்றார்.


,மற்றைய புது ஆசிரியர்கள் போலவே இவரும் இருப்பார் என்ற அனுமானத்தை முதல் வகுப்பிலே தகர்த்தெறிந்தார். நான் உட்பட கடைசி வரிசை நண்பர்களனைவரும் முதல் வகுப்பிலேயே வெளியேற்றப்பட்டோம். அனு மீது ஆத்திரமாக வந்தது. அதன் பிறகு அணுவின் வகுப்பை புறக்கணித்து எதிர்ப்பு காண்பித்தோம்..சளைக்காமல் எங்களை தலைமை ஆசிரியரிடம் அனுப்பி வைத்தது .. குறிப்பாக என் மீது தாளாத சினம் காட்டியது அனு...! அதன்பின் ஒட்டுமொத்த வகுப்பும் அனுவிற்கு எதிராக வெடிக்க...சற்று கீழிறங்கி வந்தது அனு...ஆனால் எப்பொழுதும் ஒரு இனம் தெரியாத சோகம் அல்லது கோபம் கலந்த முகத்துடனே தான் அனு இருந்தது. அப்போது விகடனின் திவீர ரசிகன் நான் ...புத்தகம் வந்த உடனே வாங்கி பள்ளி புத்தகங்களுக்கிடையில் வத்து பள்ளியிலேயே படித்து விடுவேன்.


அப்படி ஒரு விகடனில் வந்த தபு-சங்கரின் கவிதையை சிலாகித்து படித்து அதை வகுப்பின் கரும்பலகையில் எழுதி விட்டேன். வகுப்புக்கு வந்த அனு,கவிதையை பார்த்தது..பின்பு எங்களை பார்த்து யார் இப்படி எழுதியதென்றது? கவிதையை கூட ரசிக்கத் தெரியாத ஜென்மமா என்று வெறுப்புற்று..நான் முன்சென்றேன். முதன் முறையாக என்னைப் பார்த்து சிறு நகை ஒன்றை உதிர்த்த படியே சொல்லியது கவிதை அற்ப்புதமென்று, அது தபுவின் கவிதை என்றேன் ..விகடனில் வெளியானதை சொன்னேன். கேலியாக சிரித்து பின்பு வகுப்பை ஆரம்பித்தது.

அன்று வெள்ளிக் கிழமை. வெள்ளியன்று கோவிலுக்குச் செல்வது அப்பொழுது பொழுதுபோக்கு. தெய்வத்தை தரிசிக்க அல்ல தேவதைகளை தரிசனத்திற்காக.கூட்டத்தின் நடுவே யாரோ என்னை உற்று பார்ப்பதை உணர்ந்து திரும்பினால் அனு. தோழிகளோடு வந்திருந்தது. அன்று அனு நிறைய பேசியது என்னிடம்...கதை கட்டுரை கவிதை என்று பேச்சு நீண்ட போது அனுவின் மீது ஒரு நட்பு தொடங்கியிருந்தது. அதன் பிறகு வகுப்பில் உற்சாகம் கொப்பளித்தது. பார்த்த வயது வந்தோருக்கான திரைப் படம் முதல் பெண்களை சைட் அடித்த கதை வரை அனுவிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்கு பிறகு மதுரையில் இருக்கும் என் நண்பனின் அண்ணனிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பில் அவருடைய நண்பர் தன காதலியை மீட்டுச் செல்வதற்காக வருவதாகவும் அவருக்கு தேவையான உதவி செய்யுமாறும் கேட்டிருந்தார்.

அண்ணனின் நண்பரை திருநெல்வேலியின் மையப் பகுதியிலே தங்க வைத்தோம். பெண்ணின் பெயர் மற்றும் முகவரி அவரிடத்தில் இருந்தது. பெண்ணின் பெயர் ரூபி என்றும்...மதுரையில் கல்லூரியில் அவருடன் உடன்பயின்றவறேன்பதும் தெரிந்து கொண்டோம். இரு வீட்டாரின் எதிர்ப்பை தொடர்ந்து அப்பெண் வீட்டார் அந்தப் பெண்ணை இங்கு பாதுகாப்பு கருதி விட்டுச் சென்றதாகவும் சொன்னார்.


