வியாழன், 5 நவம்பர், 2009

ஆக்ரோஷ அரசாங்கமும்...போதையில் குடிமக்களும்...!

பண்டமாற்று முறையைக் கொண்ட பண்டைய வணிகத்தன்மை அனைத்தும் அரசாங்களில் கட்டுப் பாட்டில் இருந்தது. அப்போதைய அரசாங்கங்கள் மக்கள் நலனைச் சார்ந்தே பெரும்பாலும் இயங்கிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் கிடைக்காத பொருளை இங்கே கிடைக்கும் பொருள் கொண்டு மாற்றி அப்பொருளை மக்கட்க்கு கிடைக்கும்வண்ணம் செய்த அரசாங்கங்கள் அப்பொருள்களுக்கு வரி விதிப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானம் கொண்டு அரசாங்கம் இயங்கியது. அப்போதிருந்த அரசாங்கங்கள் தங்கள் எல்லைக் கோட்டின் மேல் மிகுந்த கண்காணிப்புடன் நடந்து கொண்டது. தங்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும்,தங்களின் பிராந்திய பலத்தை காட்டவும் போர் தொடுத்து புலப்படுத்திக்கொண்டது. அப்படியே தாம் கைப்பற்றிய இடங்களிலும் மக்கள் நலன் முன்னிறுத்தப் பட்டது.

உலகை மொத்தமாக ஆள வேண்டும் என்ற வெறித்(நரி) திட்டத்தோடு யிரோப்பியர்கள் கிளம்பும் முன் வரை இவ்வாறே உலகில் பல்வேறு அரசாங்கங்கள் செயல்ப்பட்டுக்கொண்டிருந்தன. முதன்முறையாக, வணிகத் தொடர்பைக் கொண்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியும் என்ற சித்தாந்தத்தோடு கிளம்பிய இரோப்பியர்களுக்கு போனவிடத்திலேல்லாம் வெற்றிகள் குவிய ஆரம்பித்தது. பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வெற்றிகரமாக அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவந்திருந்தார்கள். அவர்கள் செய்த தவறுகள்,பல்வேறு பகுதிகளின் இன மற்றும் கலாச்சாரங்களை முறையான புரிதல் இல்லாமற் மக்கள் நலம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் அந்தந்த பகுதிகளில் நிறைவேற்ற முயன்றனர்,மேலும் அனைத்து பகுதிகளிலும் மக்களிடம் துவேஷங்களும் பரவிக்கிடந்ததால் அவர்களால் முழுமையான மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் எடுககமுடியாமர்ப் போனது.

இந்த இடத்தில்தான் யிரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கைப் பற்றிய பல பகுதிகளிலும் இருந்து விடுதலைக் குரல்கள் கிளம்ப ஆரம்பித்தன. இருபதாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பகுதிகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தன. அப்படி சுதந்திரம் பெற்ற பெரும்பான்மை பகுதிகளில் அந்தந்த பகுதிகளின் பெரும்பான்மை இனங்களின் அரசாங்கங்களே அமையப்பெற்றன.இந்தக் காலக்கட்டத்தில்தான் அரசாங்கங்கள் தங்கள் இனம் சார்ந்து இயங்க ஆரம்பித்தன. குறிப்பிட்ட இனமும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் பெரும்பான்மையாக அரசாங்களில் இடம்பெற்றிருந்தனர்.

இதற்க்குபிரகான காலங்கள் உலகப் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களினால் நிறைய மாற்றங்களுக்குள்ளானது. அரசாங்கங்களை சார்ந்து இயங்கிய வாணிபம் போய் வாணிபம் சார்ந்த அரசாங்களாக மாற ஆரம்பித்திருந்தன.. பன்னாட்டில் வியாபாரத்தைத் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்களாக உறுப் பெற்றிருந்தன பல நிறுவனங்கள்.வளரும் நாடுளின் பொருளாதாரத் தேவைகளைக் கணக்கிற் கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் முதலீடுகளை தொடங்கியது.

இவ்விடத்தில் தான் மக்கள் நலம் பின்னிருத்தப்பட்டு சமூகத்தின் பணக்கார வர்க்கத்தின் ஆசைகளுக்கும் பன்னாட்டு நிறுவனகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் வளரும் அரசாங்கங்கள் செவிசாய்க்க ஆரம்பித்தன.இப்போது எல்லை கோடுகளும் இறையான்மையும் இரண்டாம்பட்சமே என்று கோட்பாடுகளை வகுத்துக் கொண்டன அரசாங்கங்கள். காடுகள் அழிக்கப் பட்டன...மக்களின் விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனகளுக்கு தாரை வார்க்கப் பட்டன. ஆற்று படுகைகளும் நிலத்தடி நீரும் கூட வியாபாரம் ஆக்கப்பட்டது. திடிரென்று வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் பறிக்கப் பட்ட மக்கள் கொந்தளித்தனர். மக்களுக்காக போராட விடுதலை இயக்கங்கள் பிறந்தன. அரசாங்கங்கள் விழித்து கொண்டன. ஊடகங்கள் மூலம் பாலியல் போதையிலும் பன்னாட்டு உற்ப்பத்தி பொருட்க்களை நுகரவும் செய்து மக்களை ஒருவித நிரந்தர போதையில் ஆழ்த்தின அரசாங்கங்கள்.

இப்போது அரசாங்கம் என்பது இருதரப்பால் ஆனது. பணக்கார வர்க்கமும் பன்னாட்டு முதலாளிகளும். எந்த அரசாங்கமாவது கொடுத்த வாக்கை மீறிவிட்டால் பணக்காரர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்தன. அவர்களின் வியாபாரங்களுக்கு தடையாக இருக்கும் மக்கள் கிளர்ச்சியை அடக்கவும் தங்களின் நிறுவனகளின் சொத்துகளைப் பாதுக்காக்கவும் தனது அடியாட்ப்படையை (ராணுவமும், காவர்த்துரையும்) பயன்படுத்திக்கொண்டன அரசாங்கங்கள். இதற்கென்றே அனைத்து தேசங்களும் ஒரு மாமா கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தன. அந்த மாமாக் கூட்டத்தினர்க்கு பெயர்தான் உளவுத்துறை. இந்த மாமாக்களுக்கு வேலையே பணக்கார வர்க்கத்தினை எதிர்ற்பவர்களையும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்ப்பவர்களையும் இறையாண்மை என்றபெயரில் வேட்டையாடுவதுதான். இதற்காக பன்னாட்டு முதலாளிகள் எலும்புத்துண்டுகளை இந்த மாமாக்களுக்கு இஷ்டம்போல் வீசி எறிந்தனர்.

இவ்வளவு போதையில் ஆழ்ந்திருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆதிக்க வர்க்கத்தினிடம் இருந்து மக்களைக் காக்க விடுதலை இயக்கங்கள் கடுமையாக போராடிக்கொண்டே இருக்கின்றன. இனி அரசாங்கங்கள் கோட்ப்பாடுகள் அனைத்தும் ஒன்றே. பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் தேர்ந்தடுத்த அமைப்பே அரசாங்கம். மூன்றாம் உலகப் போர் கண்டிப்பாக தேசங்களுக்கிடையே ஏற்ப்படாது இனி. ஆனால் கண்டிப்பாக மக்கள் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கும் பன்னாட்டு நிறுவனகளின் நாய்களான மாமா(உளவுத்துறை) கூட்டத்துக்கும் இடையேயான ஒரு போராகவே இருக்கும். ஆனால் இப்போர் மக்களுக்கு சாதகமாக இருக்கவிடிலும் பணக்காரர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துகளுக்கும் மிகப்பெரிய சேதாரத்தை உண்டுபண்ணுவதாக இருக்கும் என்று மட்டும் நம்பலாம்.

கருத்துகள் இல்லை: