புதன், 3 செப்டம்பர், 2014

காத்தாடி...! :-)





காற்றாடி....காற்று வீசும் வரை ஆடிவிட்டு பின்பு அடங்கிபோகும்..!
இந்த காற்றாடியை கூட வாழ்க்கை பாடமாக எடுத்துக்கொள்ளலாம்..!
நிற்க...

இங்கு நான் இந்த காற்றாடியை ஒப்பிடுவது வேறொரு விஷயத்திற்காக...
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து கன நேரத்தில் பறந்து போகும் சின்ன சின்ன காதல் கூட காற்றாடி மாதிரித்தான்...

ஆங்கிலத்தில் கிரஸ் என்று சொல்கிறார்கள்..! தமிழில் அது போல ஒரு வார்த்தையை தேடுகிறேன்..என் அறிவுக்கு எட்டிய வரை அப்படி ஒரு வார்த்தை சிக்கவில்லை...

எனக்கு இந்த கிரஸ்(CRUSH) ரொம்ப பிடிக்கும்..
சொல்லவும் முடியாமல் மெள்ளவும் முடியாமல் தாண்டி போக வேண்டும் இந்த உணர்வில்..ஆனால் நிஜத்தில் நிலைமை காலை பிடித்து காதல் பிச்சை கேட்க்க சொல்லும்...இடம் பொருள் ஏவல் இப்படி எதுவுமே நமக்கு சாதமாகத ஒரு நிலையில்தான் இந்த உணர்வு உள்ளுக்குள் குதித்து ஆட்டம் போடும்..

உங்களுக்கு தெரியுமா? பெண்களுக்கு இந்த வகை கிரஸ் ரொம்ப பிடிக்கும்..தீண்டி தீ மூட்டி விட்டு சாதரணமாக கடந்து போக முடியும் அவர்களால்.. இந்த சிறு விளையாட்டு அவர்களுக்கு நிறைய பிடிக்கும்...மிக ரசித்து விளையாடுவார்கள் பெண்கள்...
ஏனென்றால் இந்த விளையாட்டில் எந்த சிக்கலும் இல்லை..காயங்கள் சேதங்கள் வராது என்பது கூடுதலான காரணம்...

எனக்கு இந்த கிரஸ் என் சகோதரியின் தோழிகளிடத்தில்..நண்பனின் காதலியிடம்..சில நண்பர்களின் சகோதரிகளின் மீதும் சில நண்பர்களின் மனைவிகளின் மீதும் வந்து சென்றிருக்கிறது...

இது ஒரு மாதிரியான சற்று குறும்பான உணர்வு...குறும்புத்தனமான நட்புணர்வு என்று கூட சொல்லலாம்...இந்த உணர்வில் வரும் பெண்களெல்லாம் எனக்கு மிக மிக பிடித்தவர்கள்..ஆனால் கன நேரம் கூட தவறாக என்ன முடியாதளவிற்கு நல்ல தோழிகளாக இருப்பார்கள்...அதுவே அவர்களின் மீது தீரா அன்பினை உரமிட்டு வளர செய்யும்

ஆனால் எப்பொழுதும் ஒரு உள்ளுணர்வு உள்ளத்தில் அழுத்திக் கொண்டே இருக்கும்...ஒரு கோடு கீறி அதை லக்ஸ்மன கோடாக எண்ணிக் கொள்வேன்..அதை எப்பொழுதும் தாண்டியதில்லை...
நண்பர்களைவரும் அவர்களில் ஒருவனாக எண்ணுவதாலேயே என்னை அவர்களில் அவர்கள் குடும்பங்களில் ஒருவனாக நடத்துகிறார்கள்...அந்த எண்ணமே என்னை சீராக கோடு தாண்டாமல் நடத்தி செல்லும்...

