செவ்வாய், 3 நவம்பர், 2009

எல்லைச் சாமியும்...எச்சொதிகார சாமிகளும்..!

திரவிட நாகரிகத்தில் அவர்கள் வணங்கும் முறைகளும் அவர்களின் கடவுள்களும் முழுக்க முழுக்க இயற்க்கை சார்ந்ததாகவே இருந்தது. நீர்,நிலம்,காற்று,நெருப்பு,விலங்குகள்,மற்றும் செடிகொடிகள் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் கடவுளாக கொண்டார்கள். இயற்கையின் மீதும் அதன் சக்திகளின் மீதும் மாறா மதிப்பும் பயமும் கொண்டிருந்தார்கள். அவர்களின் கடவுளுக்கு அவர்கள் உண்ணும் உணவினையே படைத்து வழிப்பட்டார்கள்.

ஆரியர்களின் வருகைக்கு முன் வரை திராவிட நாகரீகம் இவ்வாறே இருந்திருக்கிறது.மனித உருவ வழிபாடு அவர்களிடம் காணப் படவில்லை.ஆரியர்கள் திராவிடர்களை அடிமைப் படுத்திய போது மனித உருவங்கள் கடவுளாக வழிபட துவங்கிருக்கிறார்கள் திராவிடர்கள்.

ஆனால் காலப்போக்கில் திராவிட இனம் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாழ ஆரம்பித்தப் போது அக்குளுக்களையும் அவர்கள் சார்ந்த கால்நடைகள் மற்றும் விளைபயிர்களையும் பிற குழுக்களிடம் இருந்து காத்து நின்ற ,வென்ற காவலர்கள் அவர்களுடைய இறப்பிற்கு பின் குழுக்களின் குல தெய்வமாகவும் மற்றும் ஊரின் எல்லைச் சாமியாகவும் வணங்கப் பெற்றனர்.

இதில் முக்கியமான விஷயம் இந்த எல்லைச் சாமிகள் அனைத்தும் காவல் தெய்வங்கள் என்றே வணங்கப்படுகின்றன. இவைகளுக்கு உணவாக நெய்யும் வெண்ணையும் படைக்கப்படுவதில்லை..(தெய்வ குற்றமாகிவிடும்)....திராவிட உணவு பழக்கமான மாமிசமும் சாராயமும் படைக்கப்படுகின்றன. இந்தச் சாமிகளும் பெரும்பாலும் நிழலில் இருப்பதில்லை. வெயிலில் காய்ந்து கொண்டேதான் காவல் புரியும்.


எல்லைச் சாமியென்றால் எல்லையில்தான் இருக்கவேண்டும் என்று சட்டங்கள் வகுக்கப்படவில்லை. ஆயினும் எல்லையில்தான் திராவிடர்கள் வசிக்கனுமதிப்பட்டனர். ஆகவே அவர்களுக்கு மத்தியிலே இத்தெய்வங்களும் இருந்தன.காலப்போக்கில் அப்படியே ஆகிப்போனது. ஆரிய இனத்தின் எச்சொதிகார கடவுள்களுக்கு மத்தியில் அடிமை இனங்களின் கடவுள்கள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருப்பதை ஆதிக்க வர்க்கம் அனுமதிக்கவில்லை.அதனாலேயே பெரும்பாலும் எல்லாச் சாமிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும்.

ஆனால் இந்த எல்லைச் சாமிகளோடு மக்கள் கொண்டுள்ள உளப்பூர்வமான நெருக்கம் எச்சொதிகார கடவுள்களுக்கு இம்மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆரியர்களின் வாழ்க்கை முறைப் போலவே அவர்களின் வணங்கும் முறையும் நம்மிடம் (திராவிட இனம்) இருந்து பெரிய மாறுதல்களைக் கொண்டிருந்தது. ஆனால் திராவிடக் கடவுள்களுக்கு இருப்பதை விட பன்மடங்கு சக்திவாய்ந்ததாக ஆரியக் கடவுள்கள் காண்பிக்கப் பட்டன. ஆதலால்தான் அவற்றின் வரலாறுகளைப் பார்த்தால்...அனைத்து கடவுள்களும் தேவலோகத்தில் இருந்தே தோன்றிருக்கும்.

மாறாக நமது எல்லைச் சாமிகளின் (சுடலைமாடன்,காத்தவராயன்,முனியசாமி,வனப்பேச்சி..) வரலாறுகளைப் பார்த்தால் அவை அனைத்தும் மனிதனாக பிறந்து சக மனிதனோடு போரிட்டு மடிந்து போய்விட்டிருக்கும். அவர்கள்(ஆரியர்கள்) திட்டமிட்டு செய்தார்களா அல்லது எத்தோச்சையாக செய்தார்களா என்று இன்றும் புரியாத தருணத்தில்....ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த(அடிமை) இனங்கள் அவர்களின் கடவுள்களைப் போலவே நடத்தப்பட்டனர்...அடிமைச் சங்கிலிகளும் இன்றும் அவ்வினத்தின் கைகளில் பூட்டப் பட்டிருக்கிறது.

ஆதிக்கச் சமூகத்தின் குருர முகம் கடவுள் வழிபாடுகளில் கூட தன கூரான பற்களைக் காண்பிக்கிறது. திராவிட மக்கள் ஒரு காலகட்டம் வரை ஆரிய இனத்தின் கடவுள்களை திரும்பிக் கூட பார்க்காமல் இருந்தனர். ஆனால் பின்பு நிலைமை தலைகீழாக மாறியது. அது நந்தனையே தீயிலிட்டு கொன்றுவிட்டு அவர் ஜோதியில் கலந்து விட்டார் என்று பொய்யுரை பரப்பும் அளவிற்கு சென்றது. அடிமை இனங்கள் எச்சொதிகார சாமிகளை கோவிலுக்கு வெளிய இருந்து மட்டும் வணங்க அனுமதிக்கும் வரை சென்றது. மூடப் பழக்கங்கள் பலவும் தோன்றி மூதாதையர்களை வணங்குவது கூட தப்பு, எச்சொதிகார சாமிகள் மட்டுமே நிஜம் என்றும் காக்கும் கடவுள் என்றும் பரப்பப்பட்டது.


யோசித்துப் பார்த்தால் திராவிட இனங்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டங்களுக்கு பொருள் புரியவில்லை. நாம் அவர்களின் எச்சொதிகார சாமிகளைப் புறக்கணித்து வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகட்க்கு பின்பு இழுத்துச் சென்றிருக்கவேண்டும் என்பதே எனக்குத் தோன்றுகிறது..!

3 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

வலையில் இப்படியான முரட்டுக்குரல் அரிதாகவே தென்படுகிறது.
அதைச் சொல்லக் குதிக்கும் உன் ஆர்வம் சமரசமற்றுத் தொடர வேண்டுகிறேன்.

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் காமராஜ் சார்..! உங்கள் கருத்துரைகள் எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. நிற்க. சில சமயங்களில் இப்படி ஏன் நடந்தது என்று யோசிக்கும்போது எழுந்த சிந்தனையே இப்பதிவு. கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றி காமராஜ் சார்.

priyamudanprabu சொன்னது…

nice one...