திங்கள், 23 நவம்பர், 2009

மிட்டாய்..!

எண்பதுகளின் மத்தியில் தென்னக தெருக்களில் அவர்களை சாதரணமாக பார்க்கலாம்..! கையில் பெரிய உருளை தடியோடு வருவார்கள். குழந்தைகளின் ஆதர்ஷ நாயகர்கள் அவர்கள். அவர்களை தெருக்களில் பார்த்து விட்டால் குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு சென்று வீடிலுள்ளவரிடம் அடம் செய்து காசு வாங்கி விடுவார்கள்.

உருளைத் தடியின் உச்சத்தில் உள்ள சவ்வு மிட்டாய்தான் இத்தனைக்கும் காரணம். இங்கே(சென்னையில்) சவ்வு மிட்டாய் என்று பஞ்சு மிட்டாயை சொல்கிறார்கள்.
ஆனால் நான் குறிப்பிடுவது சவ்வைப் போல இழுத்தால் நீண்டு கொண்டே போகும் மிட்டாய். சவ்வு மிட்டாயில் என்ன விசேஷம் என்று கேட்குறீர்களா? விசேஷம் அதில்லை.மிட்டாய் விற்பவரின் கலை கரங்கள்தான் விசேஷம். கொஞ்சமே கொஞ்சமாக அந்த உருளை தடியின் உச்சிலுள்ள சவ்வு மிட்டாயை எடுத்து குழந்தைகள் என்ன வடிவில் கேட்க்கிரார்களோ அந்த வடிவில் செய்து தருவார். மயில்,கிளி,கைகடிகாரம்,வண்டி, என பல்வேறு வடிவங்களில் செய்து நம் கைகளில் ஒட்டிச் செல்வார்.

குழந்தைகளுக்கு உடனே மிட்டாயை சுவைக்க மனம் வராது....கைகளில் வைத்து கொண்டே இருப்பார்கள். பின்பு அரை மனதோடு சாப்பிடுவார்கள். நானும் சவ்வு மிட்டாயின் தீவிர ரசிகன்தான். இது போக காசு மிட்டாய் என்று ஒன்று உண்டு. அந்த மிட்டாயினுள் காசுகள் இருக்கும் சில சமயம். அப்புறம் பாக்கு மிட்டாய்,தேன் மிட்டாய்...
இன்று இவையனைத்தும் கிடைப்பதில்லை...தேன் மிட்டாய் மட்டும் ஆங்காங்கே தென்படுகிறது.




நான் நாலாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம். குமார் மச்சானுடன் தான் இருப்பேன் எப்போதும். குமார் மச்சானின் தந்தையும் என் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் குடும்ப நண்பர்களாகி விட்டோம். குமார் மச்சான் படித்து விட்டு வட்டி தொழில் செய்து வந்தார். அப்போது குமார் மச்சான் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். நான் எட்டு வயதில் இருந்தேன் என நியாபகம். குமார் மச்சானிடம் ஒரு லூனா வாகனம் இருந்தது. அதில்தான் என்னை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்வார். அவரின் நண்பர்களனைவரும் ஒத்த வயதுடயவர்களேன்பதால் அவர்கள் கூடினாலே அங்கே இளமை கொப்பளிக்கும்.

அப்படி அவர்கள் ஒன்றுகூடும் போதெல்லாம் நான் என்ன கேட்க்கிறேனோ அதெல்லாம் வாங்கி என் கைகளை நிரப்பி விடுவார்கள். இப்படியான ஒரு பொழுதில்தான் குமார் மச்சானுக்கும் அவர் நண்பனுக்கும் ஒரு போட்டி வந்திருக்கிறது. அவர்கள் கடைசியாக பேசியது மட்டும் என் காதினில் விழுந்தது.

குமார் மச்சான் சொல்லிக்கொண்டிருந்தார்...அவன் என் மாப்ளை ,யார் என்ன பண்ணாலும் அவன் என்ன விட்டு போக மாட்டான்....சிறிது நேரத்தில் அந்த நண்பர் என்னை தன் கவாசாகி பைக்கில் ஏற்றிக் கொண்டு ஊரை முழுவதும் ஒரு வட்டம் அடித்தார்....பின்பு அவர் வீட்டுக்கு அழைத்து சென்றார்...அங்கு எல்லோரும் மிக அன்பாக பேசினார்கள்....எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அவர்களை....பின்பு மீண்டும் அவர் வீட்டிலிருந்து கிளம்பினோம்...அப்போது எனக்கு அவர் கைகள் பத்தாத அளவிற்கு சாக்லேட் வாங்கி கொடுத்தார்....பின்பு பழைய இடத்திற்கே வந்தோம்....வந்த உடன் மச்சானிடம் ஒட்டிக் கொண்டேன்...அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்....நான் அதை செவி மடுக்கவில்லை...திடீரென்று குமார் மச்சான் என்னிடம் எங்க ரெண்டு பேரில் உனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார்..! அவர் கண்களில் அவ்ளோ ஒரு நம்பிக்கை தெரிந்தது அவர் பெயரை மட்டுமே சொல்வேனென்று....நான் எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் என்றேன்....அந்த நண்பர் மச்சானை பார்த்து சிரிக்க....மச்சான் திரும்பவும் என்னிடம் இரண்டு தடவை கேட்டார்....நான் அதே பதிலை தான் திரும்பவும் சொன்னேன்.

யார் சொன்னார்கள் குழந்தையின் அன்பு எதிர்பாற்பற்றதென்று....இந்த உலகில் எல்லாதிற்கும் ஒரு விலை இருக்கின்றது...அப்போது நான் அந்த நிகழ்வுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை....ஆனால் கொஞ்சம் வளர்ந்த பொழுது குற்ற உணர்ச்சி என்னை குத்தி கிழித்தது....மச்சானின் கண்களில் தான் எவ்ளோ ஒரு நம்பிக்கை நான் அவர் பெயரை சொல்வேனென்று...நொடி பொழுதில் எல்லாத்தையும் சிதைத்திருக்கிறேன்....கைகள் நிரம்பிய சாக்லேட்டுக்க்ளுக்காக...


அது ஒரு நெருங்கிய உறவினரின் திருமண விழா... நான் அப்பா அம்மா எல்லாம் திருமணதிற்கு முதல் நாளே சேரன்மாதேவி போய்விட்டோம். அப்பொழுதெல்லாம் ஓலை பெட்டியில் சீனி மிட்டாய் தென்னக கிராமங்களில் பிரபலம். சீனி மிட்டாய் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். எனக்கு அப்பொழுது ஆறு வயது இருக்கும்...கோபாலன் மாமாவும் சுசிலா அத்தையும் வந்துவிட்டார்கள் நாங்கள் வந்த சில நிமிடங்களிலேயே...

எனக்கு பிடித்தமான சீனி மிட்டாய் மாமா வாங்கி வந்திருந்தார்...அப்பொழுது இரவு நேரமாகி விட்டதால் அதை காலையில் சாப்டலாம் என்று அம்மா அதைக் கொண்டு போய் வீட்டினுள் வைத்து விட்டார்...தாத்தா வீட்டில்தான் வுரவினர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்....அது நல்ல பெரிய கிராமத்து வீடு.சாணம் போட்டு மொளுவிய தரையுடன் ஒரு வித நெல் மனம் வீடு முழுக்க அடித்துக் கொண்டே இருக்கும்.

அப்பா அம்மாவுடன் மற்றும் உறவுக் காரர்களுடன் நடைகூட வீட்டில் படுத்துக் கொண்டனர். மீதமிருந்தவர்களெல்லாம் உள்ளரங்கு வீட்டுக்குள் படுத்துக் கொண்டனர்....இது போக ஒரு தனி பத்தி இருந்தது....அதில் என்னைப் போல நண்டு சிண்டுகளும் கோபாலன் மாமாவும் அப்புறம் அத்தையும். எனக்கு சீனி மிட்டாய் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது....அம்மா இப்பொழுது வெளியே படுத்திருக்கிறார்....நான் மிட்டாய் எடுத்து தின்றால் கூட அம்மாவிற்கு தெரியப் போவதில்லை என்ற நினைப்பே சிறிது சந்தோசம் கொடுத்தது.......ஆனாலும் மிட்டாய் இருந்த பகுதிக்கு முன்னமாக அத்தையும் மாமாவும் படுத்துக் கொண்டார்கள்... நான் அவர்களுக்கு பக்கத்தில்.....

சரி இனிமேல் காலையில் தான் சாப்பிட முடியும் என்று முடிவுக்கு வந்தவனாக படுத்துறங்கிப் போனேன்.....ஆனால் நள்ளிரவில் ஏதோ சப்தம் கேட்டு விழித்து கொண்டேன்.....உடனே எனக்கு சீனி மிட்டாய் நியாபகத்தில் ஓடியது...யாருக்கும் தெரியாமல் சாப்பிட வேண்டும் என்றேன்னிக்க் கொண்டிருக்கும் போதே எனக்கு இருட்டு ஓரளவிற்கு பழகியிருந்தது.....எனக்கு பக்கத்தில் படுத்திருந்த மாமாவைக் காணோம்....சற்று உத்து பார்த்த பொழுது தான் தெரிந்தது மாமா அத்தையின் மேல் படுத்திருக்கிறார் என்று....எனக்கு புரிந்து விட்டது.......... அங்கே இங்கே நகண்டு அவர்களுக்கு கரடியாகி விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்... பின்பு சிறிது நேரங்கழித்து படுதுரங்கிப் போனேன்....இதில் ஆசிரியம் என்னவென்றால் அந்த காட்சியைக் கண்ட பொழுது எனக்கு, வழக்கமான குழந்தைகளுக்கு தோன்றும் அதிர்ச்சியோ இல்லை பயமோ அல்லது அருவருப்போ தோன்றவில்லை என்பதுதான்......ஆனால் இது ரொம்ப முக்கியமான குறுகுறுப்பான விஷயம் என்பது மட்டும் சிறு வதிலேயே படிந்து விட்டது மனதில்................