பொதுவாக நெருங்கிய வட்டங்களில் அறிமுகமாகும்(நண்பர்கள்) பெண்கள் மத்தியில்தான் இது வரும் என்றில்லை...மிக நெருக்கமான நல்ல தோழிகள் மீதும் எனக்கு இந்த கிரஸ் உண்டு...

அவள் ஒரு ஐ.எ.எஸ் அதிகாரியின் மகள்...செம்ம குறும்புக்காரி..ஒரு பொது நண்பர் வட்டத்தில் அறிமுகம்..2009இல் வேலை இழந்து முழு நேர வலை உலாவியாக நேரம் போக்கிக் கொண்டிருந்த நேரம்...ஆர்குட் மூலம் பள்ளிப் பிள்ளைகளையும் கல்லூரி மான்களையும் வலை போட்டு பிடித்துக் கொண்டிருந்த நேரம்..

சரியாக மாலை 6 மணியானால் தன்னுடைய காரில் என் வீடருகே நிற்ப்பாள்...என்னுடைய பைக்கை உதைக்கும் போது அவள் காரை பூட்டி விட்டு என் பின்னே தொற்றிக் கொள்வாள்...அவளுக்கு பைக் சவாரி மீது கொள்ளை பிரியம்..
தோள்களில் நாடியை தாங்கிய படி கேட்ப்பாள்..டேய் யாரவது உன்னை இப்போ பார்த்த என்ன ஆகும் என்பாள் பயங்கலந்த குரலில்...

நான்- என்னாகும்பா?

அவள்- அடப் பாவி...உங்கப்பாட்ட போயி உங்க பையன் யாரோ ஒரு பொண்ணோட ஊர் சுத்துறானு சொல்ல மாட்டாங்களா?

நான்- அப்போ உங்கப்பாட்ட யாரவது சொன்னா?

அவள்- ஒன்னும் நீ உள்ள போகணும்(சிறை)
இல்ல எனக்கு மாப்ளையா வரணும்..

நான் சிரித்து கொண்டே அப்போ உனக்கு தெரிஞ்சவங்க யாரவது பாத்த நல்ல இருக்குமே என்பேன்..

ஏய் என்று முதுகில் குத்திவிட்டு ரொம்ப பேசுரேடா என்பாள்...

ஒரு நாள் சடாரென டேய் எண்ணிய பாக்றதுக்கு வீட்டுக்கு ஒருத்தன் வந்திருக்காண்டா..... INTRESTING uh பேசறாண்டா என்றாள்....
அய்யோ அப்போ என் கதை முடிஞ்சி போச்சா? ந உன்ன பொண்ணு கேக்கலாம்னு நேனைசெனே என்றேன்....விழுந்து விழுந்து சிரித்த படி போடா லூசு என்றாள்...இப்போது ஐரோப்பாவில் கணவனுடன் வசிக்கிறாள்...வலயரட்டையில் கேட்க்கிறாள் என் மேல உனக்கு லவ்வே வரலயாட என்று..! :-( :-( :-(


சில தோழிகளுடன் அவர்களுக்கும் என் மேல் ஈர்ப்பு இருப்பதை அறிந்தே இருந்தேன்... ஆனால் அது கண்டிப்பா ஒரு ஈர்ப்பு மட்டுமே...

ரசித்து கடந்து வந்த, நான் கிரஸ் கொண்ட பல பெண்கள் இன்றும் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள்..இன்னும் அதே குரும்போடும் அதே குருகுருப்போடும்...! :-)



இருவாரங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வழியே உதித்த கிரஸ் இது...

அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது அங்குள்ள கம்பெனிக்கு சொந்தமான மடிக்கணினியை அங்கு ஒப்படைத்து விட்டு வரவேண்டும். அதன் படியே அங்கு ஒப்படைத்து விட்டு வந்தேன்.