அது ஒரு ஞாயிற்று கிழமை மாலை..பெண்ணின் வீடிருந்த என்.ஜி.ஒ காலனி சென்றோம். பெண் வீடிற்கு சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு பெண்ணின் வீடிற்கு யார் செல்வது எப்படி பெண்ணை சந்திப்பது என்று முடிவெடுத்து இறுதியாக நானும் நண்பன் அருணும் செல்லும் படியானது. வீட்டினுள் சண்டே ஸ்பெஷல் திரைப் படம் ஓடிக் கொண்டிருந்தது...மொட்டை மாடியில் நைடிடன் உலவிக் கொண்டிருந்த பெண்தான் நாம் தேடி வந்த பெண்ணாக இருக்கவேண்டும் என்ற கணிப்போடு மேலே சென்றோம்...ரூபி என்று பேர் சொல்லியளைத்தால் திரும்பிய அப்பெண்ணை பார்த்து அதிர்ச்சியின் உச்ச்சத்திர்க்கே சென்றோம் நானும் அருணும்....வேறு யாருமல்ல அனு தான்....அனுவும் எங்களை அங்கு எதிர் பார்க்கவில்லை...அடுத்த நொடியே நைட்டியுடன் அணுவை இழுத்துக் கொண்டு ஓடி வந்து காரில் ஏற்றினோம்....

எல்லாம் சுபமாக திருசெந்தூர் கோவிலில் முடிந்த போது அனு என் கைகளை இறுக பற்றிக் கொண்டது.....ஏதோ பேச முயற்சித்தது...ஆனால் வார்த்தைகள் இல்லை.
எனக்கும் கூட.

வியாழன், 12 நவம்பர், 2009

மறைக்கப்பட்ட சுவாரசிய உண்மைகள்...!

சமீபத்தில் சாலையில் வந்துகொண்டிருக்கும் போது ஒரு வாழ்த்து சுவரொட்டியை காண நேர்ந்தது....அதில் அண்ணாவின் மனசாட்சியாகக் பெரியவர்,முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதியின் படம் அச்ச்சடிக்கப்பெற்றிருந்தது....பல காலமாக கழக தொண்டர்கள் ஓட்டுகிற வாழ்த்துப் படம் தான் அது.....எனினும் அதனைக் காணும்போது மனதிற்குள் சிரித்துக் கொள்வேன்....சில காலத்திற்கு முன்பு வரை நானும் அந்தப் படத்தை கண்டு சிலாகித்திருக்கிறேன்....ஆனால் அதன் பின்னால் உள்ள கதைகள் தெரிந்தப் பிறகு மிகச் சிரமப் பட்டே சிரிப்பை அடக்கிக் கொள்வேன்.

சில காலத்திற்கு முன்பு தமிழகத்தின் பிரபலமான இரு சக்கர வாகன உற்ப்பத்தி நிறுவனமான டி.வி.எஸ் குழுமத்தில் பணி செய்துக் கொண்டிருந்தேன்....அப்போது அங்கு உயரதிகாரியாக பணி புரிந்த ஒருவர் எனக்கு நட்ப்பானார்...டி.வி.எஸ் குழுமத்தில் உயரதிகாரி என்றாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர் என்ன பிரிவைச் சேர்ந்தவரென்று...ஆனால் இவர் ரொம்ப மாறுபட்ட குணாதிசயம் கொண்டவர்....மூடபழக்க வழக்கங்களை கிண்டலடிப்பவர்....இறை வழிபாட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டாதவர்...

விஷயத்திற்கு வருகிறேன்...ஒரு மாலைப் பொழுதில் வேலை முடித்து அவருடன் காரில் வர வேண்டிய சந்தர்ப்பம் அமைந்தது.....காரில் வரும்போது இதே வாழ்த்து படம் கொண்ட சுவரொட்டியை காண நேர்ந்த போது அவர் பலமாக சிரித்தார். காரணம் கேட்ட போது தான் எனக்கு தெரியும் அவரின் பாட்டனாரும் அண்ணாவும் மிக நெருக்கமான தோழர்கள் என்று.....அப்போது அண்ணாவுடன் நிறைய ஐயங்கார் நண்பர்களும் அதிகாரிகளும் கொண்ட வட்டம் இருந்ததெனவும்....கழக வட்டத்தையும் தாண்டி இந்த வட்டம் இருந்ததெனவும்....அவர்களிடம் உரையாடும்போது அவன்கிட்ட (மு.கா) கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும் என்று கூறுவது அண்ணாவின் வழக்கமாம்.

நாற்காலி வேட்டையில் உடனிருக்கும் நண்பனையே புறமுதுகில் குத்தும் அரசியல் சதுரங்க காய் நகர்த்தலுக்கு ராஜ தந்திரம் என்று தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அகராதி உருவாகிய காலக் கட்டம் அது. உண்மையில், தனது பேச்சாற்றல் மூலம் கழகக் கண்மணிகளின் இதயத்தில் ஒரு இடம் பிடித்த மாதிரி, உள்ளடி அரசியல் காய் நகர்த்தலிலும் பாய்ச்சலாக சென்றுகொண்டிருந்த கருணாநிதியைக் கண்டு மிகவும் கலக்கத்துடனே தான் இருந்தாராம் அண்ணா.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு நடந்த காய் நகர்த்தல்கள் மிக பிரசித்தி பெற்ற கதை.நிற்க.
புறமுதுகில் குத்துபடுவதும் குத்துவதும் தங்கள் வீரத்திர்ற்கு நேர்ந்த இழுக்க்காகவே பாவித்தது வீரத் தமிழினம். (குறிப்பு: பெரியவர்(மு.கருணாநிதி) சார்ந்த இனம் தமிழினம் அல்ல. அவரின் மூதாதையர்கள் ஆந்திராவின் பூர்வாங்க குடிகள் என்பதை நினைவு கொள்க.)





அது திராவிடக் கழகம் தமிழகத்தில் அனல் பரப்பிக் கொண்டிருந்த காலம். தந்தைப் பெரியார் தமிழக இளைஞர்களுக்கு எழுச்சித் தலைவனாக வழி நடத்திக் கொண்டிருந்த காலக் கட்டம்....தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் ஒரு பிள்ளை மார் சமூகத்து அன்பர் உணவகம் ஒன்று நடத்தி வந்திருக்கிறார். ஜாதி வெறி பிடித்த ஆதிக்க வர்க்கத்தின் ஒரு சோறுதான் அவரும். அப்போது பம்பாயிலிருந்து வந்த ஒரு ஆதி திராவிட இன இளைஞன் தெரியாமல் அந்த உணவகத்தில் நுழைந்து விட,அங்கே சிறிய அடி தடி நடந்து அந்த இளைஞன் வெளியேற்றப்பட்டான்.

இதைக் கேள்விப் பட்ட அந்தப் பகுதி தி.காவினர் பிள்ளை வாளுக்கு பாடம் புகட்ட நினைத்திருந்தனர்...அப்போது ஒரு கூட்டத்திற்கு கோவில்பட்டிக்கு பெரியார் வர ஏற்ப்பாடு செய்யப் பட்டிருந்தது....இதுதான் சமயம் என்று தி.காவிலுள்ள இளைஞர்கள் இரு தலித் இளைஞர்களுடன் பிள்ளை உணவகத்திற்கு சென்று அமர்ந்தனர். தலித் இளைஞர்கள் உள்ளே நுழைந்ததை பார்த்து கொதித்து போனார் பிள்ளை. கூட்டமாக தி காவினர் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்த பிள்ளை ,ஒரு முடிவுக்கு வந்தவராக அந்த உணவகத்திற்கு பின்புறம் இருந்த எச்சில் இலைகளை வளிக்கும் வேலை செய்து வந்த சக்கிலிய இன இளைஞனை கைகள் அலம்பி விட்டு அமர்ந்திருப்பவர்களுக்கு பரிமாறும்படி பணித்தார்.

சில நொடிகளுக்கு பிறகு அங்கே அந்த இரு தலித் இளைஞர்களைத் தவிர ஒருத்தரும் இல்லை.

செவ்வாய், 10 நவம்பர், 2009

பெண்ணடிமை...???

தலைப்பைப் போல எங்கும் கேட்க்கும் சம காலக் குரல்கள். வளரும் நாடுகளில் சற்று சன்னமாக, வளர்ந்த நாடுகளில் சற்று வீரியமாக...நிற்க. பெண்ணடிமைத் தனத்தைப் பற்றி ஆணாக உள்ள ஒருவனால் எப்படி விளக்க முடியும் என்று போர்க் கோடி தூக்க வேண்டாம்....சுடுமண் தரையிலும் தார்ச் சாலையிலும் வெற்று கால்களுடன் நடந்ததாலேயே காய்ச்சி போன ,தொட்டால் கைகளை அறுக்கும் கூரான பித்த வெடிப்புகளைச் சுமந்த கால்களும்...நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் ஆண்களுக்கு ஈடாக உடலுழைப்பில் இறுகிப் போன தேகமும்....கல்,மண் ,களை,மலம், குப்பை, சுமந்து இரும்பாய்ப் போன கைகளும்....உடர்க் கலவிக்கு மாற்றுச் சொல்லான காதல் அன்பு போன்ற சொற்களைக் கடந்து போகின்ற ,அவ்வுனர்ச்சிகளுக்கு ஒரு சிறு அர்த்தத்தைக் கூட கொடுக்காமல் வாழ்வின் அடுத்த நொடிகளுக்குள் நுழையும் வேகத்தோடு அனுதினமும் போராடும் ஒரு சராசரி தலித் பெண்களின் மீது படிந்துள்ள பெண்ணடிமைத் தனத்தைப் பற்றி பேசவே இந்தப் பதிவு.

வலைப் பதிவில் பரவலாக பெண்ணடிமை எதிர்ப்புகள் இருந்தாலும் அதில் தலித் பெண்ணியம் பற்றியக் கருத்துக்கள் காண இயலவில்லை எங்கும்... ( நான் தேடித் பார்த்த வரையிலும்).

எதற்கு தலித் பெண்ணியம் என்று பிரிவினைப் படுத்துகிறாய், நாங்கள் போராடுவது அனைத்துப் பெண்களுக்காகவும் மட்டுமே என்று சொல்பவர்களுக்கு முதற் பத்தியே விடை சொல்லி விடும்.

தலித்தியம் சம கால இலக்கியத்தில் ஒரு தனிக் களமாகவே பாவிக்கப் படுவதற்கு காரணம் ஒரு தலித்தால் மட்டுமே அவனுடைய உணர்வுகளை சமுதாயதிர் பால் உள்ள கோபங்களையும் குறைகளையும் வெளிப் படுத்த இயலும். வேறு யாராலும் அவ்வகையில் வெளிப் படுத்த இயலாது. அதைப் போலவேதான் தலித் பெண்ணியமும்.வேறு பெண்களால் அவர்களின் பார்வையை புரிந்து கொள்ளவியலாது.

ஒட்டு மொத்தமாக தலித் இனமே அடிமைச் சாதி என்று அடிமைப் படுத்தி வைத்திருக்கும் போது....அவ்வினத்தில் உள்ள ஆண்கள் தலித் பெண்களை அவர்கள் சார்ந்த ஆணாதிக்க போக்கோடு நடத்தப் படும் அப்பெண்களின் அடிமைத்தனம் ரணம் மிகுந்தது. சாதி இந்துப் பெண்களுக்கு உள்ள அடிமைத்தனம் சமுதயாத்தில் உள்ள மொத்த ஆண் வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதாக அமைந்துள்ளது. ஆனால் தலித் பெண்களுக்கோ சாதி இந்துப் பெண்களும் ஆதிக்க வர்க்கம் ஆனதுதான் கொடுமை.

கடைநிலை வேலைகள் அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக அசாத்திய உழைப்பை வெளிப் படுத்தும் இப்பெண்களுக்கு அவர்கள் வாங்கும் கூலியில் இருந்து அவர்கள் கற்பு
வரை கொடுக்கப் படும் மரியாதை மிகவும் மலிவானது..கொடுமையானது..! ஆனாலும் குடும்பத்தை நகர்த்தி செல்வதில்,குடும்பப் பொருளாதாரத்தை முன்னெடுத்துப் போவதிலும் இவர்களின் பாங்கு போற்றுதலுக்குரியது. ஆய்வு நடத்திப் பார்த்தால் இக்குடும்பகளில் ஆண்களின் கூலிகள் அனைத்தும் சாராயக் கடைக்குப் போக மீதமுள்ளதாகவே இருக்கும்....ஆனால் பெண்களின் கூலியே அவர்கள் குடும்பத்திற்கு உண்டான அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும்...அரசுப் பள்ளிகளில் பயிலும் அவர்களின் குழந்தைகளின் குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்வதற்கும் எதுவாக இருக்கும்.

பொதுவாக சாதி இந்துப் பெண்களின் மத்தியில் தலித்ப் பெண்களைப் பற்றி இப்படி ஒரு கருத்து இருக்கும்- தெருச் சண்டை போட்டுட்டே இருப்பள்க....! போராட்டமான வாழ்க்கை மத்தியில் வாழ்வாதாரங்களைத் தேடி ஓடும் போராட்டத்தில் உள்ள அப்பெண்களிடம் மென்மையான போக்கை எதிர்ப் பார்ப்பது நகைப்புக்குரிய விடயம். மேலும் இவ்வளவு முரடாக அவர்கள் இருந்த போதிலும் ஆதிக்க வர்க்கத்தினால் அடக்கித்தான் வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

தலித் விடுதலை என முழங்கும் தலித் தலைவர்கள் யாரும் அவ்வினப் பெண்களைப் பற்றி....அவர்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வாயே திறப்பதில்லை...மேலும் அவ்வினத்தில் இருந்து எந்த பெண் விடுதலைப் போராளியையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர முனைவதில்லை. பெண்களின் முன்னேற்றமே ஒரு சமூகத்தை முன்னேற்றும்.....அந்தச் சமூகமே நாட்டை வளப்படுத்தும்...(உதாரணம் -மேற்க்கத்திய நாடுகள்....தற்ப்போது இரான் )

ஆனால் மிகவும் விசித்திரமான....இன்று பெண் விடுதலை விரும்பிகள் கனவில் காணும் விடயங்கள் இக்குடும்பங்களில் சாதரணமாக நடக்கும். அதுதான் ஆண்களின் மீதான பெண்களின் வன்முறை....இங்கு பெண்கள் ஆண்களை அடிப்பது அன்றாட நிகழ்ச்சியாகவே இருக்கும்....அதை ஆண்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பெரும்பான்மையாக....காரணம் அப்பெண்கள் இல்லைஎன்றால் இவர்களால் சுதந்திரமாக சாரயம் குடிக்கவும் அதே சமயம் குடும்பப் பாரத்தை சுயமாக சுமக்கவும் முடியாதென்பதே.

பாலியல் ரீதியாக இப்பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வலையில் ஏற்றினால் வலைப் பதிவிற்கே வராமல் ஓடிப் போய் விடுவார்கள் இங்குள்ள பெண்ணியம் பேசும் பெண் வலைப் பதிவர்கள். இவ்வளவையும் தாண்டி இன்றும் லட்சக் கணக்கான தலித் குடும்பங்கள் வாழ்க்கைப் போகிறதென்றால் அது இந்த பெண் போராளிகளால்தான்.(பொருளீட்டுவதற்கு போராடுவதும் போராட்டமே....அதலால் அவர்கள் போராளிகளே...)
அதனாலேயே இப்பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அளவற்ற காதலும் உண்டு.

இறுதியாக...தலித் பெண்கள் விடுதலயிலிருந்தே அவ்வினத்தின் மேன்மைக்கு போராட்டங்கள் முன்னெடுக்கப் பட வேண்டும்...அரசாங்கங்கள் தீட்டுகிற இவர்களுக்கான முன்னேற்ற முயற்ச்சிகளில் பெண்களுக்கே முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். அதுவே அவர்கள் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் எடுக்கின்ற அரோக்கியமான முயற்சியாகும்.

இப்பதிவைப் படித்துவிட்டு உங்களுக்கு தெரிந்த ஒன்றிரண்டு முன்னேறிய தலித் குடும்பகளை இப்ப்ரசினையில் பொருத்திப் பார்த்து அவர்களெல்லாம் முன்னேறி விட்டார்கள் என்று சொல்லிச் செல்ல வேண்டாம். லட்சோப லட்ச தலித் பெண்கள் இப்பதிவில் வரும் வாழ்வையே இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அரசாங்கத்திடமே ஏராளமான ஆவணங்கள் உள்ளன.

வியாழன், 5 நவம்பர், 2009

ஆக்ரோஷ அரசாங்கமும்...போதையில் குடிமக்களும்...!

பண்டமாற்று முறையைக் கொண்ட பண்டைய வணிகத்தன்மை அனைத்தும் அரசாங்களில் கட்டுப் பாட்டில் இருந்தது. அப்போதைய அரசாங்கங்கள் மக்கள் நலனைச் சார்ந்தே பெரும்பாலும் இயங்கிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் கிடைக்காத பொருளை இங்கே கிடைக்கும் பொருள் கொண்டு மாற்றி அப்பொருளை மக்கட்க்கு கிடைக்கும்வண்ணம் செய்த அரசாங்கங்கள் அப்பொருள்களுக்கு வரி விதிப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானம் கொண்டு அரசாங்கம் இயங்கியது. அப்போதிருந்த அரசாங்கங்கள் தங்கள் எல்லைக் கோட்டின் மேல் மிகுந்த கண்காணிப்புடன் நடந்து கொண்டது. தங்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும்,தங்களின் பிராந்திய பலத்தை காட்டவும் போர் தொடுத்து புலப்படுத்திக்கொண்டது. அப்படியே தாம் கைப்பற்றிய இடங்களிலும் மக்கள் நலன் முன்னிறுத்தப் பட்டது.

உலகை மொத்தமாக ஆள வேண்டும் என்ற வெறித்(நரி) திட்டத்தோடு யிரோப்பியர்கள் கிளம்பும் முன் வரை இவ்வாறே உலகில் பல்வேறு அரசாங்கங்கள் செயல்ப்பட்டுக்கொண்டிருந்தன. முதன்முறையாக, வணிகத் தொடர்பைக் கொண்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியும் என்ற சித்தாந்தத்தோடு கிளம்பிய இரோப்பியர்களுக்கு போனவிடத்திலேல்லாம் வெற்றிகள் குவிய ஆரம்பித்தது. பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வெற்றிகரமாக அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவந்திருந்தார்கள். அவர்கள் செய்த தவறுகள்,பல்வேறு பகுதிகளின் இன மற்றும் கலாச்சாரங்களை முறையான புரிதல் இல்லாமற் மக்கள் நலம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் அந்தந்த பகுதிகளில் நிறைவேற்ற முயன்றனர்,மேலும் அனைத்து பகுதிகளிலும் மக்களிடம் துவேஷங்களும் பரவிக்கிடந்ததால் அவர்களால் முழுமையான மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் எடுககமுடியாமர்ப் போனது.

இந்த இடத்தில்தான் யிரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கைப் பற்றிய பல பகுதிகளிலும் இருந்து விடுதலைக் குரல்கள் கிளம்ப ஆரம்பித்தன. இருபதாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பகுதிகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தன. அப்படி சுதந்திரம் பெற்ற பெரும்பான்மை பகுதிகளில் அந்தந்த பகுதிகளின் பெரும்பான்மை இனங்களின் அரசாங்கங்களே அமையப்பெற்றன.இந்தக் காலக்கட்டத்தில்தான் அரசாங்கங்கள் தங்கள் இனம் சார்ந்து இயங்க ஆரம்பித்தன. குறிப்பிட்ட இனமும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் பெரும்பான்மையாக அரசாங்களில் இடம்பெற்றிருந்தனர்.

இதற்க்குபிரகான காலங்கள் உலகப் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களினால் நிறைய மாற்றங்களுக்குள்ளானது. அரசாங்கங்களை சார்ந்து இயங்கிய வாணிபம் போய் வாணிபம் சார்ந்த அரசாங்களாக மாற ஆரம்பித்திருந்தன.. பன்னாட்டில் வியாபாரத்தைத் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்களாக உறுப் பெற்றிருந்தன பல நிறுவனங்கள்.வளரும் நாடுளின் பொருளாதாரத் தேவைகளைக் கணக்கிற் கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் முதலீடுகளை தொடங்கியது.

இவ்விடத்தில் தான் மக்கள் நலம் பின்னிருத்தப்பட்டு சமூகத்தின் பணக்கார வர்க்கத்தின் ஆசைகளுக்கும் பன்னாட்டு நிறுவனகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் வளரும் அரசாங்கங்கள் செவிசாய்க்க ஆரம்பித்தன.இப்போது எல்லை கோடுகளும் இறையான்மையும் இரண்டாம்பட்சமே என்று கோட்பாடுகளை வகுத்துக் கொண்டன அரசாங்கங்கள். காடுகள் அழிக்கப் பட்டன...மக்களின் விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனகளுக்கு தாரை வார்க்கப் பட்டன. ஆற்று படுகைகளும் நிலத்தடி நீரும் கூட வியாபாரம் ஆக்கப்பட்டது. திடிரென்று வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் பறிக்கப் பட்ட மக்கள் கொந்தளித்தனர். மக்களுக்காக போராட விடுதலை இயக்கங்கள் பிறந்தன. அரசாங்கங்கள் விழித்து கொண்டன. ஊடகங்கள் மூலம் பாலியல் போதையிலும் பன்னாட்டு உற்ப்பத்தி பொருட்க்களை நுகரவும் செய்து மக்களை ஒருவித நிரந்தர போதையில் ஆழ்த்தின அரசாங்கங்கள்.

இப்போது அரசாங்கம் என்பது இருதரப்பால் ஆனது. பணக்கார வர்க்கமும் பன்னாட்டு முதலாளிகளும். எந்த அரசாங்கமாவது கொடுத்த வாக்கை மீறிவிட்டால் பணக்காரர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்தன. அவர்களின் வியாபாரங்களுக்கு தடையாக இருக்கும் மக்கள் கிளர்ச்சியை அடக்கவும் தங்களின் நிறுவனகளின் சொத்துகளைப் பாதுக்காக்கவும் தனது அடியாட்ப்படையை (ராணுவமும், காவர்த்துரையும்) பயன்படுத்திக்கொண்டன அரசாங்கங்கள். இதற்கென்றே அனைத்து தேசங்களும் ஒரு மாமா கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தன. அந்த மாமாக் கூட்டத்தினர்க்கு பெயர்தான் உளவுத்துறை. இந்த மாமாக்களுக்கு வேலையே பணக்கார வர்க்கத்தினை எதிர்ற்பவர்களையும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்ப்பவர்களையும் இறையாண்மை என்றபெயரில் வேட்டையாடுவதுதான். இதற்காக பன்னாட்டு முதலாளிகள் எலும்புத்துண்டுகளை இந்த மாமாக்களுக்கு இஷ்டம்போல் வீசி எறிந்தனர்.

இவ்வளவு போதையில் ஆழ்ந்திருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆதிக்க வர்க்கத்தினிடம் இருந்து மக்களைக் காக்க விடுதலை இயக்கங்கள் கடுமையாக போராடிக்கொண்டே இருக்கின்றன. இனி அரசாங்கங்கள் கோட்ப்பாடுகள் அனைத்தும் ஒன்றே. பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் தேர்ந்தடுத்த அமைப்பே அரசாங்கம். மூன்றாம் உலகப் போர் கண்டிப்பாக தேசங்களுக்கிடையே ஏற்ப்படாது இனி. ஆனால் கண்டிப்பாக மக்கள் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கும் பன்னாட்டு நிறுவனகளின் நாய்களான மாமா(உளவுத்துறை) கூட்டத்துக்கும் இடையேயான ஒரு போராகவே இருக்கும். ஆனால் இப்போர் மக்களுக்கு சாதகமாக இருக்கவிடிலும் பணக்காரர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துகளுக்கும் மிகப்பெரிய சேதாரத்தை உண்டுபண்ணுவதாக இருக்கும் என்று மட்டும் நம்பலாம்.

செவ்வாய், 3 நவம்பர், 2009

எல்லைச் சாமியும்...எச்சொதிகார சாமிகளும்..!

திரவிட நாகரிகத்தில் அவர்கள் வணங்கும் முறைகளும் அவர்களின் கடவுள்களும் முழுக்க முழுக்க இயற்க்கை சார்ந்ததாகவே இருந்தது. நீர்,நிலம்,காற்று,நெருப்பு,விலங்குகள்,மற்றும் செடிகொடிகள் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் கடவுளாக கொண்டார்கள். இயற்கையின் மீதும் அதன் சக்திகளின் மீதும் மாறா மதிப்பும் பயமும் கொண்டிருந்தார்கள். அவர்களின் கடவுளுக்கு அவர்கள் உண்ணும் உணவினையே படைத்து வழிப்பட்டார்கள்.

ஆரியர்களின் வருகைக்கு முன் வரை திராவிட நாகரீகம் இவ்வாறே இருந்திருக்கிறது.மனித உருவ வழிபாடு அவர்களிடம் காணப் படவில்லை.ஆரியர்கள் திராவிடர்களை அடிமைப் படுத்திய போது மனித உருவங்கள் கடவுளாக வழிபட துவங்கிருக்கிறார்கள் திராவிடர்கள்.

ஆனால் காலப்போக்கில் திராவிட இனம் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாழ ஆரம்பித்தப் போது அக்குளுக்களையும் அவர்கள் சார்ந்த கால்நடைகள் மற்றும் விளைபயிர்களையும் பிற குழுக்களிடம் இருந்து காத்து நின்ற ,வென்ற காவலர்கள் அவர்களுடைய இறப்பிற்கு பின் குழுக்களின் குல தெய்வமாகவும் மற்றும் ஊரின் எல்லைச் சாமியாகவும் வணங்கப் பெற்றனர்.

இதில் முக்கியமான விஷயம் இந்த எல்லைச் சாமிகள் அனைத்தும் காவல் தெய்வங்கள் என்றே வணங்கப்படுகின்றன. இவைகளுக்கு உணவாக நெய்யும் வெண்ணையும் படைக்கப்படுவதில்லை..(தெய்வ குற்றமாகிவிடும்)....திராவிட உணவு பழக்கமான மாமிசமும் சாராயமும் படைக்கப்படுகின்றன. இந்தச் சாமிகளும் பெரும்பாலும் நிழலில் இருப்பதில்லை. வெயிலில் காய்ந்து கொண்டேதான் காவல் புரியும்.


எல்லைச் சாமியென்றால் எல்லையில்தான் இருக்கவேண்டும் என்று சட்டங்கள் வகுக்கப்படவில்லை. ஆயினும் எல்லையில்தான் திராவிடர்கள் வசிக்கனுமதிப்பட்டனர். ஆகவே அவர்களுக்கு மத்தியிலே இத்தெய்வங்களும் இருந்தன.காலப்போக்கில் அப்படியே ஆகிப்போனது. ஆரிய இனத்தின் எச்சொதிகார கடவுள்களுக்கு மத்தியில் அடிமை இனங்களின் கடவுள்கள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருப்பதை ஆதிக்க வர்க்கம் அனுமதிக்கவில்லை.அதனாலேயே பெரும்பாலும் எல்லாச் சாமிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும்.

ஆனால் இந்த எல்லைச் சாமிகளோடு மக்கள் கொண்டுள்ள உளப்பூர்வமான நெருக்கம் எச்சொதிகார கடவுள்களுக்கு இம்மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆரியர்களின் வாழ்க்கை முறைப் போலவே அவர்களின் வணங்கும் முறையும் நம்மிடம் (திராவிட இனம்) இருந்து பெரிய மாறுதல்களைக் கொண்டிருந்தது. ஆனால் திராவிடக் கடவுள்களுக்கு இருப்பதை விட பன்மடங்கு சக்திவாய்ந்ததாக ஆரியக் கடவுள்கள் காண்பிக்கப் பட்டன. ஆதலால்தான் அவற்றின் வரலாறுகளைப் பார்த்தால்...அனைத்து கடவுள்களும் தேவலோகத்தில் இருந்தே தோன்றிருக்கும்.

மாறாக நமது எல்லைச் சாமிகளின் (சுடலைமாடன்,காத்தவராயன்,முனியசாமி,வனப்பேச்சி..) வரலாறுகளைப் பார்த்தால் அவை அனைத்தும் மனிதனாக பிறந்து சக மனிதனோடு போரிட்டு மடிந்து போய்விட்டிருக்கும். அவர்கள்(ஆரியர்கள்) திட்டமிட்டு செய்தார்களா அல்லது எத்தோச்சையாக செய்தார்களா என்று இன்றும் புரியாத தருணத்தில்....ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த(அடிமை) இனங்கள் அவர்களின் கடவுள்களைப் போலவே நடத்தப்பட்டனர்...அடிமைச் சங்கிலிகளும் இன்றும் அவ்வினத்தின் கைகளில் பூட்டப் பட்டிருக்கிறது.

ஆதிக்கச் சமூகத்தின் குருர முகம் கடவுள் வழிபாடுகளில் கூட தன கூரான பற்களைக் காண்பிக்கிறது. திராவிட மக்கள் ஒரு காலகட்டம் வரை ஆரிய இனத்தின் கடவுள்களை திரும்பிக் கூட பார்க்காமல் இருந்தனர். ஆனால் பின்பு நிலைமை தலைகீழாக மாறியது. அது நந்தனையே தீயிலிட்டு கொன்றுவிட்டு அவர் ஜோதியில் கலந்து விட்டார் என்று பொய்யுரை பரப்பும் அளவிற்கு சென்றது. அடிமை இனங்கள் எச்சொதிகார சாமிகளை கோவிலுக்கு வெளிய இருந்து மட்டும் வணங்க அனுமதிக்கும் வரை சென்றது. மூடப் பழக்கங்கள் பலவும் தோன்றி மூதாதையர்களை வணங்குவது கூட தப்பு, எச்சொதிகார சாமிகள் மட்டுமே நிஜம் என்றும் காக்கும் கடவுள் என்றும் பரப்பப்பட்டது.


யோசித்துப் பார்த்தால் திராவிட இனங்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டங்களுக்கு பொருள் புரியவில்லை. நாம் அவர்களின் எச்சொதிகார சாமிகளைப் புறக்கணித்து வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகட்க்கு பின்பு இழுத்துச் சென்றிருக்கவேண்டும் என்பதே எனக்குத் தோன்றுகிறது..!