சில நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பி பள்ளி விடுமுறை நாளொன்றில் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடும் போது பக்கத்துக்கு வீடு ரேஜினாக்காவை( என்னை விட ஒரு வயது மூப்பு... ஏழு வயதிருக்கும்) மொட்டை மாடியில் வைத்து அவள் மறுத்து அழ அழ நான் முயற்சித்து பார்த்தது அந்த காம்பவுண்டில் இன்று வரை யாருக்கும் தெரியாது.


அவன் எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பன் கிடையாது. ஆனால் வேறு ஜாதி. அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்...ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியிலேல்லம் ஒரு ஒரு பலமான ஆசாமியை தெரிந்து வைதிருக்கிரவனால் மட்டுமே மாணவ தாதா ஆக முடியும் நெல்லையில்....எந்த பிரிவைச் சேர்ந்த தாதா கூட்டம் சண்டைக்கு வந்தாலும் இந்த மாதிரி நட்பு இருக்கிரவனால் மட்டுமே பிரச்சினையை பேசி தீர்க்க முடியும்...அந்த வகையில் இவனை எனக்கு தெரியும்......ஒரு பெண்ணால் என் நண்பனுக்கு ஒரு பிரச்சினை வந்த பொழுது இவனை பார்க்க வந்திருந்தேன்...இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு அழகான ஐந்து அல்லது ஆறு வயது ஆண் குழந்தை ஒன்று அவன் மீது தாவி ஏறிக் கொண்டு விளையாடியது....யாரிந்த குழந்தை என்றதற்கு பக்கத்து வீடு குழந்தை என்றான் அவன்....பின்பு சிறிது நேரம் கழித்து அந்தக் குழந்தைக்கு ஒரு பெரிய மில்கி பார் சாக்லேட் வாங்கி கொடுத்தான் அவன்....பின்பு அக்குழந்தையிடம் கேட்டான் நேற்றிரவு என்ன பார்த்தாய் என்று.....அதற்க்கு அக்குழந்தை சொன்னது அப்பா ஷேம் ஷேம் ஆக(ஆடையில்லாமல்) அம்மா மேல படுத்து நெறைய முத்தம் குடுத்தார் என்றது.....!

5 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

ஜவ்வு மிட்டாய் நினைவுகள் மேலோங்குகிறது.
லங்கிர்த,உங்கிர்த,திங்கிர்த முட்டாயீ
என்று பாடியபடி ஒரு ஊதுகுழலை ஊதும் தாத்தா இன்னும் உயிரோடிருக்கிறார்.

குமார் மச்சான் இன்னொரு சிறுகதை.

மாமா அத்தை சீனிமுட்டாய். அதுவும் இன்னொரு சிறுகதை.

எல்லாவற்றையும் பதிவாக்கி அசத்தியிருக்கிறாய் தம்பி.

நல்லா இருக்கு.

லெமூரியன்... சொன்னது…

நன்றி காமராஜ் அண்ணா.
பதிவில் குறிப்பிட்ட சம்பவங்கள் இதுவரை யாரிடமும் பகிர்ந்திடாத ஒன்று..!
மனதின் அடியாழத்தில் பதிந்து போன காட்சிகள் அவையனைத்தும்....

ஹேமா சொன்னது…

உங்கள் பதிவுகள் என் நேரத்தை விழுங்கிக்கொண்டாலும் நிறைந்த அனுபவங்கள்,வாழ்க்கைப் பாடங்களோடு கரைந்த்விட்டேன்.
எழுதச் சங்கடமாயிருக்கும் விஷயங்களைக்கூட பகிர்ந்திருக்கிறீர்கள்.அதற்கும் மனச்சாட்சியோடு ஒரு துணிவும் தேவை.இன்னும் வருவேன்.

லெமூரியன்... சொன்னது…

வாருங்கள் ஹேமா...! ரொம்ப மகிழ்சியா இருந்தது நீங்க கருத்துரை இட்டது....
மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்....!
என்றும் நட்பும் உங்கள் ஆதரவு வேண்டியும்...
லெமூரியன்.

பெயரில்லா சொன்னது…

another me