வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஒரு கொலை முயற்சியும்..அதன் நீட்சியும்...(பாகம் இரண்டு )

அன்று அதிகாலை ஆகும்பொழுது எல்லாம் ஒரு நேர்கோட்டில் சந்தித்த மாதிரி ஒரு தெளிவு பெற்ற நிலை போன்ற உணர்வது...காரணங்கள் என்று அலசி பார்க்கும்போதும் என் பக்கத்தில் இருந்து மட்டுமே யோசிக்க முடிந்தது....ஏனென்றால் பாதிக்கப்பட்டது நான் மட்டுமே, என்ற எண்ணம் மனதை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது..

என் மேல் இருந்த கோபம் மற்றும் சமுதாயத்தின் பால் இருந்த கோபம்...மற்றும் என் இயலாமை போன்ற காரணங்கள் அனைத்தும் கடைசியில் கை காட்டியது அவளின் தந்தையை....மூன்று தலைமுறையாய் அந்த குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காமல் போய் நான்காவது தலைமுறையில் பிறந்து தேவதையாய் மாறி மொத்த குடும்பத்தின் ஆசிர்வதிப்பிர்க்கு உள்ளான என்னவளின், பாசமிகு தந்தை...

ஏனோ அவரின் நடவடிக்கைகள் ஆரம்பம் தொட்டே தன் மகள் என் கைக்கு வந்து விட கூடாது என்ற ஒரு என்ன ஓட்டதிநூடையே செயல்படுத்தியது போன்றே அமைந்தன...அனைத்தும் சேர்ந்து எல்லாவற்றிற்கும் மேலாக என்னை ஒரு கேவலமான பிறவியாக அந்த தேவதையிடம் உணர்தியத்தின் மிக முக்கிய பங்கு அவரையே சார்ந்தது என்று தெரிந்ததால்....முடிவு செய்தேன் அவரை கொலை செய்து விடுவதென்று....

அவள் வாழ்நாள் முழுவதும் கதறி அழ வேண்டும் என்ற ஒரு கூருர எண்ணம் மனதில் தோன்றிய பொழுதே அவ்வளவு ஒரு பரவசம் கொண்டது மனது....அவள் தந்தை இறந்த உடன் அவர் உடலை பார்த்து அவள் கதறி அழுவதை ஒளிந்திருந்து ரசிக்கவேண்டும் என்றும் தீர்மானித்து கொண்டேன்...ரத்த ஓட்டத்தில் அவ்வளவு ஒரு வேகம் உடல் முழுவதும் ஒரே பரவசம்...ஏதோ ஒரு பெரிய சாதனை செய்யபோவதாக ஒரு பிரம்மிப்பு மனதினுள்.....

ரயில்வே துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்னுடைய வில்லன் மாமனார்...கொச்சியில் இருந்து தினமும் இருபத்தைந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்தால்தான் அவர் பணிபுரியும் ரயில்நிலையம் வரும்....கொச்சியில் வேலை செய்த உடன்பயின்ற நண்பனின் உதவியோடு அவனின் வண்டியை வாங்கிக் கொண்டு முதல் நாள் பின் தொடர்ந்து சென்றதன் விளைவு தூர வித்தியாசங்கள்....மற்றும் அவர் காலை அலுவலகம் வந்து மற்றும் மாலை வீடு திரும்பும் நேரம் சரியாக கணிக்க முடிந்தது....

இரண்டு நாட்கள் பின்தொடர்ந்ததன் விளைவு, சம்பவம் அரங்கேற்ற வேண்டிய இடமும் தெரிவு செய்யப் பட்டது...அது சற்று மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி...மேலும் நெறைய மரங்கள் சூழ்ந்த பகுதி...இதுவே ஏற்ற இடம் என்று முடிவு செய்துகொண்டேன் மனதினுள்...அன்று இரவு நிறைய குடித்தேன்....மனது ஏனோ பாரமாக இருந்தது....அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது....நியாய தர்மங்கள் என் முன் தராசு தட்டில் ஆடிக் கொண்டிருந்தன...ஆனாலும் இடையிடையில் அவளின் முகம் தெரியும்பொழுது எல்லாம் அனைத்தும் மறந்து போய்விடும்....தீர்க்கப் பட வேண்டிய அசுரனாகவே தெரிந்தார் அவளின் தந்தை...

அன்று இரவுதான் நண்பனிடம் நான் போட்டிருக்கும் திட்டத்தினை விளக்கி கூறினேன் .....அவர் தன்னுடைய ஹோண்டா ஆக்டிவாவில் செல்லும்பொழுது நண்பனின் மாருதி ஓம்னி வண்டியை கொண்டு பின்னால் இடித்து சாகடிப்பதே என்னுடுடைய திட்டம்..நண்பன் அரண்டு விட்டான்...சமாதான படித்தினேன்...எல்லாம் நல்ல படியாக முடியும் நான் பொறுப்பு என்று உறுதி கூறினேன்...அந்த நள்ளிரவுக் குளிரிலும் அவனுக்கு உடல் நடுங்கி வேர்த்துக் கொண்டிருந்தது.....

அடுத்த நாள் நண்பன் வேலைக்கு போகவில்லை....நானும் வெளியில் எங்கும் போகவில்லை....கொஞ்சம் மது அருந்தினால் தேவலை என்று தோன்றிய பொழுது நானும் நண்பனும் கொஞ்சம் மது அருந்தினோம்....இரவாக ஆரம்பித்த பொழுது கிளப்பினோம் ஒம்னியை....வழிநெடுக ஏனோ அம்மா அப்பா நியாபகம் வந்து கொண்டே இருந்தது...நண்பன் வேறு கண்டிப்பாக இப்படி செய்ய வேண்டுமா என்றான் இரு முறை.....

எட்டரை மணிபோல என்னுடைய வில்லன் மாமனார் பணிசெயும் இடத்திற்கு சென்றடைந்தோம்...சென்ற பத்தாவது நிமிடத்திலேயே மாமனார் வெளியே வந்து வண்டியை கிளப்பிவிட்டார்....குறிப்பிட்ட இடைவெளியில் அவரை பின்தொட்ரந்தோம்...சில இடங்களில் எங்களுடைய வண்டியின் முகப்பு விளக்குகளை அனைத்து விட்டோம்....சம்பவம் அரங்கேற்ற குறிக்கப் பட்ட இடமும் நெருங்கிக் கொண்டே வருகிறது....அங்கு ஒரு மனித தடயமும் இல்லை...ஒரு வாகனமும் கடக்கவில்லை...எல்லாம் திட்டமிட்ட படி சரியாக சென்றுகொண்டிருக்கிறது...சில மீட்டர்கள் தூரத்தான் அவருக்கும் எங்களுக்கும்....வண்டியின் வேகத்தை அதிகரிக்க சொல்கிறேன் நண்பனிடம்....அவனும் வேகத்தை கூடி விட்டான்....ரத்த நாளங்கள் வெடித்துவிடும் அளவிற்கு ரத்த ஓட்டம் தாறுமாறாக இதயத்தில்...நெருங்கிவிட்டோம் அவரை...கண்களை மூடிக் கொண்டேன் ஒரு நிமிடம்...ஒரே ஒரு நிமிடம் தான்....அப்பாவும் தங்கையும் வந்து போனார்கள் நினைவில்....கண் விழித்த பொழுது முன்னே செல்வது அப்பா போலவே தோன்றியது.....நண்பனின் காலோடு சேர்த்து பிரேக்கை அழுத்தி மிதித்தேன்....தேய்த்து கொண்டே வண்டி திரும்பி சற்று நிலை தடுமாறி நின்றுவிட்டது....அவர் சென்று கொண்டே இருக்கிறார்....

நண்பன் ஏதும் பேசவில்லை என்னிடம்....நானும் கூட......அன்றிரவு குடிக்கவில்லை....ஏனோ நன்றாக உறங்கினோம்...அடுத்த நாள் காலை கேரளா மண்ணிற்கு விடை கொடுத்து கிளம்பிவிட்டேன் தாய்நாட்டை நோக்கி....
இன்றும் என் வில்லன் மாமனார் சந்தோஷமாக பேரன் மார்களை கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார் தன் தேவதை மற்றும் தேவதையின் அமெரிக்க கணவனோடும்....

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ஒரு கொலை முயற்சியும் அதன் நீட்சியும்......

உடல்கள் மற்றும் உணர்வுகள் பரிமாறிக் கொண்டதால்...காதலின் நீட்சிமை குறித்து கவலை கொண்டதில்லை அப்பொழுது...!
அந்த இருப்பதி நான்கு வயதில் எதையும் சாதித்து விடும் மனநிலையில் மட்டும் நான்....சமூக கட்டுபாடுகள் அனைத்தும் ஒரு கனவாக மட்டுமே என் முன்னே..
பொருட் தேவைகளின் எதார்த்தம் அறியாமல்..பணத் தேவைகளின் பிரதானம் புரியாமல்..
ஆனால் தமிழ் திரை கதை நாயகன் போலவே...காதலுக்கு மரியாதை செய்வதற்காக எதையும் செய்து பார்க்க துடிக்கும் ஒரே மன நிலை மட்டும் அப்பொழுது மனதில்...

இருபத்தி நான்கு வயதில் தமிழகத்தில் ஒரு சாதாரண பொறியியர்க் கல்லூரியில் பயின்ற மாணவனால் எட்டக் கூடிய சம்பளமே என்னால் எட்ட முடிந்தது...
ஆனால் பணக்கார காதலி மற்றும் பணத்தால் மிதக்க கூடிய சம்பளமுடன் ஒரு பதவியில் இருப்பவள்...எனக்கு வாய்த்ததனால் முளைத்தது பிரச்சினை...
தமிழ் திரைப் படம் போலவே...மொழி ஜாதி மற்றும் அந்தஸ்த்து மற்றும் பிராந்திய வேறுபாடு காரணங்களாக...........

அவளுடைய தந்தை மிகவும் விவரமானவர் போல....பையன் ஒரு ஐந்து லகரம் வருட வருமானமாக வாங்கட்டும்...பிறகு பார்க்கலாம் என்று தூண்டிலையும் கொடுத்து மீன்கள் இல்லா நீர்ப் பரப்பையும் கை காட்டி விட்டார்...அவளின் வருட வருமானம் ஐந்து லகரத்தை தொட்டு விட்டது அப்பொழுதே....
காதல் என்பது எந்த வித கட்டுபாடுகளும், வாழ்வியலின் தேவைகளும் பிடிபடாமலும் புரியாமலும் போய்க் கொண்டிருந்த வேளையில்...வீசப் பட்ட அணு குண்டு இது....

கணினி பொறியியல் படிக்காமல் இயந்திரவியல் பொறியியல் படித்து வயிறெரிந்து கொண்டிருந்த வேளையது.....
திடீரென ஐந்து லகர சம்பளத்திற்கு எங்கு போவது...பல பெண்களை கடந்து வந்தாலும் முதன்முறையாக வாழ்க்கை முழுவதும் உடன்வர ஓருயிர் இவள்தான் என்று முடிவு செய்திருந்ததால்...எக்காரணத்தையும் கொண்டு இழக்க விரும்பவில்லை அவளுடன் கொண்ட காதலை...

எனக்கும் அவளுக்கும் நடுவில் தொள்ளாயிரம் மைல்கள்..!(வசிப்பிடங்களின் தூர வித்தியாசம்) .....
எக்காரணத்தையும் கொண்டும் அவனை நீ சந்திக்க கூடாது....அவனிடம் கேள் அவனுக்கு எவ்வளவு நாட்கள் அல்லது மாதங்கள் தேவைப்படும் என்று....ஆனால் உன்னை விட ஒரு ரூபாயாவது அவன் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கேட்டு சத்தியம் வாங்கிக் கொண்டார் அவளின் தந்தை...

பார்க்க வருகிறேன் ஒரு முறை மனம் விட்டு பேசிவிடலாம்...சாத்தியக் கூறுகளின் அளவீடுகலயாவது அளக்க இந்த பேச்சு உதவும் என்று மன்றாடிய பொழுது ...கதறி அழுகிறாள்...தந்தையின் வாக்கை மீற முடியாதென்று....
சினம் கொண்டவளாக சீறுகிறாள் என் மீது...உனக்காக என் ஒட்டு மொத்த குடும்பத்தை எதிர்த்து நிற்கிறேன்....உன்னால் ஒரு நல்ல வேலை கிடைக்க எடுக்கும் முயற்சியை காட்டிலும் என்னை சந்திக்க மட்டுமே குறியாய் நிற்கிறாய்.....சதை வெறி பிடித்தவன் நீ என்றாள்....

எங்கு போவது யாரை பார்ப்பது...எவ்வாறு அத்தகைய சம்பளத்தை எட்ட முடியும் என்று எதுவுமே புரியவில்லை...யாரை பார்த்தாலும் பயம் தோன்ற ஆரம்பித்தது....எதை பார்த்தாலும் பயம்...வாழ்வில் எதற்கும் லாயக்கற்றவன் என்று எனக்கு நானே முடிவு செய்து கொள்ளலானேன்.....

நியூ யோர்க்கில் வசிக்கும் இதய சிறப்பு மருத்துவரான அவளின் முறைப்பையன் அவளை சந்திக்க வைக்க அவளின் தந்தை முயற்சித்து கொண்டிருந்தார்...ஒருபக்கம் இவளுக்கும் நிறைய அறிவுரை வழங்கப்பட்டு கொண்டிருந்தது அவளின் ஒட்டு மொத்த குடும்பத்தாரிடமிருந்து...

நாட்கள் ஓடிக் கொண்டே இருந்தது....மனதளவில் தோற்று போயிருந்ததால் நிறைய நேர்முக தேர்வுகளில் இறுதிக் கட்டத்தில் தோல்வியுற்று வெளியேறினேன்....
என் தேவதையும் யதார்த்தம் புரிந்து கொள்ள பழகியிருந்தாள்....

பின்புதான் ஒரு நாள் அவளை சந்தித்தேன் நேரில்( பழைய பதிவொன்றில் அதை பகிர்ந்திருக்கிறேன்)
அவள் என்னவள் இல்லை என்று தெரிந்த நொடி நொறுங்கித்தான் போனேன்...அன்று இரவு முழுவதும் குடித்து கொண்டே அழுது கொண்டிருந்தேன் தனியாக ............