நான் வேலை பார்ப்பது ஒரு பன்னாட்டு கம்பனி. பன்னாட்டு கம்பெனி என்றால் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருக்கும் பிசாத்து கம்பெனி இல்லை...உலகில் 42 நாடுகளில் தொழிற்சாலை அமைத்து பல ஆயிரம் கோடிகளை கொட்டும் பார்ச்சுன் 500இல் 30தாவது இடம் பிடிக்கும் கம்பெனி.

உலகின் எந்த நாட்டிற்க்கு பயணமானாலும் அங்கு போன பிறகு பிரத்யோகமாக நமக்கு ஒரு மடிக்கணினி தருவார்கள் நான் வேலை செய்யும் இந்த பாகசுர கம்பனியில்...

இந்தியா வந்த பிறகு இங்கு மடிக்கணினி பெற்றுக் கொண்டேன்.
அதில் ஏற்ற வேண்டிய அப்ப்ளிகேசன்ஸ்காக கம்பெனிகென்று இருக்கும் சேவை பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும். என்னுடைய வேலை நேரம் அமெரிக்க வேலை நேரத்தோடு பொருந்தி போவது. அதாவது இந்தியாவில் முழு இரவு பணி. பொதுவாக ஆசியாவிற்கான சேவை பிரிவு இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு முடிவடையும். அதன் பின்பு அத்தனை உதவி கேட்டு வரும் அழைப்புகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு செல்லும். அந்த நினைப்பில் தொலை பேசியில் எண்களை அழுத்தினேன்...


எடுத்ததோ ஒரு காந்த குரலுக்கு சொந்தாகாரி. அழைப்புகளை எடுப்பவர்கள் அவர்களின் பெயரை சொன்ன பிறகே நம்மிடம் என்ன மாதிரியான உதவி வேண்டும் என்பார்கள். இவள் பெயரை சொன்ன பொழுது மனதிற்குள் மணி அடித்தது..! :-) அச்சு அசலாக தமிழ் பெயர். ஆனால் அமெரிக்காவில் சேவை பிரிவில் நம்மாட்கள் வேலை செய்ய மாட்டார்கள். எனக்கு தெரிந்து ஆசியாவிற்கான சேவை பிரிவில் பெரிய பிரிவு பெங்களுருவிலும் பெய்ஜிஙிலும் மட்டுமே உண்டு. ஆனால் அவை அனைத்து சர்வதேச நேரத்தில் செயல் படமாட்டா.

என்னுடைய மடிக்கணினிக்கு தேவையான அப்ப்ளிசெசன்ஸ் பற்றிய பட்டியல் கொடுத்து விட்டு கிடைத்த நொடிகளில்(பொதுவாக இந்த சேவை பிரிவு பெண்கள் தேவை இல்லாமல் பேச்சு வளர்க்க மாட்டார்கள்) நீங்கள் இந்தியாவில் இருந்து அழைப்பை எடுக்கிறீர்களா என்றேன்? ஆமாம் என்ற ஒற்றை சொல்லோடு உங்கள் கோரிக்கை படி அத்தனை அப்ப்ளிகாசன்ஸ் ஏற்றப்பட்டுவிடும் என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள் பாவிமகள்.

எங்கள் கம்பெனிக்கென்று ஒரு வலையரட்டை அப்ப்ளிகேசன் உண்டு. அதன் மூலம் தேவையான பொழுது வேலை சமந்தமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சக ஊழியர்களிடம் பேசிக் கொள்வோம். என்னுடைய வலையரட்டை சர்ச் பாரில் அவள் பெயரை இட்ட உடன் பளிச்சென்று பச்சை நிறத்தில் ஒளிந்ர்ந்தால். உடனே ஒரு ஹலோ சொன்னேன். அடுத்த நொடியே ஒரு ஹாய் சொல்லி நீ தமிழனா என்றாள்.மனதிற்குள் மத்தாப்பு பூத்தது..! :-)

பின்பு ஒரு வாரகாலம் சில பல மரியாதைகளுடன் சென்று கொண்டிருந்த அரட்டை பின்பு லேசாக சற்று குறும்புத்தனமாக செல்ல ஆரம்பித்தது...
அப்படி சென்றுகொண்டிருந்த ஒரு குறும்பு அறைட்டைதான் கீழே நீங்கள் பார்க்க போவது..







குறிப்பு: ஆரஞ்சு வண்ணத்தில் கோடு வரைந்திருப்பது அவளை சுட்டும்.
சிவப்பு மற்றும் வண்ணமற்ற பகுதி என் பெயரை சுட்டும்.


இந்த மாதிரி சமயதிர்க்கேற்றவாறு ஒரு நகைசுவையோ அல்லது குட்டி கதைகளோ சொன்னால் பெண்களின் மனதை சிறிது சிறிதாக வெல்லலாம்..! :-)

இந்த குட்டி கதைக்கு பிறகு...அதை படித்து அவள் ஆச்சிரியப்பட்டு என்னிடம் பேச ஆரம்பித்த பிறகு புகைப்படங்கள் பரிமாறிக்கொண்டோம்...

எனக்கு சாபமா அல்லது கேடா என்று தெரியவில்லை...எனக்கு அமையும் பெண்கலேல்லாமே 25க்கு குறைந்தே வந்து தொலைக்கிறார்கள்....இவளுக்கு 23என்றாள்...! கேம்பஸில் வந்தேன் என்றாள். வாங்க போங்கலாம் வேண்டாம் என்றவள் இப்போது வாட போடா என்கிறாள்..! அலைபேசி என்னை கேட்டிருக்கிறேன் நாம் இன்னும் சிறிது பழகிய பிறகு பார்க்கலாம் என்றாள். அலைபேசி என்னை வாங்காமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன். என் இசை நாயகிக்கு சங்கதி தெரிந்தால் கொன்று போட்டுவிடுவாள். :-(


பெரிய பெரிய சந்தோஷங்களை தேடி என் சந்தோஷத்தை தொலைக்காமல் இது போன்ற குட்டி குட்டி கதைகளிலும் நகைசுவையிலும் அமையும் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களே என்னை மேலும் மேலும் இன்புற்றவனாக ஆக்குகின்றது..!

:-) :-) :-)
சந்தோஷமாக இருக்கிறேன் எப்பொழுதும் போல...
காற்று அடங்கி சரியும் காற்றாடி போல...
காற்று இறங்கி என் உடல் மண் மீது சாயும்வரை..!

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

gr8 gautam

லெமூரியன்... சொன்னது…

Thanks My Friend..! :-)

பெயரில்லா சொன்னது…

but you could have avoided that private chart image.but i like your way of expressing things.

லெமூரியன்... சொன்னது…

Well..! Thanks for the comment. Actually i thought the same way as you said..but i have hidden all the required areas....(but still thinking to have it or to remove it from the post :-) )

Gopikaa சொன்னது…

நீங்கள் இயல்பாக இருந்திருந்தால் கூட அந்த காத்தாடி பொண்ணு உங்களுக்கு வயப்பட்டிருக்கும். ஏன் இவ்வளவு பில்ட்-அப் (7 கடல், கடவுள், சாமியார், ETC ?)
Well,anyway... a very daring post Mr.Lemurya!
Good luck ;)

லெமூரியன்... சொன்னது…

கோபிகா...
முதலில் நன்றி என் வலை பக்கத்தை மேய்ந்ததர்க்கு.

//ஏன் இவ்வளவு பில்ட்-அப் (7 கடல், கடவுள், சாமியார், ETC ?)//
கடல் கடவுள் சாமியார்... :-) :-) பெண்களுக்கு அவர்களை உயர்த்தி பேசும் ஆண்களை நிறைய பிடிக்கும்...
மேலும் First Impression என்ற காரணத்தினால்தான் அவ்ளோ Build up..! :-) :-)