கோடை தணிக்க குளிர் பிரதேசம் போகிறேன் என்றாள்
வெப்பம் தாளாமல் வாடும் செடியாய்
சரி போய் வா என்றேன்
அவளற்ற பொழுதுகள் பொதி சுமையாய் மாறி
என்மீதமர்ந்து எனை அழுத்தி கொல்ல பார்க்கிறது
பொழுதுகளிடம் புலம்புகிறேன் அவள் தள்ளி போனதை
பொழுது என்னிடம் கதைக்கிறது பெண்களுக்கா பஞ்சம்
உன்னிடத்தில் என்று...
கொளுத்தி போட்டுருவேன் உன்னை என பொழுதை மிரட்டிய பின்பு
பொறணி பேசுகிறது..
அவ என்ன அவ்ளோ பெரிய அழகியா என்று...
உனக்கான பெண்களின் பட்டியல் வைத்து கொண்டு
கால சக்கரம் காத்திருக்கு என்று காதினுள் கிசுகிசுக்கிறது..
கால சக்கரத்தை கெஞ்சி கேட்டு கொண்டேன்
இவள் மட்டும் போதும் வேறாரும் வேண்டாம் என்று..
கால சக்கரம் சிரித்த படியே சொன்னது உன் காதல்
உண்மையென்றால் வேரு யாரும் உன்னவளை
உன்னிடத்தில் கரைக்க இயலாது என்று
பொழுது முகம் சுளித்து கால சக்கரத்தை பழிக்கிறது
நான் பிறிவு துயர் போக்கவும் பொழுதை விரட்டவும்
கிங்பிஷர் குடுவையின் உதடோடு உதடு பதிக்கிறேன்
1 கருத்து:
gautam
கருத்துரையிடுக