செவ்வாய், 27 டிசம்பர், 2022

காதலை தொழுது கடவுளாகிறேன்

நான் உன்னுடன் இல்லா நிமிடங்களில் 
 என்ன செய்வாய் என்கிறாள்.. 

 அவளற்ற நேரங்களில் சிந்திக்கும் திறன் 
 பிடுங்கப்பட்ட மனிதனாகிறேன்.. 

 பத்து வயது மருமகனிடம் மன்னிப்பு 
 கேட்க துடிக்கிறேன் பல நேரங்களில் 
காயப்படுத்தியதற்காக.. 

 கடந்த கால தவறுகளெல்லம் கண்முன் 
 வந்து எனக்கே என் மேல் வெறுப்பை உமிழ்கிறது.. 

 தடுமாறி போகிறேன் அவளின்றி 
 அமையும் நொடிகளை நிமிடங்களை கடக்க.. 

 பூனைக்குட்டி போல துள்ளி 
ஓடி வந்து தாலி கட்ட சொன்னான், 
 கட்டினேன். 

 நண்பர் நண்பிகளோடு 
பாண்டிச்சேரி போகிறேன் என்றாள் 
சரி என்றேன் ஒற்றை பதிலில். 

 கோபமா என்றாள், நள்ளிரவு குறுஞ்செய்தியில்.. 
 இல்லை,
 நான் காதல் கடவுள் என்றேன். 
 என் காதலை வேறெந்த கூதி மகனாலையும் தர முடியாதென்றேன். 

 சிலாகித்து சிரிக்கிறாள், ஆமோதிக்கிறாள் 
 ஆமாம் நீ காதல் கடவுளென்ற.ு 
 கூட்டத்தில் கொண்டாட்டங்களில் லயிக்க 
முடியவில்லை என்கிறாள் 
 நீ தான் காரணமென சபிக்கிறாள். 

 கடவுளை சபிக்காதே கர்ம வினைகளுக்கு 
ஆட்படுவாய் என்கிறேன் 
 பெரியாரின் பேரனுக்கென்ன கடவுளின் மேல் காதலென்கிறாள். 

 வாய் இல்லைனா உன்ன நாய் 
தூக்கிட்டு போயிரும் என்கிறேன் 
 கலகலவென முத்துக்கள் சிதறியதை போல சிரிக்கிறாள், 


 சிந்திய சிரிப்பில் சிறகொடிந்த ஏஞ்சல் ஆகிறேன். 
 சிறகொடிந்த நிலையிலேயே நித்திரையை 
தழுவுகிறேன் 
 அரை தூக்கத்தில் அலைபேசி குறுஞ்செய்தி 
 ஒளியில் விழிக்கிறேன்.. 

 டேய் மாமா எப்போடா என்ன திங்க போறே 
என கதைக்கிறாள்  சொந்தத்தில் 
வரும் அந்த முறைப் பெண்.

கருத்துகள் இல்லை: