சனி, 5 பிப்ரவரி, 2011

பேரிச்சை(DATES) = பேர்+இச்சைDATE (2)

பின்பு நெடு நாட்கள் கழித்து அவளிடத்தில் இருந்து உன்னுடன் பேச வேண்டும்என்று ஒரே ஒரு வரியில் மின்னஞ்சல். எப்படி பேசுவது?? என்னிடத்தில் அவளை தொடர்பு கொள்ள எந்த எண்ணும் கிடையாது. பின்பு மறுபடியும் ஹைதராபாத் வர சொல்லி ஓலை வந்ததால் மறுபடியும் தெலுகு தேசத்தில் வாசம். மறுபடியும் சென்னை வருவதற்குள் அவளிடம் இருந்து இரு மின்னஞ்சல்கள் வந்திருந்தது. இரண்டுமே பயங்கரமான குழப்பம் + பயம் + அழுத்தம் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. பார்த்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது...பட்டாம்பூச்சி போல பட பட வென பேசுவாள் பறந்து கொண்டே இருப்பாள்....வீட்டில் இருப்பதை விட சாலையில் தான் களித்திருப்பாள் அவளின் நாட்களின் பொழுதுகளை... பெரும்பாலும் எங்கு செல்கிறாள் எப்பொழுது வருவாள் என எல்லா விபரங்களை என்னிடத்தில் மட்டும் பகிர்ந்து கொள்வாள்...காரணம் கேட்டதற்கு நீ எனக்கு சற்று SPECIAL தோழன் என்பாள்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் மறுபடியும் வலையில் சந்தித்தேன் அவளை....உடனே என்னுடைய அலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கினாள்....அடுத்த நொடி அவளிடத்தில் இருந்து அழைப்பு ....வெடித்து அழுதாள்..மிகவும் சந்தேகிக்கிறான் என்றாள்......மிகவும் உண்மையாக இருக்கிறேன் ஏனென்றால் நான் சந்தித்த ஆண்களில் இவனிடத்தில் மட்டுமே காதலை உண்கிறேன் என்றாள்.....அவள் கல்லூரியில் நிறைய பையன்களிடம் பேசுகிறாள் என குற்றம் சாட்டி அவளின் ஆர்குட் கணக்கை முடக்கியிருக்கிறான்....மேலும் அவளின் மின்னஞ்சல் முகவரிக்கான கடவுச் சொல்லையும் வாங்கி வைத்துக் கொண்டான்...என்றாள் கதறி அழுது கொண்டே...
மனது மிகவும் கஷ்ட பட்டது அவள் அழுத பொழுது..நல்ல பெண்ணாக நடக்க முயற்சித்தால் சந்தேகம் கொள்வது ஆண் வர்க்கத்துக்கே உண்டான குணம்...சில நாய்கள் அடக்கி வாசிக்கும்...சிலது உச்ச்சதிர்க்கு சென்று ஆடும்...நான் அடக்கி வாசிக்கும் நாய் வகை....

அவன் மீது எனக்கு அதிக கோபம் வந்து விட்டது...இத்தனைக்கும் அவனும் அவளும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்...இதற்க்கு மேல் அவனுக்கு இங்கு வேலை இல்லை என்பதயும் எனக்கான வேலை இனிதான் என்பதும் புரிந்து போனது எனக்கு. விளைவு. அந்த ஜோடியை பிரித்து விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். அதுதான் அவளுக்கு நல்லது. இவனைப் போன்ற சந்தேக குணம் கொண்ட நாய்களுக்கு துணிக் கடையில் உள்ள அலங்கார பொம்மைகள் மட்டுமே திருப்தி படுத்தும். ஆனால் இந்த முட்டாள் பெண் தினமும் கதறி அழுகிறாள் என்னிடத்தில்...அவனை விட்டு வர முடியாது என்றவளை..மெதுவாக அவளின் சுய மரியாதை என்ற ஒன்றை பற்றி எடுத்துரைத்தேன்....இப்படி ஒருவனோடு உன்னால் ஓராண்டு கூட வாழ முடியாத போது எப்படி ஆயுள் முழுவதும் இவனுடன் உன்னால் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியும் என்றேன்...சிறிது தெளிவு பெற்றவளாக அவள் மாறும் போது அந்த கயவன் நீ இல்லை என்றால் செத்து விடுவேன் என்று அழுது அவளை வசம் செய்து விடுவான். இனி அது தொடரக் கூடாது என்பதை முடிவு செய்து படிப் படியாக அவளை மன மாற்றம் செய்து எது செய்தாலும் எண்ணைக் கேட்டு செய்கிற வரைக்கும் மாற்றி இருக்கிறேன்... இனி அவன் அழைத்தால் கூட பேசக் கூடாது குறுஞ்செய்தி அனுப்பக் கூடாது என்ருரைதிருக்கிறேன். நிறைய மாற்றங்களை உணர்கிறாள். எனக்கான நேரங்கள அனைத்தும் இப்பொழுது அவளுடனே செலவழிக்கிறேன்....

மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் முப்பத்தியிரண்டு வயதில் பத்தொன்பது வயதுப் பெண்ணுடன் கடற்க்கரை மணலில் ஓடிப் பிடித்து விளையாடும் போது புரிகிறது
இன்னும் பதின்ம வயதில் உள்ள புரிதல்களோடு இருக்கிறது மனது என்று...அவள் இப்பொழுது முழுமையாக தன்னுடைய முதல் காதலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள்.
மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் என்றாள். அவனுடன் இருந்து ஒவ்வொரு நொடிப் பொழுதும் இப்பொழுது நினைத்து பார்த்தால் சிறைக்குள் இருந்த உணர்வையே தருகிறது என்றாள்... அது காதல் அல்ல அவனை பொறுத்த வரை என்றேன் நான். ஆமோதித்தாள். நிறைய குட்டி கதைகள் சொல்கிறேன், நிறைய சிரிக்கிறோம் , இரவு முழுவதும் நட்சத்திரங்கள் எண்ணுகிறோம் அவரவர் வீடு மொட்டை மாடியில்....நள்ளிரவு நேரத்தில் அவள் வீட்டுச் சுவரேறி குதித்து அவளுக்கு Good Night சொல்லி திரும்புகிறேன் ...கல்லூரிக் காலத்தில் எழுதாத ASSIGNMENTS மற்றும் PRACTICALS இப்பொழுது அவளுக்காக எழுதுகிறேன் ....அவளுக்காக காலை சீக்கிரம் விழித்து அவளை எழுப்பி கல்லூரி பேரூந்தை சரியான நேரத்தில் பிடிக்க வைக்கிறேன்...

நீ பிறந்த அடுத்த ஐந்து வருடத்திற்குள் நான் பிறந்திருக்க வேண்டும் என்றாள் :) :) ....கிழக்குக் கடற்க் கரை சாலையில் அதிவேகமாக விரைகிறோம்..அதீத சந்தோஷத்துடன்....அவளையும் மீறி சில நேரங்களில் இந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன....எங்கடா இருந்தே இவ்ளோ நாளா??

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

feels good gautam

பெயரில்லா சொன்னது…

seekiram kalyanatha pannuda

பெயரில்லா சொன்னது…

evanda athu gautham?

லெமூரியன்... சொன்னது…

கல்யாணம் செய்யணும்..!
ஆனா எப்போன்னு முடிவு பண்ணாம சுத்திற்றுக்கேன்..!
:) :)

லெமூரியன்... சொன்னது…

கௌத்தம்..!
அது நான்தான் நண்பா..!
அந்த பெயர் சொல்லா நண்பன் அப்படித்தான் அழைக்கிறார்..!

ஹேமா சொன்னது…

ம்....நல்லதுதான் நடந்திருக்கு !

லெமூரியன்... சொன்னது…

ஹ்ம்ம்...! எனக்கு அப்டிதான் தோணினது ஹேமா..
இப்போ எல்லாம் நல்லபடியா நடக்குது..!