ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

வீரத் தாய்..!

மரணம் என்பது முற்றுப் புள்ளியல்ல ...!
ஒவ்வொரு மரணத்திற்கு பின்பும் ஒரு
விதை விதைக்கப் படுகிறது....
அது தளிர்த்து செழித்தோங்க
முடிந்த அளவு நமது பங்கினை ஆற்றிட
வேண்டுகிறேன்..!

மாவீரன் வேலுப் பிள்ளை பிரபாகரன் தாயார்
பார்வதி அம்மா இப்பூவுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார்..!
அவருக்கான எனது அஞ்சலிகள்...!

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

திராவிட காதலர் தினமடா...கொண்டாடலாம் வாங்கடா உயர் சாதிக் கார கோமான்களா...!

காதலர் தினத்துக்கு ஏதாவது சிறப்பு பதிவு போட வேண்டும் என்று தோன்றியது...! இது வரை நான் பதிவிட்ட அனைத்து பதிவுகளும் ஓட்டிற்காக விடப் பட்டதில்லை....இந்த வலைப் பதிவு என்பது எனது டைரியை போல....ஆதலால் நான் இதை வியாபாரம் ஆக்க விரும்பவில்லை....! மேலும் எனது நெருங்கிய உறவினர்கள் ஊடகக் துறையில் இருப்பதால் எனது படைப்புகள் ஏதாவது ஒரு ஊடகத்தில் வர வேண்டும் என்று நான் அடம் பிடிப்பதில்லை...

எனக்கு தெரியும் அது ஒரு வியாபாரம்...மேலும் அது ஒரு போதை....நான் இந்த அன்னையர் தினம் தந்தையர் தினம் மற்றும் இது போல உள்ள பல தினங்களை வெறுக்கிறேன்....அந்த ஒரு நாளில் வேறு என்ன அன்பை இவர்கள் வெளிப் படுத்தி விட முடியும்..????? இன்றைய வாழ்வில் காதல் என்பதே பல வியாபார நோக்கோடுதான் வெளிப்படுகிறது...நீ என்ன ஜாதி, மதம் மற்றும் மொழி, இதெல்லாம் ஒத்து போனால் மட்டுமே அது உண்மையான காதல்....இல்லையென்றால் அது கலாச்சார் துரோகம் என்று கொதிக்க இங்கு ஏராளமான சாதி வெறியர்கள் கலாசார போர்வை போர்த்திக் கொண்டு பதிவுலகில் காத்திருக்கிறார்கள்....

அவர்கள் பார்வையில் அவர்கள் எப்படி என்று தெரியவில்லை...ஆனால் இப்போதெல்லாம் தாழ்த்த பட்டவர்களெல்லாம் ஏதோ சொர்கத்தில் இருப்பது போல அரசாங்கம் அவர்களுக்கு சலுகையை வாரி வாரி வழங்குவது போல சில முன்னேறிய சாதிக் காரர்கள் உதிர்க்கும் வாசங்ககள் மனதை புண் பட செய்கிறது.....

மெத்த படித்த ஒரு தாழ்ந்த சாதிக் கார துணை வேந்தர் ஆனாவுக்கும் ஆவன்னாவுக்கும் அச்சாரம் தெரியாத ஒரு திருட்டு சாதியை சேர்ந்த ஒரு மணல் திருடனிடம் அடி வாங்குகிறான்...! மெத்த படித்த ஒரு மாவட்ட ஆட்சியர் ஒரு மேடை நாடகக் காரியிடம் அடி பணிந்து போகிறான்....இதெல்லாம் அந்த உயர் சாதி கார சான்றோர்க்கு சாதரணமாக தெரியலாம், அல்லது மெத்த சலுகைகளை அனுபவித்து கொண்டு கள்ளம் காட்டுகிறார்கள் என மற்றைய மக்களை நம்ப வைக்க முயற்சிக்கலாம்.....!

இதெல்லாம் உணர்த்துவது யாதெனில் என்னதான் நீ முன்னேற நினைத்தாலும் நாங்கள் வைத்த சட்டத்தை மதித்து அதற்க்கு கீழ்படிந்து நடந்து உங்கள் சாதியின் மரியாதையை உணர்த்த வேண்டும் என்பதே....அதற்க்கு மாறாக நடக்க முயற்சித்தால் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற மிரட்டல் உடாக விளிக்கும் எச்சரிக்கை.....!

இதற்க்கூடக உங்கள் யோகியதை என்னவென்று சொல்ல முற்ப்பட்டால் அது திராவிட நாகரிகம் பாஸ் என்று பகடி செய்கிறான் ஒரு ஆரிய இனத்து கயவன்.....உண்மைதான்டா....உங்களைப் போல வெளியில் உத்தமர் வேடம் போட்டுக் கொண்டு அடுத்த வீட்டு கதவு எப்பொழுது திறக்கும் என்று காத்திருந்தவர்கள் அல்ல திராவிடர்கள்....!

காதலர் தினம் தேவையா என பதிவு போட்டு விட்டு அன்று மாலை காதலியுடன் கடற்க்கரை சல்லாபம் புரியும் கள்ளம் கற்றவறல்ல திராவிடர்....தெளிவான நோக்குடன் எதையும் மறைத்து வாழத தெரியாமல் வாழ்ந்து தொலைத்த ஒரு பாவப் பட்ட இனத்தின் சார்பாக இந்த பதிவிடுகிறேன்....

தாழ்த்த பட்டவர் வீட்டில் நான் உணவு உண்டிருக்கிறேன் என்று பெருமை பேசும் உங்களைப் போல போலி கலாச்சார வேலிகளை உடைக்கும் கோமாளிகள் உள்ள வரை எவனும் எதற்கும் கருத்து சொல்ல தகுதியற்றவன் என்பதை சொல்லி இந்த பதிவை முதல் முறையாக ஓட்டிற்கு விடுகிறேன்......!

சனி, 5 பிப்ரவரி, 2011

பேரிச்சை(DATES) = பேர்+இச்சைDATE (2)

பின்பு நெடு நாட்கள் கழித்து அவளிடத்தில் இருந்து உன்னுடன் பேச வேண்டும்என்று ஒரே ஒரு வரியில் மின்னஞ்சல். எப்படி பேசுவது?? என்னிடத்தில் அவளை தொடர்பு கொள்ள எந்த எண்ணும் கிடையாது. பின்பு மறுபடியும் ஹைதராபாத் வர சொல்லி ஓலை வந்ததால் மறுபடியும் தெலுகு தேசத்தில் வாசம். மறுபடியும் சென்னை வருவதற்குள் அவளிடம் இருந்து இரு மின்னஞ்சல்கள் வந்திருந்தது. இரண்டுமே பயங்கரமான குழப்பம் + பயம் + அழுத்தம் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. பார்த்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது...பட்டாம்பூச்சி போல பட பட வென பேசுவாள் பறந்து கொண்டே இருப்பாள்....வீட்டில் இருப்பதை விட சாலையில் தான் களித்திருப்பாள் அவளின் நாட்களின் பொழுதுகளை... பெரும்பாலும் எங்கு செல்கிறாள் எப்பொழுது வருவாள் என எல்லா விபரங்களை என்னிடத்தில் மட்டும் பகிர்ந்து கொள்வாள்...காரணம் கேட்டதற்கு நீ எனக்கு சற்று SPECIAL தோழன் என்பாள்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் மறுபடியும் வலையில் சந்தித்தேன் அவளை....உடனே என்னுடைய அலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கினாள்....அடுத்த நொடி அவளிடத்தில் இருந்து அழைப்பு ....வெடித்து அழுதாள்..மிகவும் சந்தேகிக்கிறான் என்றாள்......மிகவும் உண்மையாக இருக்கிறேன் ஏனென்றால் நான் சந்தித்த ஆண்களில் இவனிடத்தில் மட்டுமே காதலை உண்கிறேன் என்றாள்.....அவள் கல்லூரியில் நிறைய பையன்களிடம் பேசுகிறாள் என குற்றம் சாட்டி அவளின் ஆர்குட் கணக்கை முடக்கியிருக்கிறான்....மேலும் அவளின் மின்னஞ்சல் முகவரிக்கான கடவுச் சொல்லையும் வாங்கி வைத்துக் கொண்டான்...என்றாள் கதறி அழுது கொண்டே...
மனது மிகவும் கஷ்ட பட்டது அவள் அழுத பொழுது..நல்ல பெண்ணாக நடக்க முயற்சித்தால் சந்தேகம் கொள்வது ஆண் வர்க்கத்துக்கே உண்டான குணம்...சில நாய்கள் அடக்கி வாசிக்கும்...சிலது உச்ச்சதிர்க்கு சென்று ஆடும்...நான் அடக்கி வாசிக்கும் நாய் வகை....

அவன் மீது எனக்கு அதிக கோபம் வந்து விட்டது...இத்தனைக்கும் அவனும் அவளும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்...இதற்க்கு மேல் அவனுக்கு இங்கு வேலை இல்லை என்பதயும் எனக்கான வேலை இனிதான் என்பதும் புரிந்து போனது எனக்கு. விளைவு. அந்த ஜோடியை பிரித்து விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். அதுதான் அவளுக்கு நல்லது. இவனைப் போன்ற சந்தேக குணம் கொண்ட நாய்களுக்கு துணிக் கடையில் உள்ள அலங்கார பொம்மைகள் மட்டுமே திருப்தி படுத்தும். ஆனால் இந்த முட்டாள் பெண் தினமும் கதறி அழுகிறாள் என்னிடத்தில்...அவனை விட்டு வர முடியாது என்றவளை..மெதுவாக அவளின் சுய மரியாதை என்ற ஒன்றை பற்றி எடுத்துரைத்தேன்....இப்படி ஒருவனோடு உன்னால் ஓராண்டு கூட வாழ முடியாத போது எப்படி ஆயுள் முழுவதும் இவனுடன் உன்னால் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியும் என்றேன்...சிறிது தெளிவு பெற்றவளாக அவள் மாறும் போது அந்த கயவன் நீ இல்லை என்றால் செத்து விடுவேன் என்று அழுது அவளை வசம் செய்து விடுவான். இனி அது தொடரக் கூடாது என்பதை முடிவு செய்து படிப் படியாக அவளை மன மாற்றம் செய்து எது செய்தாலும் எண்ணைக் கேட்டு செய்கிற வரைக்கும் மாற்றி இருக்கிறேன்... இனி அவன் அழைத்தால் கூட பேசக் கூடாது குறுஞ்செய்தி அனுப்பக் கூடாது என்ருரைதிருக்கிறேன். நிறைய மாற்றங்களை உணர்கிறாள். எனக்கான நேரங்கள அனைத்தும் இப்பொழுது அவளுடனே செலவழிக்கிறேன்....

மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் முப்பத்தியிரண்டு வயதில் பத்தொன்பது வயதுப் பெண்ணுடன் கடற்க்கரை மணலில் ஓடிப் பிடித்து விளையாடும் போது புரிகிறது
இன்னும் பதின்ம வயதில் உள்ள புரிதல்களோடு இருக்கிறது மனது என்று...அவள் இப்பொழுது முழுமையாக தன்னுடைய முதல் காதலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள்.
மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் என்றாள். அவனுடன் இருந்து ஒவ்வொரு நொடிப் பொழுதும் இப்பொழுது நினைத்து பார்த்தால் சிறைக்குள் இருந்த உணர்வையே தருகிறது என்றாள்... அது காதல் அல்ல அவனை பொறுத்த வரை என்றேன் நான். ஆமோதித்தாள். நிறைய குட்டி கதைகள் சொல்கிறேன், நிறைய சிரிக்கிறோம் , இரவு முழுவதும் நட்சத்திரங்கள் எண்ணுகிறோம் அவரவர் வீடு மொட்டை மாடியில்....நள்ளிரவு நேரத்தில் அவள் வீட்டுச் சுவரேறி குதித்து அவளுக்கு Good Night சொல்லி திரும்புகிறேன் ...கல்லூரிக் காலத்தில் எழுதாத ASSIGNMENTS மற்றும் PRACTICALS இப்பொழுது அவளுக்காக எழுதுகிறேன் ....அவளுக்காக காலை சீக்கிரம் விழித்து அவளை எழுப்பி கல்லூரி பேரூந்தை சரியான நேரத்தில் பிடிக்க வைக்கிறேன்...

நீ பிறந்த அடுத்த ஐந்து வருடத்திற்குள் நான் பிறந்திருக்க வேண்டும் என்றாள் :) :) ....கிழக்குக் கடற்க் கரை சாலையில் அதிவேகமாக விரைகிறோம்..அதீத சந்தோஷத்துடன்....அவளையும் மீறி சில நேரங்களில் இந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன....எங்கடா இருந்தே இவ்ளோ நாளா??